Just In
- 2 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 4 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 4 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 5 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு கர்ப்பம் தரிக்க எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ள வேண்டும்? ஏன் தெரியுமா?
தடுப்பூசி போடுவது கருவுறுதலை பாதிக்காது அல்லது குழந்தையின் இயல்பான வளர்ச்சியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. சாதாரண கர்ப்பத்தில் கோவிட் தடுப்பூசியின் தாக்கத்தை சோதிக்க பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தன் தாக்கத்தை உலகம் முழுவதும் பரப்பி வருகிறது கொரோனா வைரஸ். உலக நாடுகள் பலவும் கொரோனா வைரஸுக்கு அஞ்சி வாழ்கின்றனர். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டும் உயிரிழந்தும் உள்ளனர். கொரோனா வைரஸ் இரண்டு ஆண்டுகளாக உருமாறி மீண்டும் மீண்டும் பரவிக்கொண்டிருக்கிறது. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் என அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கர்ப்பமாகி, ஒன்பது மாதங்கள் வயிற்றில் ஒரு குழந்தையை வளர்ப்பது எளிதான வேலை அல்ல.
இந்த நேரத்தில் ஒரு பெண்ணின் உடல் பல உணர்ச்சி மற்றும் ஹார்மோன் மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும். நீண்ட கர்ப்பப் பயணத்தில் பயணம் செய்து ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க தாய் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். நீங்கள் கோவிட்-19 இலிருந்து மீண்ட உடனேயே கருத்தரிக்க முயற்சித்தால், நீங்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு முன், கோவிட்-19 இலிருந்து மீண்ட பிறகு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்ள இக்கட்டுரையை படியுங்கள்.
காத்திருப்பு ஏன் முக்கியம்
கோவிட்-19 லிருந்து மீண்ட உடனேயே கருத்தரிப்பது புதிதாகப் பிறக்கும் குழந்தை மற்றும் தாயின் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம். ஏனென்றால், கொரோனா வைரஸ் தொற்று நமது சுவாச மண்டலத்தை மட்டும் பாதிக்காது. ஆனால் அதன் தாக்கம் உடலின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகிறது. மேலும், சில சந்தர்ப்பங்களில் ஆரம்ப நோய்த்தொற்றுக்குப் பிறகும் கூட ஒருவர் கோவிட்-19 இன் அறிகுறிகளை அனுபவிக்கலாம். கர்ப்பத்தின் ஒன்பது மாத நீளமான பயணம் சவாலானது மற்றும் கடுமையான மாற்றங்களைக் கையாள உங்கள் உடல் தயாராக இல்லை என்றால், விஷயங்கள் இன்னும் சிக்கலானதாகிவிடும். இந்த எல்லா காரணங்களுக்காகவும், கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு முன்பு சிறிது காலம் காத்திருப்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?
சமீபகாலமாக உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால், சற்று பொறுத்திருப்பது நல்லது. ஒருவர் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை என்றாலும், நீங்கள் முழுமையாக குணமடைந்து, நீடித்த அறிகுறிகள் ஏதும் இல்லாவிட்டால், குடும்பம் போன்றவற்றைத் திட்டமிடுவதற்கு முன் சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
திட்டமிட்டு உங்கள் மருத்துவரை அணுகவும்
உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து அவருடைய பரிந்துரையின்படி செயல்படுவதே சிறந்த விஷயம். உங்கள் மருத்துவர் உங்கள் உடல்நிலையை மதிப்பீடு செய்து சரியான நடவடிக்கையை பரிந்துரைக்கலாம். தாயின் உடல் கர்ப்பத்தைக் கையாளத் தயாராக இல்லை என்றால், கர்ப்பம் மற்றும் ஆரோக்கியமான கர்ப்பத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க மருத்துவர் கூடுதல் மருந்துகளையும் ,உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றத்தையும் பரிந்துரைக்கலாம். உங்கள் குடும்பத்தை நீட்டிக்க திட்டமிடும் முன், தொற்றுக்குப் பிறகு முழுமையாக தடுப்பூசி போடவும் அறிவுறுத்தப்படுகிறது.
கோவிட் தொற்றுடன் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டால் என்ன நடக்கும்?
நீங்கள் நீண்ட காலமாக கர்ப்பமாக இருக்க திட்டமிட்டு, உங்கள் கர்ப்பம் கோவிட் உடன் உறுதி செய்யப்பட்டிருந்தால், பீதி அடைய வேண்டாம். உங்கள் மருத்துவரை அணுகி, உங்களைக் கவனித்துக் கொள்ள முயற்சிக்கவும். சரியான நேரத்தில் சாப்பிடவும், உடற்பயிற்சி செய்யவும், நிறைய தண்ணீர் குடிக்கவும். உங்கள் உணவில் ஆரோக்கியமான உணவுகளை சேர்த்துக்கொள்ளவும். உங்கள் மருத்துவருடன் தொடர்பில் இருங்கள் மற்றும் நேர்மறையாக இருங்கள்.
தடுப்பூசிகள் கருவுறுதலை பாதிக்குமா அல்லது கருவை பாதிக்குமா?
தடுப்பூசி பெற்றோரின் கருவுறுதலை பாதிக்கும் என்பது பொதுவான தவறான கருத்து. இந்த அறிக்கைகள் முற்றிலும் தவறானவை மற்றும் அவற்றில் எந்த உண்மையும் இல்லை. தடுப்பூசி போடுவது கருவுறுதலை பாதிக்காது அல்லது குழந்தையின் இயல்பான வளர்ச்சியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. சாதாரண கர்ப்பத்தில் கோவிட் தடுப்பூசியின் தாக்கத்தை சோதிக்க பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எதுவும் கண்டறியப்படவில்லை. எனவே, ஷாட் எடுப்பதில் நீங்கள் தயங்கக்கூடாது. தடுப்பூசிகள் கடுமையான கோவிட் தொற்று மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தைக் குறைக்கின்றன.
ஒவ்வாமை
கோவிட் 19 தடுப்பூசி எடுத்துக்கொண்ட கர்ப்பிணிகளின் நஞ்சுக்கொடியில் ஆய்வு செய்ததில் வில்லைட்டிஸ் அழற்சி, ரத்த ஓட்ட மாறுபாடு ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. கர்ப்பமாக இருக்கும்போது கோவிட் -19 தடுப்பூசி போடுவது பாதுகாப்பானது என்கிற கருத்துக்கு இக்கண்டுபிடிப்பு வலுச்சேர்க்கிறது. தடுப்பூசி மூலம் கருவிலுள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால், தடுப்பூசி தொடர்பான ஒவ்வாமை, பக்க விளைவுகள், தடுப்பூசிக்குப்பின் ஏற்படக்கூடிய தொற்று சாத்தியமெல்லாம் மற்றவர்களைப் போல் கர்ப்பிணிகளுக்கும் உண்டு.
யாருக்கு அதிக கவனம் தேவை?
கர்ப்பிணிகளில் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள், நாள்பட்ட நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சுவாச நோய், ரத்தசோகை, தைராய்டு, சிறுநீரக நோய் போன்றவை கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தால், கொரோனா தொற்று ஏற்படும்போது ஆபத்து அதிகமாகிறது. மேலும் உடற்பருமன் அதிகமாக உள்ளவர்களுக்கும், கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் உள்ளவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டால் ஆபத்து அதிகமாகிறது.