Just In
- 49 min ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 2 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 10 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Don't Miss
- News கட்சியையே உடைக்கும் அளவிற்கு கோபம்.. வேலையை தொடங்கிய முக்கிய புள்ளி.. ஆட்டம் காணும் "அந்த" கட்சி?
- Finance கோடக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் சரிவு.. முதலீட்டாளர்கள் பெரும் சோகம்.. டார்கெட் விலை குறைந்தது!!
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பசலைக்கீரை சாம்பார்
உங்களுக்கு கீரையைக் கொண்டு கடைந்தோ அல்லது பொரியல், கூட்டு செய்தோ சாப்பிட்டு அலுத்துப் போயிருந்தால், அந்த கீரையைக் கொண்டு சாம்பார் செய்து சுவையுங்கள்.
கீரைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கீரையை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக நோயின்றி இருக்கும். உங்களுக்கு கீரையைக் கொண்டு கடைந்தோ அல்லது பொரியல், கூட்டு செய்தோ சாப்பிட்டு அலுத்துப் போயிருந்தால், அந்த கீரையைக் கொண்டு சாம்பார் செய்து சுவையுங்கள். இது நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். அதுவும் பசலைக்கீரை கொண்டு சாம்பார் செய்தால் சூப்பராக இருக்கும்.
உங்களுக்கு பசலைக்கீரை கொண்டு சாம்பார் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பசலைக்கீரை சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பசலைக்கீரை - 2-3 கப் (நறுக்கியது)
* துவரம் பருப்பு - 1/2 கப்
* கருப்பு சுண்டல் - 1/2 கப் (ஊற வைத்தது)
* சின்ன வெங்காயம் - 10-12 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* சாம்பார் பவுடர் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* புளி சாறு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
* நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் ஊற வைத்துள்ள சுண்டலையும் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் பசலைக்கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கி, பின் தக்காளியையும் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள பசலைக்கீரை மற்றும் சாம்பார் பவுடர் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின் வேக வைத்துள்ள துவரம் பருப்பு மற்றும் கருப்பு சுண்டலை சேர்த்து, ஒரு கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் புளிச்சாறு ஊற்றி, ஒரு கொதி விட்டு இறக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சாம்பாரில் ஊற்றி கிளறினால், பசலைக்கீரை சாம்பார் தயார்.
Image Courtesy: naliniscooking