Just In
- 3 min ago கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- 1 hr ago கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- 2 hrs ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- 3 hrs ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
Don't Miss
- Movies அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
பிரசவத்திற்கு பிறகு உடலுக்கு மசாஜ் செய்யுங்க!!!
பிரசவத்திற்கு பின் மசாஜ் செய்தால்...
* பிரசவத்திற்கு பின் ஒவ்வொரு பெண்ணும் சற்று மன அழுத்தத்துடன் காணப்படுவர். பிறந்த குழந்தையை கவனமாக பார்ப்பதில் புதிதாக தாயானவர்களுக்கு மனஅளவிலும், உடலளவிலும் சற்று கடினமாக இருக்கும். ஆகவே அப்போது மிசாஜ் செய்தால், உடல் சற்று ரிலாக்ஸ் ஆக இருப்பதோடு, மனமும் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும்.
* பிரசவத்திற்கு பிறகு கால்கள், தொடை, தோள்பட்டை, கழுத்து, முதுகு போன்றவை மிகவும் வலியுடன் இருக்கும். அப்போது மசாஜ் செய்தால் உடல் வலி நீங்கிவிடும். அதிலும் அந்த மசாஜை இரவில் படுக்கும் போது செய்தால் நன்றாக இருக்கும். ஆகவே படுக்கும் முன் கணவரை அழைத்து சற்று மசாஜ் செய்து விடுமாறு சொல்லுங்கள்.
* மசாஜ் செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், உடல் வலி குறைவதோடு, உடலில் ஆக்ஸிஜன் சரியான அளவில் கிடைத்து, இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
* ஒவ்வொரு பெண்ணும் பிரசவத்திற்கு பின் தாய்ப்பாலை அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் மார்பகத்தில் சற்று மசாஜ் செய்தால், உடலில் தாய்ப்பாலின் உற்பத்தி அதிகரிப்பதோடு, புரோலாக்டின் உற்பத்தியும் அதிகரிக்கும். அதிலும் இந்த வகையான மசாஜ் தாய்ப்பால் சுரப்பியில் ஏதேனும் அடைப்பு இருந்தாலும் அதனை நீக்கிவிடும்.
* பிரசவத்திற்கு பின் உடலில் தசைகள் சுருங்கியிருக்கும். ஆகவே அப்போது உடலுக்கு மசாஜ் செய்தால், உடலில் இருக்கும் தசைகள் வலுவடைவதோடு, உடல் நன்கு பிட்டாகவும் இருக்கும்.
* கர்ப்பமாக இருக்கும் போது எடை அதிகமாக இருக்கும். ஆனால் பிரசவத்திற்கு பின்னும் சில சமயங்களில் எடை கூட ஆரம்பிக்கும். மேலும் தொப்பை கூட வந்துவிடும். ஆகவே அந்த நேரத்தில் உடல் எடையை குறைக்க, தொப்பையை குறைக்க மசாஜ் செய்தால், உடல் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும்.
* சிசேரியன் பிரசவத்தில் தையல்களின் குறிகள் சருமத்தில் இருக்கும். இதனை முற்றிலும் போக்குவது என்பது மிகவும் கடினம். ஆனால் அந்த குறியினை மசாஜ் செய்வதன் மூலம் மெதுவாக குறைக்கலாம். முக்கியமாக, மசாஜ் செய்யும் போது சரியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த எண்ணெயை பயன்படுத்த வேண்டும்.
* அதுமட்டுமல்லாமல், மசாஜ் செய்வதால் உடலில் இருக்கும் இறந்த செல்கள் போய்விடும். அதிலும் புதிதாக தாயானவர்கள், சருமத்தின் மீது சரியான கவனிப்பை, பராமரிப்பை செய்வதில்லை. ஆகவே மறக்காமல் மசாஜ் செய்ய வேண்டும்.
முக்கியமாக சிசேரியன் மூலம் பிரசவம்த ஆனவர்கள், உடனே மசாஜ் செய்ய வேண்டாம். ஏனெனில் தையல்கள் நன்கு காய சற்று நாட்கள் ஆகும். ஆகவே தையல்களை காய்ந்து சரியானதும், பின்னர் மசாஜ் செய்ய தொடங்குங்கள். அதிலும் மசாஜ் செய்யும் போது சூடான அல்லது வெதுவெதுப்பான எண்ணெயை பயன்படுத்த வேண்டும். வேண்டுமென்றால் அந்த எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு மசாஜ் செய்தால் மிகவும் நல்லது. ஆகவே மசாஜை வீட்டில் செய்து உடலை ஆரோக்கியமாக, பிட்டாக வைத்துக் கொள்ளுங்கள்.