Just In
- 1 hr ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 1 hr ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 2 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 2 hrs ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
Don't Miss
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. நெல்லை கலெக்டர் அதிரடி.. உடனே சூழ்ந்த போலீஸ்! அடுத்து பரபர
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப தாய்ப்பாலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றித் தெரியுமா?
இங்கு குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப தாய்ப்பாலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தைக்கு மிகவும் ஊட்டச்சத்துமிக்க ஒரு உணவு தான் தாய்ப்பால். அதனால் தான் உடல்நல நிபுணர்கள் தாய்ப்பால் கொடுக்கச் சொல்கிறார்கள். தாய்ப்பால் கொடுப்பதால், அது குழந்தைக்கு மட்டுமின்றி, தாய்க்கும் பல வழிகளில் உதவும்.
மேலும் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப தாய்ப்பாலில் உள்ள சத்துக்களும் மாற்றமடையும். குறிப்பாக குழந்தை பிறந்த ஒரு வருட காலத்தில் தான், குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்குமாறு தாய்ப்பாலில் குறிப்பிட்ட மாற்றங்களும் ஏற்படும். சரி, இப்போது அந்த மாற்றங்கள் குறித்து காண்போம்.
மாற்றம் #1
பிரசவித்த 2 மணிநேரத்திற்குள் குழந்தைக்கு ஏன் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டுமென்று சொல்கிறார்கள் எனத் தெரியுமா? அதுமட்டுமின்றி, இந்த பால் சற்று மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த பால் தான் உலகிலேயே மிகவும் சத்து நிறைத்தது. இதில் கொலஸ்ட்ரோம் உள்ளது.
மாற்றம் #2
குழந்தை பிறந்த 3 மணிநேரத்திற்குப் பின், தாய்ப்பால் மிகவும் நீர்மமாக இருக்கும். ஆனால் 2-3 நாட்கள் கழித்து தாய்ப்பாலின் அடர்த்தி சற்று அதிகரித்திருக்கும்.
மாற்றம் #3
ஆறு வார காலத்திற்கு பின், குழந்தையின் உடலைப் பாதுகாக்க தாய்ப்பாலில் ஆன்டி-பாடிகள் அதிகரித்திருக்கும்.
மாற்றம் #4
குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்குப் பின், குழந்தையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு தாய்ப்பாலில் கலோரிகள் சற்று அதிகமாகி இருக்கும்.
மாற்றம் #5
ஆறு மாத காலத்திற்குப் பின், தாய்ப்பாலில் ஒமேகா அமிலங்கள் அதிகமான அளவில் இருக்கும். இந்த சத்து குழந்தையின் ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு உதவி புரியும்.
மாற்றம் #6
12 மாதங்களுக்கு பின் ஒரு தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பாலைக் கொடுத்தால், அந்த பாலில் ஒமேகா அமிலங்கள் மற்றும் கலோரிகள் இரண்டுமே அதிகளவில் இருக்கும். இந்த நிலையில் குழந்தைக்கு தாய்ப்பாலைக் கொடுக்கும் போது, அது குழந்தையின் தசை மற்றும் மூளை வளர்ச்சியை வேகமாக்கும்.
எனவே தான் அழகு பாழாகிறது என்று குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம் என கூறுகிறார்கள். இதைப் புரிந்து, உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், குறைந்தது ஆறு மாத காலமாவது குழந்தைக்கு தாய்ப்பாலைத் தவறாமல் கொடுங்கள்.