Just In
- 26 min ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 1 hr ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 2 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
Don't Miss
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலை காட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
செட்டிநாடு காளான் மசாலா
உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அதுவும் செட்டிநாடு ரெசிபிக்களை விரும்புவார்களா? அப்படியானால் இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்வதாக இருந்தால், செட்டிநாடு காளான் மசாலாவை செய்து சாப்பிடுங்கள்.
உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அதுவும் செட்டிநாடு ரெசிபிக்களை விரும்புவார்களா? அப்படியானால் இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்வதாக இருந்தால், செட்டிநாடு காளான் மசாலாவை செய்து சாப்பிடுங்கள். இந்த காளான் மசாலா செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த காளான் மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு செட்டிநாடு காளான் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு காளான் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காளான் - 2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன் (அல்லது) தக்காளி - 1
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
மசாலா பொடிக்கு...
* மிளகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* மல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 2-3
* பூண்டு - 2 பல்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 'மசாலா பொடிக்கு' கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் காளானை நன்கு சுத்தம் செய்து, நீளவாக்கி வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் காளானை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். நீரை சேர்க்காதீர்கள். ஏனெனில் காளானில் இருந்தே அது வேக தேவையான நீர் வெளியேறும்.
* அடுத்து, அதில் தக்காளி/புளிச்சாறு சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து சில நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, சில நிமிடங்கள் கொதிக்க விட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், செட்டிநாடு காளான் மசாலா தயார்.
Image Courtesy: cookspan