Just In
- 9 min ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 26 min ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 1 hr ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 3 hrs ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
Don't Miss
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Movies அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பூசணிக்காய் தால்
பூசணிக்காயைக் கொண்டு பொரியல் தான் செய்திருப்பீர்கள். ஆனால் இந்த பூசணிக்காயைக் கொண்டு தால் செய்யலாம் என்பது தெரியுமா? இந்த தால் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
பூசணிக்காயில் வைட்டமின் ஏ மற்றும் பிற வைட்டமின்கள் ஏராளமான அளவில் உள்ளது. அதோடு பூசணிக்காய் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும். இதில் கலோரிகள் குறைவாகவும், பிற சத்துக்கள் அதிகமாகவும் நிறைந்துள்ளதால், எடை இழப்பை ஊக்குவிக்கும். பூசணிக்காயைக் கொண்டு பொரியல் தான் செய்திருப்பீர்கள். ஆனால் இந்த பூசணிக்காயைக் கொண்டு தால் செய்யலாம் என்பது தெரியுமா? இந்த தால் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
கீழே பூசணிக்காய் தால் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1/4 கப்
* பாசிப் பருப்பு - 1/4 கப்
* மைசூர் பருப்பு - 1/4 கப்
* இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* பட்டை - 1 இன்ச்
* பிரியாணி இலை - 1
* தக்காளி - 2 (நறுக்கியது)
* மஞ்சள் பூசணி/பரங்கிக்காய் - 250 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 4 பல்
* வரமிளகாய் - 2
செய்முறை:
* முதலில் அனைத்து பருப்புக்களையும் நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் பூசணிக்காயை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் கழுவிய பருப்புக்களைப் போட்டு, அத்துடன் இஞ்சி, பச்சை மிளகாய், பட்டை, பிரியாணி இலை, தக்காளி, பூசணிக்காய், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, அதில் 2 1/2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், சீரகம், பூண்டு மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, பருப்புடன் சேர்த்து கிளறினால், சுவையான பூசணிக்காய் தால் தயார்.
Image Courtesy: archanaskitchen