Just In
- 2 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 8 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 9 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 9 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
காதலில் வரும் சண்டைய தவிர்க்க அவசியமான ஒன்று என்ன தெரியுமா?
காதலிடம் பச்சாதபம் கொள்வது எவ்வளவு அவசியமானது என்பதற்கு சில காரணங்கள்.
உறவில் இருப்பவர்களுக்கு தன் இணை மீதான பச்சாதபம் மிகவும் அவசியம் ஒருவரை ஒரு புரிந்து கொள்வதற்கு இது முக்கிய இடம் வகிக்கிறது. நம்மோ நம்முடைய குணங்களோ நம்முடைய எண்ணங்களோடு நம்முடைய விருப்பங்களோடு போட்டியிடுபவர்கள் மீது எப்போதுமே நமக்கு வெறுப்பு இருக்கும்.
இதே உறவில் வெறுப்பு ஏற்பட்டாலும் இணை மீது பச்சாதாபம் வைத்திருப்பது அவசியம். ஒருவர் மீது ஒருவர் கருணை காட்டிக் கொள்வதைக் கூட இப்படிச் சொல்லலாம்.
சண்டைகள் :
காரணங்களின்றி சண்டை வருவது ஆச்சரியமில்லை. ஆனால் அவற்றை சரி செய்வது என்பது அத்தியாவசியமானது. சின்ன சின்ன விஷயத்தை எல்லாம் எளிதாக எடுத்துக் கொள்வதற்கு அடித்தளமாய் இருப்பது இணை மீது நீங்கள் கொண்டிருக்கும் பச்சாதாபம் தான்.
கவனம் :
இணையை பச்சாதாபத்தோட அணுகினால் அவரை கவனத்துடன் கையாள முடியும். அவருக்கு தேவையான கவனத்தையும் அன்பையும் உங்களால் கொடுக்க முடியும்.
காதலில் உங்களுடைய இருப்பதைத் தான் உங்கள் இணை அதிகம் விரும்புவார்கள் என்பதால் காதலில் பச்சாதாபம் கொண்டிருப்பது அவசியம்.
பாசிட்டிவ் :
உங்கள் இணை மீது நீங்கள் கொண்டிருக்கும் பச்சாதாபம் இணைக்கு மட்டுமல்ல உங்களுக்கும் அது பாசிட்டிவாகத்தான் இருக்கும். அவர்கள் செய்யும் தவறுகளை எளிதாக மன்னிக்க முடியும். தெரியாமல் செய்துவிட்டார்கள் என்று உங்கள் மூளை நம்பும். குழந்தை தவறு செய்யும் போது நாம் பெரிதாக தண்டிப்பதில்லை காரணம் குழந்தை தெரிந்தே இந்த தவறை செய்திருக்காது என்று நாம் நம்புகிறோம் அதே போல தான் இங்கேயும்.
கடந்து செல்வோம் :
எதையும் எளிதாக கடந்து வர வைத்திடும். இணை மீது நீங்கள் கொண்டிருக்கும் பச்சாதாபம் என்பது இருவருக்குள்ளும் சண்டை ஏற்படாத வண்ணம் உங்களை பாதுகாத்திடும்.
பொறுமை :
எந்த செயலுக்கும் முன்யோசனையின்றி சட்டென முடிவெடுப்பதில் தான் பல்வேறு சங்கடங்கள் ஏற்படுகிறது. கோபமாக அப்படி பேசிவிட்டேன் என்று பின்னால் மன்னிப்பு கேட்டு அலைவதுண்டு. ஆனால் இந்த பச்சாதாபம் அப்படியல்ல, கோபப்பட்டு வார்த்தைகளை கொட்டுவதற்கு முன்னால் உங்களை யோசிக்க வைக்கும். இதனால் பல பிரச்சனைகளில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம்.
செயல் :
உறவுமுறையில் மிகவும் முக்கியமானது இது. இணையின் மீது பச்சாதாபம் கொள்வது உங்கள் காதலை வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை. இணை கோபமாக இருக்கிறார் என்றால் அதற்கான காரணம் என்ன? என்று நீங்கள் யூகிக்க முடியும். உங்களை நீங்களே பரிசோதித்துக் கொள்கிற செல்ஃப் அனாலிசிஸ்க்கு உதவிடும்.