Just In
- 5 min ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 1 hr ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 1 hr ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- 3 hrs ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
Don't Miss
- Movies Blue sattai Maaran: தற்போதைக்கு திருந்திய.. விஜய் ஆண்டனி கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி!
- News எங்க ஏஜெண்டை துரத்திட்டு "கள்ள ஓட்டு" போட்டிருக்காங்க.. மறு வாக்குப்பதிவு தேவை: தமிழிசை பரபர புகார்!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
ராகி பக்கோடா
மாலை வேளையில் பக்கோடா செய்து சாப்பிட ஆசையாக உள்ளதா? ஆனால் உங்கள் வீட்டில் பக்கோடா செய்வதற்கு தேவையான கடலை மாவு இல்லையா? வீட்டில் ராகி மாவு இருந்தால், அதைக் கொண்டே எளிய முறையில் பக்கோடா செய்யலாம்.
மாலை வேளையில் பக்கோடா செய்து சாப்பிட ஆசையாக உள்ளதா? ஆனால் உங்கள் வீட்டில் பக்கோடா செய்வதற்கு தேவையான கடலை மாவு இல்லையா? கவலையை விடுங்கள். வீட்டில் ராகி மாவு இருந்தால், அதைக் கொண்டே எளிய முறையில் பக்கோடா செய்யலாம். பொதுவாக ராகி உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக ராகி ஈறுகளுக்கு நல்லது என்பதால், அடிக்கடி இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், ஈறுகள் வலுவடையும்.
ராகி பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். இப்போது ராகி பக்கோடாவை எப்படி செய்வதென்று, அதன் எளிமையான செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ராகி மாவு - 1 கப்
* சாம்பார் வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 5
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைகேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம், பொடியாக நறுக்கிய வரமிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது நீர் ஊற்றி, உதிரி உதிரியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள கலவையை, எண்ணெயில் உதிர்த்து விட்டு, பொரித்து எடுத்தால், சுவையான ராகி பக்கோடா ரெடி!
குறிப்பு:
* விருப்பமுள்ளவர்கள் ராகி பக்கோடா மாவுடன் சிறிது பொட்டுக்கடலையும் சேர்த்துக் கொள்ளலாம்.
* அதேப் போல் கொத்தமல்லியையும் ராகி பக்கோடா தயாரிக்கும் போது சேர்த்துக் கொள்ளலாம். இது இன்னும் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.