Just In
- 17 min ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 1 hr ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 1 hr ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- 2 hrs ago தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
Don't Miss
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர்
வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது தான் பாலக் பன்னீர். இது பன்னீர் மற்றும் பாலக் கீரை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சுவையான சைடு டிஷ். இது சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது தான் பாலக் பன்னீர். இது பன்னீர் மற்றும் பாலக் கீரை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சுவையான சைடு டிஷ். இது சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு இன்று இரவு சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வது என்று யோசனை இருந்தால், இந்த பாலக் பன்னீர் செய்யுங்கள். அதுவும் ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் பாலக் பன்னீர் செய்து சாப்பிடுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு ஹோட்டலில் சாப்பிட்ட ஒரு அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இப்போது ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் ரெசிபியின் எளிய செய்முறைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாலக் - 4 கப்
* வெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 4
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 2 (அரைத்துக் கொள்ளவும்)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* பன்னீர் - 200 கிராம்
* பிரஷ் க்ரீம் - 1/2 கப்
* உலர்ந்த வெந்தயக் கீரை - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். பின் அதில் பாலக் கீரையைப் போட்டு 2 நிமிடங்கள் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு, கீரையை பிளெண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயைப் போட்டு உருகியதும், சீரகம், பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து கிளறி, 5 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் மிளகாய் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* அடுத்து, அரைத்து வைத்துள்ள பாலக் கீரையை சேர்த்து நன்கு கிளறி விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி 1-2 நிமிடம் பன்னீரை வேக வைத்து வெந்ததும், காய்ந்த வெந்தய கீரை மற்றும் க்ரீம் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் தயார்.
குறிப்பு:
* பாலக் கீரையை அதிகமாக வேக வைத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால், அதன் பச்சை நிறம் போய்விடும்.
* கடைகளில் விற்கப்படும் பன்னீரைப் பயன்படுத்துபவராக இருந்தால், அதை சிறு துண்டுகளாக வெட்டி, வெதுவெதுப்பான நீரில் போட்டு பத்து நிமிடம் ஊற வைத்து, பின் பயன்படுத்துங்கள்.
* ஒருவேளை உங்களிடம் க்ரீம் இல்லையென்றால், பாலில் சிறிது சோளமாவு சேர்த்து கலந்து சேர்த்துக் கொள்ளுங்கள்.
* பாலக் கீரையை சேர்த்த பின், மூடி வைக்காதீர்கள். இல்லாவிட்டால், அதன் நிறம் மாறிவிடும்.
Image Courtesy: yummytummyaarthi