Just In
- 53 min ago காமதா ஏகாதசி 2024 எப்போது? தேதி, நேரம், பூஜை குறித்த தகவல்கள்...
- 1 hr ago குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
- 3 hrs ago தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
Don't Miss
- Automobiles டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
- News Silent Period பற்றி தெரியுமா? கண்காணிப்பில் சமூக ஊடகம்! கருத்து கந்தசாமிகளே உஷார்!
- Finance ஓடியாங்க ஓடியாங்க.. தங்கம் விலை திடீர்ன்னு குறைஞ்சிருக்கு..!! செம சான்ஸ்..!
- Movies அஜித் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்?.. அப்டேட்ஸ் வருதாம்
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தேங்காய் பாயாசம்
சில பாயாச பிரியர்கள், தங்கள் வீடுகளில் மாலை வேளையில் காபி, டீ-க்கு பதிலாக பாயாசத்தை செய்து சுவைப்பார்கள். இத்தகைய பாயாசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் தேங்காய் பாயாசம்.
பொதுவாக பண்டிகை காலங்களில் அல்லது வீட்டில் ஏதேனும் விசேஷம் என்றால் நிச்சயம் அனைத்து வீடுகளிலும் பாயாசத்தை ஸ்பெஷலாக செய்வார்கள். சில பாயாச பிரியர்கள், தங்கள் வீடுகளில் மாலை வேளையில் காபி, டீ-க்கு பதிலாக பாயாசத்தை செய்து சுவைப்பார்கள். இத்தகைய பாயாசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் தேங்காய் பாயாசம்.
இன்று உலக தேங்காய் தினம். ஆகவே இந்த தினத்தன்று தேங்காய் கொண்டு ஸ்பெஷலாக செய்யப்படும் தேங்காய் பாயாசத்தை எப்படி செய்வதென்று கீழே கொடுத்துள்ளோம். முக்கியமாக இந்த பாயாசம் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அருமையாக இருக்கும். இப்போது தேங்காய் பாயாசத்தின் செய்முறையைக் காண்போம். அதைப் படித்து முயற்சித்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசுமதி அரிசி அல்லது வேறு அரிசி - 1/2 கப்
* தண்ணீர் - 3 கப் அல்லது தேவையான அளவு
* வெல்லம் - 1 1/2 கப்
* தேங்காய் - 1/2 கப் (துருவியது)
* கெட்டியான தேங்காய் பால் - 2 கப்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
* உலர் திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
* தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துண்டுகளாக்கப்பட்டது)
செய்முறை:
* முதலில் மிக்ஸியில் அரிசியைப் போட்டு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து, நீர் ஊற்றி, வெல்லம் உருகும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், அரைத்த அரிசியைப் போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நீரை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், வாணலியை மூடி குறைவான தீயில் 30-35 நிமிடம் அரிசியை நன்கு மென்மையாக வேக வைக்க வேண்டும்.
* சாதமானது நன்கு குலைந்ததும், அதில் அரைத்த தேங்காய் பேஸ்ட், வெல்லப் பாகு சேர்த்து நன்கு கிளறி விட்டு, கொதிக்க ஆரம்பித்ததும், குறைவான தீயில் 10 நிமிடம் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும்.
* இப்போது கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி கிளறி, 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும்.
* அதன் பின் அந்த பாயாசத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதன் மேல் ஏலக்காய் பொடியைத் தூவி கிளறி விட வேண்டும்.
* இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், நறுக்கி வைத்துள்ள தேங்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும், முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து வறுத்து, பின் அதை பாயாசத்தின் மேல் ஊற்றி கிளறினால், சுவையான தேங்காய் பாயாசம் ரெடி!