Just In
- 3 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 4 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 4 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- 5 hrs ago வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
Don't Miss
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் குழந்தை ஊனமாக பிறக்க போகிறது என்று அர்த்தம்
கர்ப்பமாய் இருக்கும் பெண்களுக்கு குழந்தையின் எடை, பாலினம், ஆரோக்கியம் குறித்த பல எதிர்பார்ப்புகள் இருக்கும். அதே சமயம் கவலையும் இருக்கும். அம்மாக்களுக்கு இருக்கும் தொற்றுநோய்கள் குழந்தையின் ஆரோக்கியத்
கர்ப்பமாய் இருக்கும் பெண்களுக்கு குழந்தையின் எடை, ஆரோக்கியம் சுகப்பிரசவமா அல்லது சிசேரியான என ஆயிரம் கவலைகள் இருக்கும். இவை அனைத்தையும் விட முக்கியமான கவலை கர்ப்பகாலத்தில் அம்மாக்களுக்கு ஏதேனும் தொற்றுநோய் ஏற்பட்டால் அது குழந்தையின்மை மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுதான். எனவே கர்ப்பகாலத்தில் ஏதேனும் நோய் ஏற்பட்டால் உடனடியாக அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
நீங்கள் கர்ப்பமாக முயற்சிப்பவராக இருந்தால் முதலில் உங்கள் சுற்றுப்புறத்தில் கவனம் செலுத்த வேண்டும். பலவித தொற்றுநோய்கள் பூச்சிகளின் மூலமும், பாலியல்ரீதியாகவும் பரவுகின்றது. உங்களுக்கு ஏதேனும் வித்தியாசமாக தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். இப்பொழுது நீங்கள் சாதாரணமென நினைத்து விடும் அறிகுறிகள் பிற்காலத்தில் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும். பல நோய்களை சரியான நேரத்தில் கண்டறிந்துவிட்டால் குணப்படுத்திவிடலாம், ஆனால் அதற்கு நீங்கள் மருத்துவரிடம் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
அம்மை நோய்
அம்மை நோய் பற்றி நாம் அனைவரும் அறிவோம். கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு அம்மை னாய் ஏற்பட்டால் அதற்கு உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும். அம்மை நோய் வரபோவதற்கான அறிகுறிகள் இருந்தாலே பரிசோதனை செய்துபார்த்து கொள்வது மோசமான விளைவுகளை தடுக்கும். பெரியவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும், ஆனால் முதல் அல்லது இரண்டாவது மும்மாதத்தில் அம்மை நோயால் பாதிக்கபட்டால் அது குழந்தையின் ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும். இதனை குணப்படுத்தவில்லையனில் குழந்தையின் சருமத்தில் தழும்புகள், உறுப்புகள் வளர்ச்சியில் குறைபாடு மற்றும் நரம்பியல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சிபிலிஸ்
அம்மாவிற்கு இந்த நோய் இருந்தால் இது குழந்தையின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தும். இது பாலியல் மூலம் பரவும் ஒரு தொற்றுநோயாகும். இது பாக்டீரியாக்களால் ஏற்படும் நோயாகும். இதை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து விட்டால் எளிதில் குணப்படுத்தி விடலாம், இல்லையனில் இதன் பாதிப்பு தொப்புள்கொடி மூலம் குழந்தைக்கும் பரவும். சிபிலிஸ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். குழந்தை பிறந்தாலும் அவர்கள் கடுமையான நரம்பியல் கோளாறுகளுக்கு ஆளாகலாம்.அதுமட்டுமின்றி பிறக்கும்போதே இரத்த சோகை, சருமத்தில் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்படலாம். எனவே கர்ப்பம் உறுதி ஆனவுடன் அணைத்து பரிசோதனைகளையும் செய்துகொள்வது நல்லது.
ஹெச்ஐவி
இது அனைவரும் அறிந்ததுதான். அம்மாவிற்கு ஒருவேளை ஹெச்ஐவி இருப்பது உறுதியானால் அது நிச்சயமாக தொப்புள்கொடி மூலமாகவோ அல்லது தாய்ப்பால் மூலமாகவோ குழந்தைக்கும் பரவிவிடும். எனவே உங்களுக்கு அதன் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அதற்கான தடுப்பு முறைகளை மேற்கொள்ளவும். இந்த கிருமி தாக்கினால் முதலில் பலவீனமடைவது உங்களுடைய நோயெதிர்ப்பு மண்டலம்தான். எனவே அது பலவித கோளாறுகளை ஏற்படுத்தும்.
