Just In
- 44 min ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- 47 min ago ஜாகிங் போகும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க எலும்புகள் அவ்வளவுதான்...!
- 3 hrs ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 3 hrs ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
Don't Miss
- News இருக்கு ஆனா இல்ல? சூரி முதல் ஜெயக்குமார் வரை.. ஓட்டு உரிமையை இழந்த பிரபலங்கள்!
- Movies குடித்துவிட்டு ஆட்டம் போட்ட ஸ்ரீதிவ்யா.. ஓரம் கட்டிய தமிழ் சினிமா.. செய்யாறு பாலு சொன்ன ஷாக் நியூஸ்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
ருசியான... கறிவேப்பிலை குழம்பு
உங்கள் வீட்டில் கறிவேப்பிலை அதிகம் உள்ளதா? அப்படியானால் அந்த கறிவேப்பிலையைக் கொண்டு குழம்பு செய்து கொடுங்கள். இந்த கறிவேப்பிலை குழம்பு மிகவும் ஆரோக்கியமானது.
இன்று மதியம் என்ன சமையல் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் இதுவரை செய்திராத ஒரு குழம்பை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் கறிவேப்பிலை அதிகம் உள்ளதா? அப்படியானால் அந்த கறிவேப்பிலையைக் கொண்டு குழம்பு செய்து கொடுங்கள். இந்த கறிவேப்பிலை குழம்பு மிகவும் ஆரோக்கியமானது. குறிப்பாக தலைமுடி பிரச்சனையை சந்திப்பவர்களுக்கு இந்த குழம்பு மிகவும் நல்லது. கறிவேப்பிலை குழம்பு சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு கறிவேப்பிலை குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கறிவேப்பிலை குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளி - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 1/4 கப்
* நாட்டுச் சர்க்கரை - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
* கறிவேப்பிலை - 1 கப்
* பூண்டு - 4
* இஞ்சி - 1/4 இன்ச் துண்டு
* வரமிளகாய் - 3
* பச்சை மிளகாய் - 1
* புளி - 1 சிறிய துண்டு
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் கறிவேப்பிலையை நன்கு கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து 3 நிமிடம் வறுத்து, பின் புளி மற்றும் தேங்காயை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு, சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் புளியை நீரில் ஊற வைத்து, பிழிந்து சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை மசாலா பேஸ்ட்டை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, எண்ணெய் தனியாக பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, தேவயைன அளவு நீரை ஊற்றி, குறைவான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பின் நிறம் சற்று மாறி, எண்ணெய் மேலே பிரிய ஆரம்பிக்கும் போது, அதில் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து கிளறி இறக்கினால், கறிவேப்பிலை குழம்பு தயார்.
குறிப்பு:
* கறிவேப்பிலை குழம்பு சற்று கெட்டியாகத் தான் இருக்க வேண்டும். மிகவும் நீராக இருக்கக்கூடாது.
* தேங்காயை வறுக்கும் போது கருகவிட்டுவிட வேண்டாம்.
* கறிவேப்பிலை குழம்பை ஃப்ரிட்ஜில் வைத்து 3-4 நாட்கள் வரை பயன்படுத்தலாம். சொல்லப்போனால் இந்த குழம்பை தயாரித்த உடனேயே சாப்பிடுவதை விட, மறுநாள் சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.
* வேண்டுமானால் மல்லித் தூளுக்கு பதிலாக சாம்பார் பொடியைப் பயன்படுத்தலாம்.
* முக்கியமாக இந்த குழம்பை மண்சட்டியில் சமைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
Image Courtesy: sharmispassions