Just In
- 31 min ago எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- 34 min ago புற்றுநோய், இதய நோய் அபாயத்தை குறக்கனுமா? இதோ இந்த பழங்களை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- 4 hrs ago நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
Don't Miss
- Movies மார்வெல் ஸ்டூடியோஸின் அடுத்த படம்.. அதிரடியாக வெளியான Deadpool & Wolverine ட்ரெய்லர்
- News ஜெய் ஸ்ரீராம் போலோ.. "பிஸ்னஸ் மேன்" கையை தூக்கிய கேப்பில்! ரூ.36000 அபேஸ்! பாஜக பிரச்சாரத்தில் திக்
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மகளை டேட்டிங் செய்பவர்களுக்கு ஷாருக்கான் விதித்த முக்கியமான விதிமுறை!
மகளுக்கு 18 வயது ஆனதைத் தொடர்ந்து தன் மகளை டேட்டிங் செய்பவர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் விதித்திருக்கிறார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.
பாலிவுட் பிரபலம் ஷாருக்கான் தன்னுடைய திரைப்படங்களுக்கு கொடுக்கிற அதே முக்கியத்துவத்தை தன் குடும்பத்திற்கும் கொடுக்கும் வழக்கமுடையவர். தன் பங்களிப்பை குடும்பத்திற்கு தவறாமல் கிடைக்கும்படி பார்த்துக் கொள்வார். இவரது மூன்று குழந்தைளான ஆர்யன், சுஹானா மற்றும் அப்ரம்வுடன் நேரம் செலவிடுவதை அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறார் ஷாருக்கான்.
குழந்தைகள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கும் தந்தையைவிட அவர்களுக்கு எது வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்று உணர்த்தும் தந்தையாக இருக்கிறார் ஷாருக். இப்போதிருக்கும் குழந்தைகள் மொபைல் போனுக்கு அடிமையாகி கேம்ஸ்களில் மூழ்கி கிடக்கக்கூடாது என்று நினைத்த ஷாருக் மகன் அப்ராமின் ஐந்தாவது பிறந்தநாளின் போது அவருக்கு அவருக்கு ட்ரீ ஹவுஸை பரிசளித்தார்.
ஸ்ட்ரிக்ட் அப்பா :
திரையில் கூலாக தெரியும் ஷாருக் குழந்தைகள் விஷயத்தில் மிகவும் ஸ்ட்ரிக்ட். ஷாருக்கின் மகள் சுஹானாவிற்கு தற்போது பதினெட்டு வயது பூர்த்தியாகியிருக்கிறது. இந்நிலையில் ஒரு பத்திரிக்கை பேட்டியின் போது சுஹானாவை டேட்டிங் செய்ய விரும்புபவர்களுக்கு கண்டிப்பான முறையில் தான் விதிக்கும் ரூல்ஸ் என்ன என்பதை விளக்கியிருக்கிறார்.
சுஹானாவை டேட்டிங் செய்ய விரும்பும் இளைஞன் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் இது விளையாட்டிற்கு அல்ல என்றும் எச்சரித்திருக்கிறார் இந்த ஹீரோ!
வேலை :
உனக்கு என்று வேலை கண்டிப்பாக இருக்க வேண்டும். முதலில் படித்து உனக்கான கனவை அடைந்த பிறகு தான் காதல்,டேட்டிங் போன்ற விஷயத்திற்குள் உங்களின் கவனத்தை திருப்ப வேண்டும். அதை விடுத்து படிக்கும் போதே டேட்டிங் எல்லாம் நோ.
சுஹானாவை டேட்டிங் செய்வதற்கு முன்னால் உனக்கான கனவை,லட்சியத்தை அடைந்திருக்க வேண்டும்.
வேண்டாம் :
எக்காரணத்தை கொண்டு சுஹானாவை என்னை நீ காதலித்தாக வேண்டும் என்று வர்புறுத்தக்கூடாது. வேண்டாம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அதை விட அந்த வார்த்தைகளை புரிந்து கொள்ள வேண்டும்.
டேட்டிங் செல்வது இருவருக்கும் விருப்பமானதாக இருக்கவேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன்.
நான் இருப்பேன் :
ஒரு தந்தையாக எங்கும் இருப்பேன் என்பதை நீ மறந்துவிடக்கூடாது. சுஹானாவிற்கு எதிராக, அல்லது உங்களின் அன்பை சிறுமைபடுத்தும் விதமாக என்ன செய்தாலும் அதை தட்டிக் கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது.
அதனால் தவறு செய்ய நினைக்கும் போதெல்லாம் எங்கும் நானிருப்பேன் என்பதை மறந்துவிட வேண்டாம்.
புகழ் :
பணத்திற்காகவோ இப்போதிருக்கும் புகழுக்கோ மயங்காதவனாக இருக்கும். இவை இரண்டுமே எப்போது வேண்டுமானாலும் வரும் போகும். சுஹானாவின் அன்பினை மட்டும் விரும்புபவராக இருக்க வேண்டும்.
அவள் என் இளவரசி :
சுஹானாவை நீ டேட்டிங் செல்வதால் மட்டும் அவளை வென்றுவிட்டதாய் ஒரு போதும் நினைத்துவிடாதே.... ஏனென்றால் சுஹானா எப்போதுமே எனக்கு இளவரசி தான்.
இளவரசியை எப்படி நடத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.
சிறை :
என் இளவரசிக்காக நான் சிறை செல்லவும் தயங்கமாட்டேன். ஒரு தந்தையாக என் குழந்தைகளுக்கு எல்லாமே சிறந்ததாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவற்றில் சிறு பிழை நடந்தால் கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.
எது கொடுக்கிறாயோ :
சுஹானாவிடம் நீ எது கொடுக்கிறாயோ அதையே நான் உனக்கு திருப்பிக் கொடுப்பேன். அவளிடம் அன்பும், சந்தோசத்தையும்,மரியாதையையும் கொடுத்தால் அதுவே உனக்கு கிடைக்கும்.
அவளை வருத்தப்படச் செய்தால் நீயும் வருத்தப்பட வேண்டியிருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.