Just In
- 2 min ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 3 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 9 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 11 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
Don't Miss
- Movies ஜப்பான் எஃபெக்ட்டா.. கார்த்தியை கண்டுக்காத கூட்டம்.. சூர்யா வந்தவுடனே சும்மா அள்ளுதே!
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அய்யய்யோ! கர்ப்ப காலத்தில் காய்ச்சல் வந்தால் குழந்தைக்கு இந்த நோய் வருமா?
அய்யய்யோ! கர்ப்ப காலத்தில் காய்ச்சல் வந்தால் குழந்தைக்கு இந்த நோய் வருமா?
ஆட்டிஸம் ஒரு நரம்புக் குறைபாடு ஆகும். 2-3 வயதுள்ள குழந்தைகள் பெரும்பாலும் இந்த குறைவால் பாதிப்படைகின்றனர். இந்த ஆட்டிசம் குழந்தையின் மோட்டார் இயலாமை , சைகை இயலாமை மற்றும் பேச முடியாமை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
கர்ப்ப காலத்தில் தாய்மார்களின் ஆரோக்கியமும் உடல் நலமும் இதனுடன் தொடர்பு கொண்டுள்ளதா என்று நிறைய கேள்விகள் நம்முள் எழுகின்றன.
ஆட்டிஸம்
இந்த ஆட்டிசம் ஏற்பட மரபணு மாற்றம், வேதியியல் சமநிலையின்மை, வைரஸ் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற காரணங்களாலும் பிறக்கின்ற குழந்தைக்கு ஆட்டிசம் வர வாய்ப்புள்ளது. இந்த ஆட்டிசம் பற்றிய நிறைய கருத்துக்கள் தெரியாத பட்சத்தில் சமீபத்திய ஆராய்ச்சி படி மூலக்கூறு உளவியல் என்ற நாளிதழில் கர்ப்ப காலத்தின் 2-3 காலத்தில் தாய்மார்கள் காய்ச்சலால் அவதிப்பட்டால் கருவில் வளரும் குழந்தைக்கு 40 % ஆட்டிசம் குறைபாடு வரும் அபாயம் உள்ளது என்று அதிர்ச்சி ரிப்போர்ட் அளிக்கின்றனர்.
ஆராய்ச்சி முடிவு
இந்த ஆராய்ச்சியை நார்வேயில் நடத்தும் போது 1999-2009 வரை பிறந்த 95,754 குழந்தைகளில் 583 குழந்தைகள் இந்த ஆட்டிசம் நோயால் பாதிப்படைந்து உள்ளனர். இதில் 15,701 குழந்தைகளின் அம்மாக்கள் 1-4 வார கர்ப்ப காலத்தில் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே எந்தவொரு கர்ப்ப காலத்திலும் காய்ச்சலால் அவதிப்பட்டால் 34 % ஆட்டிசம் குறைபாடு ஏற்படவும், 2-3 வது கர்ப்ப காலத்தில் ஏற்படும் காய்ச்சலால் 40% ஆட்டிசம் குறைபாடு குழந்தைக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதிலும் கர்ப்பத்தின் 12 வது வாரத்தில் காய்ச்சலால் அவதிப்பட்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கு 300 % வரை ஆட்டிசம் வரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
கர்ப்ப கால காய்ச்சல்
மேலும் இந்த 2-3 மாதங்களில் தாய்மார்களுக்கு ஏற்படும் காய்ச்சலுக்கு மருந்தாக அஸிட்டமினோபீன் எடுத்துக் கொள்ளும் போது குழந்தைகளின் ஆட்டிசம் குறைபாடு அபாயம் குறைந்துள்ளது. மேலும், இப்யூபுரூஃபன்,ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்து எடுத்துக் கொண்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கு மத்தியில் ஆட்டிசம் குறைபாடு எதுவும் இல்லை. எனவே எங்கள் ஆராய்ச்சியின் முடிவானது கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் நோய் தாக்குதல்கள் அடைந்தால் கருவில் வளரும் குழந்தைகள் ஆட்டிசம் நோயால் பாதிப்படைகின்றனர் என்று நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மடி ஹார்னிக் கூறுகிறார்.
விழிப்புணர்வு
எனவே இந்த ஆராய்ச்சி கண்டிப்பாக மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சிறிய நோய் தாக்குதல்களையும் கவனிக்க வேண்டும். அப்பொழுது தான் தாயும் சேயும் நலமுடன் வாழலாம்.அதனால் கட்டாயம் பெற்றோர்கள் ஆட்டிஸம் குறித்த விழிப்புணர்வு பெற்றிருத்தல் மிகவும் அவசியம். அதேபோல் மருத்துவர்களும் இதுகுறித்த போதிய ஆலோசனைகளை கர்ப்பிணிக்கும் அவருடைய குடும்பத்துக்கும் தர வேண்டும்.