Just In
- 2 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 8 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 10 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 10 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகள்!!!
பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாத உணவு தான் தாய்ப்பால். இந்த தாய்ப்பாலானது பிறந்த குழந்தைகளுக்கு போதிய அளவில் கிடைக்காவிட்டால், அவர்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது குறைந்து, அவர்கள் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். ஆகவே குழந்தைகளுக்கு அவ்வப்போது தவறாமல் தாய்ப்பால் கொடுத்து வர வேண்டும்.
ஆனால் சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பின் அளவானது குறைவாக இருக்கும். இதனால் அவர்களால் குழந்தைகளுக்கு அவ்வப்போது தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகும். இதற்கு முக்கிய காரணம் பிரசவத்திற்கு பின் ஏற்படும் மன அழுத்தம், தூக்கமின்மை, உடல் வறட்சி போன்றவை.
ஆகவே தாய்மார்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சுரக்கும் தாய்ப்பாலின் அளவை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். இங்கு தாய்ப்பால் சுரப்பின் அளவை அதிகரிக்கும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து முயற்சித்து தாய்ப்பாலின் சுரப்பை அதிகரித்து, குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடுங்கள்.
தண்ணீர்
தண்ணீர் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்காது. ஆனால் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருப்பதற்கு உடல் வறட்சி ஒரு முக்கிய காரணம். உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாவிட்டாலும், சுரக்கும் தாய்ப்பாலின் அளவு குறையும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
கால்சியம் நிறைந்த உணவுகள்
கால்சியம் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களான பால் மற்றும் பால் பொருட்கள், சோயா பொருட்கள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வர வேண்டும்.
நார்ச்சத்துள்ள உணவுகள்
நார்ச்சத்து அதிகம் நிறைந்த தானியங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். இதன் மூலமும் தாய்ப்பாலின் அளவு அதிகரிக்கும்.
சீரகம், சோம்பு
சீரகம் சோம்பு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், தாய்ப்பால் சுரப்பின் அளவு அதிகரிக்கும்.
பாதாம்
தினமும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பாதாமை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பாலின் அளவு அதிகரிக்க ஆரம்பிக்கும்.
வெந்தயம்
பிரசவத்திற்கு பின் பெண்கள் வெந்தயத்தை உணவில் சேர்த்து வர வேண்டும். இதன் மூலம் அதில் உள்ள சத்துக்களால் தாய்ப்பாலின் அளவு அதிகரிக்கும்.