Just In
- 1 min ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 30 min ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 2 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 3 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
Don't Miss
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
சிம்பிளான... செட்டிநாடு இறால் குழம்பு
உங்களுக்கு இறால் ரொம்ப பிடிக்குமா? விடுமுறை நாட்களில் இறாலை சுவையாக சமைத்து சாப்பிட ஆசையா? அப்படியெனில் செட்டிநாடு ஸ்டைல் இறால் குழம்பை செய்து சுவையுங்கள். அதன் செய்முறையை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
சரி, இப்போது அந்த செட்டிநாடு இறால் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
இறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது)
வறுத்து அரைப்பதற்கு...
சோம்பு
-
1
டீஸ்பூன்
சீரகம்
-
1
டீஸ்பூன்
ஓமம்
-
1/2
டீஸ்பூன்
பட்டை
-
2
துண்டு
மிளகு
-
1
டீஸ்பூன்
கிராம்பு
-
4
ஏலக்காய்
-
4
வெந்தயம்
-
1/4
டீஸ்பூன்
கசகசா
-
1
டேபிள்
ஸ்பூன்
மல்லி
-
1
டேபிள்
ஸ்பூன்
வரமிளகாய்
-
2-4
குழம்பிற்கு...
சின்ன
வெங்காயம்
-
20
(பொடியாக
நறுக்கியது)
தக்காளி
-
2
(நறுக்கியது)
பச்சை
மிளகாய்
-
2
மிளகாய்
தூள்
-
1
டீஸ்பூன்
மல்லித்
தூள்
-
2
டீஸ்பூன்
மஞ்சள்
தூள்
-
1
டீஸ்பூன்
புளிச்சாறு
-
1
டேபிள்
ஸ்பூன்
கடுகு
-
1
டீஸ்பூன்
பெருங்காயத்
தூள்
-
1/4
டீஸ்பூன்
கறிவேப்பிலை
-
சிறிது
எண்ணெய்
-
1/4
கப்
தண்ணீர்
-
தேவையான
அளவு
உப்பு
-
தேவையான
அளவு
செய்முறை:
முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒரு வாணலியில் போட்டு வறுத்து இறக்கி, குளிர வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு அதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, பின் மசாலா பொடிகள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.
அடுத்து அத்துடன் உப்பு மற்றும் புளிச்சாறு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின் அதில் இறாலை சேர்த்து பிரட்டி, 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், செட்டிநாடு இறால் குழம்பு ரெடி!
Image Courtesy: yummytummyaarthi