Just In
- 43 min ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 1 hr ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 2 hrs ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 3 hrs ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
Don't Miss
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Sports இன்னும் ஒரு வாரம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு? 3 வீரர்களை கழற்றிவிடும் ரோகித் சர்மா
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கணும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Movies Pandian stores 2: நீ ஓடி வரவில்லையே.. காரில்தானே வந்தாய்.. மீனாவை கலாய்த்த கோமதி!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
கர்ப்பிணிகள் வைட்டமின் சி சாப்பிட்டா குழந்தைக்கு ஆஸ்துமா வராதாம்!
கர்ப்பிணிகள் தங்களின் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு கர்ப்பகாலத்தில் மட்டுமாவது புகைப்பழக்கத்தையும், மது அருந்துவதையும் நிறுத்தவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் பெரும்பாலான பெண்கள் இதனை பின்பற்றுவதில்லை. இதனால் குழந்தைகள் பிறக்கும் போதே நுரையீரல் பாதிப்பினால் பிறக்கின்றனர்.
கர்ப்பகாலத்தில் புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டு பிரசவகாலம் வரை வைட்டமின் சி சத்து உணவுகளை அதிகம் உட்கொள்ளும் கர்ப்பிணிகளுக்கு எந்தவித நோய் பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆஸ்துமா பாதிப்பின்றி ஆரோக்கியத்தோடு பிறக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
கர்ப்பிணிகள் தங்கள் உணவில் வைட்டமின் சி அடங்கியுள்ள பொருட்களான வெண்ணெய், பால், தயிர், முட்டையின் மஞ்சள் கரு, கார்டு லிவர் ஆயில், தக்காளிப் பழம், மாம்பழம், ,முள்ளங்கி, காரட், பறங்கிக்காய், முட்டைக்கோஸ், கறிவேப்பிலை, புதினா, முள்ளங்கி இலை, பச்சைக் கொத்துமல்லிக் கீரை, முளைக்கீரை, சிறுகீரை, பசலைக் கீரை, வெள்ளை மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரைகள், முருங்கைக் கீரை போன்றவற்றை தினமும் இயன்ற அளவு உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு வாய் நாற்றம் ஏற்படுவதுமுண்டு. வாய் நாற்றம் ஏற்படக் காரணம் வைட்டமின் "சி‟ குறைவே ஆகும். பச்சைப் பட்டாணி, பச்சைப் பயறு, முளை கட்டியது, சிறிய-பெரிய நெல்லிக்காய், ஆரஞ்சுப் பழம், திராட்சைப் பழம், வாழைப்பழம், தக்காளிப் பழம், சிறிய மற்றும் -பெரிய வெங்காயம், முட்டைக் கோஸ், சிவப்பு-வெள்ளை முள்ளங்கிகள், வெள்ளரிப் பிஞ்சு, வெள்ளரிக்காய், பேரிக்காய் ஆகியவற்றில் போதுமான அளவு வைட்டமின் சி அடங்கி உள்ளது. இவைகளை உட்கொண்டால், வாய் நாற்றம் நீங்கும்.
என்ன கர்ப்பிணிகளே கர்ப்பகாலத்தில் உங்களை பாதுகாப்பதோடு வைட்டமின் சி சத்துள்ள உணவுகளை உட்கொண்டு கருவில் இருக்கம் குழந்தையை ஆரோக்கியமானதாக பெற்றெடுங்கள்.