Just In
- 1 min ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 1 hr ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 3 hrs ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 3 hrs ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
Don't Miss
- News வெப்ப அலைக்கு பேரு என்ன தெரியுமா? தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட்! மேற்கு வங்கத்திற்கு ரெட் அலர்ட்!
- Movies என்னது கங்குவா பட்ஜெட் 350 கோடி ரூபாயா?.. அடேங்கப்பா தலையே சுத்துதே
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சபுதனா கிச்சடி ரெசிபி :சகோ கிச்சடி ரெசிபி எப்படி செய்வது எனத் தெரியுமா?
சபுதனா கிச்சடி ஒரு புகழ்பெற்ற மகாராஷ்டிர ரெசிபி ஆகும்.மகாராஷ்டிர மாநிலத்தில் கடவுளுக்காக விரதம் இருக்கும் போது இந்த கிச்சடியை தான் தங்களது காலை உணவாக எடுத்துக் கொள்வர்.
சபுதனா கிச்சடி ஒரு புகழ்பெற்ற மகாராஷ்டிர ரெசிபி ஆகும். இது எல்லா வீடுகளிலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகவும் உள்ளது. இந்த கிச்சடி ஐவ்வரிசி (சபுதனா), உருளைக்கிழங்கை வைத்தும் மற்றும் நிலக்கடலை போன்றவற்றை பயன்படுத்தியும் காரசாரமாக செய்யப்படும் உணவாகும். இந்த விரத் வாலா சபுதனா கிச்சடி விரதத்தின் போது தயாரித்து சாப்பிடும் ரெசிபி ஆகும்.
உருளைக்கிழங்குடன் சேர்க்கும் காரசாரமான மசாலா பொருட்களும் புளிப்பு சுவையுடன் கூடிய எலும்மிச்சை சாறும் தித்திக்கும் பவுடர் சுகரும் இப்படி எல்லா சுவையும் கலந்து உங்கள் நாவை சொட்டை போட வைத்து விடும்.
இந்த ஐவ்வரிசி கிச்சடியை மெல்ல மெல்ல ருசித்து சாப்பிட்டு அதனுடன் சேர்க்கப்பட்ட நிலக்கடலையை கொரித்து சாப்பிடும் போது கிடைக்கும் ருசியே தனி தான்.
இதில் உள்ள ஒரு முக்கியமான ட்ரிக், சகோ கிச்சடி செய்யும் போது ஐவ்வரிசியை சரியான பதத்தில் சமைப்பது தான். இது எளிதாக செய்யக்கூடிய ரெசிபி ஆகும். மகாராஷ்டிர மாநிலத்தில் கடவுளுக்காக விரதம் இருக்கும் போது இந்த கிச்சடியை தான் தங்களது காலை உணவாக எடுத்துக் கொள்வர்.
இந்த ஐவ்வரிசி கிச்சடியை உங்கள் வீட்டில் செய்வதற்கு முன் அதற்கான செய்முறை விளக்க முறைகளையும் வீடியோ மற்றும் படத்துடனும் காணலாம்.
சபுதனா கிச்சடி ரெசிபி வீடியோ
Recipe By: மீனா பந்தரி
Recipe Type: முக்கிய உணவு
Serves: 2-3
-
- ஐவ்வரிசி - 1கப்
- தண்ணீர் - 1கப் + அலசுவதற்கு
- ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
- சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்.
- பச்சை மிளகாய் (நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை - 6-10
- வேக வைத்த உருளைக்கிழங்கு (தோலுரித்து சதுர வடிவில் வெட்டி கொள்ளவும்) - 2
- வறுத்த நிலக்கடலை(கரகரப்பான அரைவை பதத்தில் ) - 3/4கப்
- பொடியாக்கப்பட்ட சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
- லெமன் ஜூஸ் - 1
- உப்பு - தேவைக்கேற்ப
- கொத்தமல்லி இலைகள்(நறுக்கியது) - அலங்கரிக்க
- வறுத்த நிலக்கடலை - அலங்கரிக்க
-
1.ஐவ்வரிசியை எடுத்து ஒரு சல்லடையில் வைத்து நன்றாக தண்ணீர் விட்டு அதன் ஸ்டார்ச் போகும் வரை அலச வேண்டும்
2. அதை பிறகு ஒரு பெளலுக்கு மாற்றி ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்
3. கிட்டதட்ட 6-8 மணிநேரம் ஊற வைத்து மீதமுள்ள தண்ணீரை வடித்து விடவும்.
