For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அன்பழகனும் - கருணாநிதியும், பலரும் அறியாத ஒரு 'முஸ்தபா... முஸ்தபா...' கதை!

அன்பழகனும் - கருணாநிதியும் நட்புக்கோர் இலக்கணம். பலரும் அறியாத ஒரு 'முஸ்தபா... முஸ்தபா...' கதை!

|

காட்டூர், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு கிராமம். இங்கே வசித்து வந்த கல்யாண சுந்தரனார் - சுவர்ணம்பாள் தம்பதியினருக்கு 19-12-1922ம் ஆண்டு மகனாக பிறந்தவர் இராமையா.

இவர் அண்ணாமலை பல்கலைகழகத்தில் தமிழ் பிரிவில் முதுகலை பட்டம் முடித்தவர். மேலும், பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார். இவர் செய்த இப்பணியே பின்னாளில் தமிழகத்தின் பெரும் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தில் அனைவராலும் அன்புடன் பேராசிரியர் என்று இவரை அழைக்க காரணமானது.

ஆம்! இராமையா என்ற இயர் பெயர் கொண்டவர் தான் பின்னாளில் தமிழக அரசியல் களத்தில் அன்பழகனாக வளர்ந்தவர். இவருக்கும் - கருணாநிதி அவர்களுக்கும் இடையேயான நட்பு இந்த நூற்றாண்டின் சிறந்த நட்புகளில் ஒன்றாக தேர்வு செய்யும் அளவிற்கு பெரியது.

மேடைப் பேச்சில் துவங்கி, அரசியல், கழக பணிகளில் பயணித்து.. இன்று உடலும், மனதும் கொஞ்சம் தளர்ந்திருந்தாலும்.... வீரியம் குறையாத நட்புறவை பேணிக் காத்து வருகிறார்கள் பேராசிரியர் அன்பழகனும் - கருணாநிதி அவர்களும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1942!

1942!

அன்று அண்ணாதுரை அவர்கள் திருவாரூரில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொள்கிறார், ஆண்டு 1942. பலரும் தொடர்ந்து அடுத்தடுத்து பேசிக் கொண்டிருக்க... அடுத்ததாக பேச அறிஞர் அண்ணாதுரை அவர்களுக்கு அழைப்பு வருகிறது.

மைக் அருகே சென்ற அண்ணாதுரை அவர்கள், தான் பேசுவதற்கு முன் அண்ணாமலை பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் உங்கள் மத்தியில் உரையாற்றுவார் என ஒல்லியான தேகம் கொண்ட ஒருவரை மைக் முன்னே நிறுத்துகிறார். அவர் தான் இராமையா என்கிற அன்பழகன்.

மலர்ந்தது நட்பு!

மலர்ந்தது நட்பு!

அந்த திருவாரூர் நிகழ்ச்சியில் அண்ணாதுரை அவர்களுடன் மேடையில் இருந்த மற்றுமொரு கட்சி உறுப்பினர் மற்றும் மேடை பேச்சாளர் முத்துவேல் கருணாநிதி அவர்கள்.

அந்த மேடை பேச்சின் போதுதான், இவர்கள் இருவர் மத்தியிலும் நட்பு மலர்ந்தது. அன்று கைக்கோர்த்தவர்கள் இன்று வரை இணை பிரியா நண்பர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.

மாணவர் நேசன்!

மாணவர் நேசன்!

தனது இளம் வயதில் கைகளால் எழுதி விநியோகம் செய்யப்படும் மாணவர் நேசன் என்ற பத்திரிகை நடத்தி வந்தார் மு.கருணாநிதி அவர்கள். அப்போது மாணவர் தமிழ் மன்றம் அமைப்பை உருவாக்க திட்டமிட்டிருந்தார் மு.கருணாநிதி அவர்கள். அதற்காக விழா ஏற்பாடுகள் மற்றும் சில தலைவர்களையும் அழைத்திருந்தார். ஆனால், கருணாநிதி எதிர்பார்த்தபடி யாரும் விழாவில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை.

அரவணைத்த கரங்கள்!

அரவணைத்த கரங்கள்!

இதனால் மிகுந்த மன வருத்திற்கு ஆளானர் மு.கருணாநிதி. இதை அறிந்த அன்பழகன் அவர்களும், அவரது தோழர் மதியழகன் அவர்களும் கருணாநிதியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். இந்த காலக்கட்டத்தில் தான் கருணாநிதி - அன்பழகன் நட்பு வலுமைபெற்றது என கூறப்படுகிறது.

பிரிந்தவர்கள்!

பிரிந்தவர்கள்!

கருணாநிதிக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்தில் இருந்த பலர் அவரால பல சூழல்களில் பிரிந்தனர். சிலர் அரசியல் ரீதியாக அவருக்கு போட்டியாளராகவும், எதிரியாகவும் உருவாகினார்கள். உதாரணமாக கூறவேண்டும் என்றால், நெடுஞ்செழியன், எம்ஜிஆர், வைகோ என பலரை குறிப்பிடலாம். ஆனால், எந்தவொரு காலக்கட்டத்திலும், இக்கட்டான சூழ்நிலையிலும் தன் நண்பன் கருணாநிதியை விட்டுவிலாகாத ஒரே நண்பர் அன்பழகன் அவர்கள் தான்.

குடும்பம்!

குடும்பம்!

அரசியல், கட்சி என்பதை தாண்டி ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள் அன்பழகன் - கருணாநிதி குடும்பத்தார். கருணாநிதியை காட்டிலும் ஒரு வயது மூத்தவர் அன்பழகன். எதிர்பாராத சூழ்நிலையில் மு.கருணாநிதி அவர்கள் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து, நடைத் தளர்ந்து போயினும், உதவியாளர்கள் கைத்தாங்கலாக அழைத்து வர, நலம் விசாரித்து நண்பன் அருகில் இருக்க வந்திருந்தார் அன்பழகன்.

பொது செயலாளர்!

பொது செயலாளர்!

திராவிட முன்னேற்ற கழகத்தில் தொடர்ந்து ஒன்பது முறை பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்சியை நல்வழியில் நடத்தி வருவதில் கருணாநிதி அவர்களுக்கு பக்க பலமாக இருப்பவர் அன்பழகன். கட்சி பொறுப்புகளை தாண்டி இவர் சட்டமன்றம் மற்றும் லோக்சபா உறுப்பினராகவும் பதவி வகித்திருக்கிறார்.

இல்லறம்!

இல்லறம்!

பேராசிரியர் அன்பழகனின் முதல் மனைவி வெற்றி செல்வி. இவர் உடல்நலம் குன்றி இறந்த பிறகு, சாந்தகுமாரி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார் அன்பழகன். இந்த தம்பதியினருக்கு புருஷோத்தமராஜ், ராஜேந்திர பாபு மற்றும் ஜெயக் குமாரி என்ற பிள்ளைகள் உண்டு. இதில் சாந்த குமாரியும், ராஜேந்திர பாபுவும் இறந்துவிட்டனர்.

சில வருடங்களுக்கு முன் மறைந்த மகன் ராஜேந்திர பாபுவின் மனைவி தனலட்சுமி என்பவர் அன்பழகன் குடும்பத்தாருக்கு எதிராக சொத்து பிரச்சனை வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts to Know About Kalyanasundaranar Anbazhagan and His Friendship with Muthuvel Karunanidhi!

Facts to Know About Kalyanasundaranar Anbazhagan and His Friendship with Muthuvel Karunanidhi!
Desktop Bottom Promotion