Just In
- 52 min ago கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- 1 hr ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- 2 hrs ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- 4 hrs ago Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
Don't Miss
- News முன்னோடி தமிழ்நாடு.. நம்ம ஆட்சியில் இது முக்கியம்! பட்டியல் போட்ட முதல்வர்..வியந்து பார்த்த INDIA!
- Movies ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சுவையான... கேரட் சட்னி
கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது என்பதால், அடிக்கடி கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. உங்களுக்கு கேரட்டை பொரியல் செய்து சாப்பிட்டு போரடித்திருந்தால், இனிமேல் கேரட் சட்னி செய்து சுவையுங்கள்.
உங்களுக்கு இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி, பூண்டு சட்னி செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் இன்று சற்று வித்தியாசமாக கேரட் சட்னியை செய்து பாருங்கள். கேரட் சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, அடையுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது என்பதால், அடிக்கடி கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. உங்களுக்கு கேரட்டை பொரியல் செய்து சாப்பிட்டு போரடித்திருந்தால், இனிமேல் கேரட் சட்னி செய்து சுவையுங்கள்.
கேரட் சட்னியை இரண்டு முறையில் தயாரிக்கலாம். ஒன்று தேங்காய் சேர்த்து செய்யலாம். மற்றொன்று வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து செய்யலாம். உங்களுக்கு கேரட் சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் சேர்த்து தயாரிக்கப்படும் கேரட் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துருவிய கேரட் - 1 கப்
* தேங்காய் - 1/4 கப்
* சின்ன வெங்காயம் - 4
* பச்சை மிளகாய் - 7-8
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* புளி - 1 இன்ச்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* பின் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின் சின்ன வெங்காயம், கேரட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* இறுதியாக தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* வதக்கிய பொருட்கள் குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு, புளி மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கேரட் சட்னி தயார்.
குறிப்பு:
* கேரட் சட்னியில் இனிப்பு அதிகம் தெரியக்கூடாது என்றால், பச்சை மிளகாயை சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
* சின்ன வெங்காயம் இல்லாவிட்டால், பாதி பெரிய வெங்காயத்தை பயன்படுத்துங்கள்.
Image Courtesy: naliniscooking