4. கொஞ்சம் ஐவ்வரிசியை எடுத்து நசுக்கி பார்த்தால் அது நசுங்க வேண்டும். இதுவே நன்றாக ஊறினதுக்கான அடையாளம்.
5. பிறகு பவுடராக்கப்பட்ட சர்க்கரையை வறுத்த நிலக்கடலையுடன் சேர்க்க வேண்டும்
6. பிறகு அதனுடன் லெமன் ஜூஸை பிழிந்து நன்றாக கலந்து கொள்ளவும்
7. ஒரு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்
8. சீரகம் சேர்த்து வேக வைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்றாக கலக்கி 2 நிமிடங்கள் சமைக்க வேண்டும்
9. பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
10. பிறகு ஊற வைத்த ஐவ்வரிசியை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்
11. பிறகு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்
12. ஒரு மூடியை கொண்டு பாத்திரத்தை மூடி 7-8 நிமிடங்கள் சமைக்க வேண்டும்
13. நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் வறுத்த நிலக்கடலையை கொண்டு அலங்கரிக்கவும்.
14. நாவை ஊற வைக்கும் சுடச்சுட ஐவ்வரிசி கிச்சடி ரெசிபி ரெடி
- 1. ஐவ்வரிசியை ஊற வைக்க அது மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்தால் போதும். அதிகளவு தண்ணீர் சேர்க்கும் போது ஐவ்வரிசி குழைவதற்கு வாய்ப்புள்ளது.
- 2. ஐவ்வரிசியை சமைக்கும் போது சரியான பதம் கிடைக்க வேண்டும் என்றால் அதை சரியான முறையில் ஊற வைக்க வேண்டும்.
- 3. விரதத்திற்காக இதை சமைக்கும் போது ராக் சால்ட் (பாறை வடிவ உப்பை) பயன்படுத்தவும்.
- பரிமாறும் அளவு - 1 பெளல்
- கலோரிகள் - 486 கலோரிகள்.
- கொழுப்பு - 20 கிராம்
- புரோட்டீன் - 8 கிராம்
- கார்போஹைட்ரேட் - கார்போஹைட்ரேட்
- சுகர் - 5 கிராம்.
- நார்ச்சத்து - 5 கிராம்
- இரும்புச் சத்து - 12%
- விட்டமின் சி - 39%
படிப்படியான செய்முறை விளக்கம் :சபுதனா கிச்சடி ரெசிபி எப்படி செய்வது
1. ஐவ்வரிசியை எடுத்து ஒரு சல்லடையில் வைத்து நன்றாக தண்ணீர் விட்டு அதன் ஸ்டார்ச் போகும் வரை அலச வேண்டும்
2. அதை பிறகு ஒரு பெளலுக்கு மாற்றி ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்
3. கிட்டதட்ட 6-8 மணிநேரம் ஊற வைத்து மீதமுள்ள தண்ணீரை வடித்து விடவும்.
4.கொஞ்சம் ஐவ்வரிசியை எடுத்து நசுக்கி பார்த்தால் அது நசுங்க வேண்டும். இதுவே நன்றாக ஊறினதுக்கான அடையாளம்.
5. பிறகு பவுடராக்கப்பட்ட சர்க்கரையை வறுத்த நிலக்கடலையுடன் சேர்க்க வேண்டும்
6. பிறகு அதனுடன் லெமன் ஜூஸை பிழிந்து நன்றாக கலந்து கொள்ளவும்
7.ஒரு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்
8. சீரகம் சேர்த்து வேக வைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்றாக கலக்கி 2 நிமிடங்கள் சமைக்க வேண்டும்
9. பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
10. பிறகு ஊற வைத்த ஐவ்வரிசியை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்
11. பிறகு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்
12. ஒரு மூடியை கொண்டு பாத்திரத்தை மூடி 7-8 நிமிடங்கள் சமைக்க வேண்டும்
13. நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் வறுத்த நிலக்கடலையை கொண்டு அலங்கரிக்கவும்.