Just In
- 1 hr ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 2 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 2 hrs ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 3 hrs ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
Don't Miss
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
செட்டிநாடு நெத்திலி கருவாட்டு குழம்பு
உங்களுக்கு கருவாடு ரொம்ப பிடிக்குமா? அதிலும் கருவாட்டை குழம்பு செய்து சாப்பிட பிடிக்குமா? அப்படியெனில் நம்ம செட்டிநாடு ஸ்டைல் நெத்திலி கருவாட்டு குழம்பை செய்து சுவைத்துப் பாருங்கள். இது செய்வது மிகவும் சுலபம் மற்றும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாகவும், நல்ல மணத்துடனும் இருக்கும்.
சரி, இப்போது அந்த செட்டிநாடு ஸ்டைல் நெத்திலி கருவாட்டு குழம்பின் எளிய செய்முறையைக் காண்போம். அதைப் படித்து முயற்சித்து, சுவை எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
நெத்திலி
கருவாடு
-
40-50
கடுகு
-
1
டீஸ்பூன்
சீரகம்
-
1
டீஸ்பூன்
உளுத்தம்
பருப்பு
-
1
டீஸ்பூன்
வரமிளகாய்
-
2
கறிவேப்பிலை
-
சிறிது
சின்ன
வெங்காயம்
-
15-20
(தோலுரித்தது)
தக்காளி
-
2
(நறுக்கியது)
மிளகாய்
தூள்
-
1
டேபிள்
ஸ்பூன்
மல்லித்
தூள்
-
2
டேபிள்
ஸ்பூன்
மஞ்சள்
தூள்
-
1
டீஸ்பூன்
புளிச்சாறு
-
3
டேபிள்
ஸ்பூன்
மாங்காய்
-
1
(நீளமாக
நறுக்கியது)
உப்பு
-
தேவையான
அளவு
சர்க்கரை
-
1
டீஸ்பூன்
எண்ணெய்
-
4
டேபிள்
ஸ்பூன்
தண்ணீர்
-
தேவையான
அளவு
செய்முறை:
முதலில் நெத்திலி கருவாடை சுடுநீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டி அதன் தலையை நீக்கிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலி அல்லது மண் சட்டியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்பு அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு அதில் மாங்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மாங்காய் பாதியாக வெந்ததும், உப்பு, மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை ஊற்றி, எண்ணெய் தனியாக பிரியும் வரை குழம்பை நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின் கருவாட்டை சேர்த்து 5-10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து, சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கினால், செட்டிநாடு நெத்திலி கருவாட்டு குழம்பு ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi