Just In
- 57 min ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 3 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 3 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 4 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சரவண பவன் கைமா இட்லி
இரவில் செய்த இட்லி மீதம் உள்ளதா? அப்படியானால், அதனை தூக்கிப் போட வேண்டாம். மாறாக அதனை காலையில் எழுந்து சரவண பவன் ஸ்பெஷலான கைமா இட்லியை செய்யுங்கள். இந்த கைமா இட்லியானது குழந்தைகளால் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் மதிய வேளையில் சாப்பிடுவதற்கு கூட ஏற்றதாக இருக்கும்.
இங்கு அந்த சரவண பவன் கைமா இட்லியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
இட்லி
-
6
வெங்காயம்
-
1
(பொடியாக
நறுக்கியது)
இஞ்சி
பூண்டு
பேஸ்ட்
-
2
டீஸ்பூன்
தக்காளி
-
2
(அரைத்தது)
பச்சை
பட்டாணி
-
1/4
கப்
குடைமிளகாய்
-
1
(நறுக்கியது)
மிளகாய்
தூள்
-
2
டீஸ்பூன்
மல்லித்
தூள்
-
1
டீஸ்பூன்
கரம்
மசாலா
-
2
டீஸ்பூன்
கொத்தமல்லி
-
சிறிது
(நறுக்கியது)
எலுமிச்சை
சாறு
-
1
டேபிள்
ஸ்பூன்
உப்பு
-
தேவையான
அளவு
எண்ணெய்
-
பொரிப்பதற்கு
தேவையான
அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய்
-
2
டீஸ்பூன்
சோம்பு
பொடி
-
1
டீஸ்பூன்
கறிவேப்பிலை
-
சிறிது
பச்சை
மிளகாய்
-
1
(பொடியாக
நறுக்கியது)
செய்முறை:
முதலில் இட்லிகளை துண்டுகளாக்கிக் கொண்டு, வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த எண்ணெயில் இட்லிகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்க வேண்டும்.
பின்பு வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அரைத்த தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, பச்சை வாசனை போக நன்கு கிளறி விட வேண்டும்.
அதற்குள் பட்டாணியை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு வேக வைத்த பட்டாணி மற்றும் குடைமிளகாயை வாணலியில் போட்டு கிளறி, பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் பொரித்து வைத்துள்ள இட்லியை வாணலியில் போட்டு நன்கு கிளறி இறக்கி, கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறினால், சரவண பவன் கைமா இட்லி ரெடி!!!
Image Courtesy: sharmispassions