சிக்குன்குனியா
இது நம் அனைவரும் அறிந்தது போல கொசுக்கள் மூலம் பரவக்கூடியது. இதன் அறிகுறிகள் உடல்வலி, காய்ச்சல், தலைவலி, குமட்டல் போன்றவை ஆகும். மலேரியாவை போல இதுவும் எப்போது வேண்டுமானாலும் பரவக்கூடியது பெரும்பாலும் கோடைகாலத்திலோ அல்லது பனிக்காலத்திலோ ஏற்படும். சிக்கன்குனியா பெரும்பாலும் தாயிடமிருந்து குழந்தைக்கு பரவாது, ஒருவேளை அறிகுறிகள் நான்கு நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் அதனை பரிசோதனை செய்வது அவசியம். பிரசவத்தின்போது தோப்புக்கொடி மூலம் குழந்தைக்கும் சிக்கன்குனியா பரவ வாய்ப்புள்ளது அவ்வாறு பரவினால் காய்ச்சல், பால் குடிப்பதில் சிரமம், சரும பிரச்சினைகள் போன்ற பாதிப்புகள் குழந்தைகளுக்கு ஏற்படலாம்.
லிஸ்டியோசிஸ்
இந்த வகை வியாதிகள் நீங்கள் உண்ணும் உணவு மூலம் குழந்தைகளுக்கு பரவக்கூடும். சாப்பிடும்போது லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்கள் எனும் பாக்டீரியாக்கள் நிறைந்த உணவை சாப்பிடுவதால் ஏற்படுவதுதான் லிஸ்டியோசிஸ் எனப்படும் இந்த நோய். இது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளவர்களை எளிதில் தாக்கும். முதியவர்களாக இருந்தால் மூளைக்காய்ச்சல், இரத்தம் தொடர்பான வியாதிகள் என தொடங்கி மரணம் கூட ஏற்படலாம். அதேசமயம் கர்ப்பமாக இருப்பவராக இருந்தால் தொப்புள்கொடியை பாதித்து கருச்சிதைவை ஏற்ப்படுத்தலாம், இல்லையெனில் குழந்தை பிறக்கும்போது மூளைவளர்ச்சி குறைவாக அல்லது உறுப்புகளின் வளர்ச்சியில் குறைபாடு இருக்கலாம் இருக்கலாம். இது மிகவும் அரிதான நோய்தான், இருந்தாலும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லதுதானே.
ஹெப்பாடிட்டீஸ்
இது முக்கியமாக கல்லீரலை தாக்கக்கூடிய வைரஸ் மூலம் பரவக்கூடிய நோயாகும். கல்லீரலின் பணி உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றுவதாகும். அது சரியாக செயல்படாதபோது உடலில் உள்ள நச்சுக்களின் அளவு அதிகரிக்க தொடங்கும். கல்லீரல் அழற்சி அல்லது ஸ்கொரோசிஸ் எனப்படும் இது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அபாயம் உள்ளது. பெரும்பாலும் இந்த நோய் பாலியல்ரீதியாகவோ அல்லது இரத்தம் மூலமாகவோ பரவுகிறது. இது அம்மா மீது ஏற்படுத்துகிற அதே விளைவை குழந்தை மீதும் ஏற்படுத்தும்.
டாக்ஸோபிளாஸ்மாசிஸ்
இது பூனைகளின் மூலம் பரவக்கூடியது. அதிர்ஷடவசமாக இது மிகவும் அரிய நோய். ஆனால் இந்த நோய் வந்துவிட்டால் அந்த குழந்தையின் நிலை பரிதாபம்தான். ஏனெனில் இந்த நோய் தாக்கிய குழந்தைகள் பிறக்கும் போதே கல்லீரல், மண்ணீரல் தொடர்பான குறைபாடுடன்தான் பிறப்பார்கள். மேலும் கட்டுப்படுத்த முடியாத வாந்தி, பார்வைத்திறன் குறைபாடு என இதனால் ஏற்படும் விளைவுகள் மிக அதிகம்.
சிஎம்வி
சிஎம்வி என்பது மிகவும் பொதுவான வைரஸ் ஆகும், இதனால் குளிர் புண்கள் மற்றும் அம்மை நோய் போன்ற நோய்கள் ஏற்படலாம். இது குழந்தைகளுக்கு கல்லீரல் பிரச்சினைகள், பார்வைத்திறன் குறைபாடு அல்லது பிற பார்வைக்கோளாறுகளை ஏற்படுத்தலாம்.