Just In
- 1 hr ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 7 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 7 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 8 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
Don't Miss
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பெற்றோர்களே! உங்க குழந்தைய அடிக்கடி நீங்க மிரட்டுறீங்களா? அப்ப கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க...!
வெகுமதி மற்றும் அங்கீகாரம் குழந்தைகள் மத்தியில் நேர்மறையான தூண்டுதல்களாக செயல்படுகின்றன. ஆதலால், பெற்றோர்கள் குழந்தைகளுக்கான அங்கீகாரத்தை வழங்குகள்.
அச்சுறுத்தல்கள் எளிதானவை, அவை நாக்கை மிக விரைவாக உருட்டிக்கொண்டு தொடங்குவதற்கு, அவை செயல்படுகின்றன என்று நாம் கூட நினைக்கலாம். எவ்வாறாயினும், விளைவுகளால் உங்கள் குழந்தைகளை அச்சுறுத்துவதன் மூலம் நீங்கள் பெறும் நேர்மறையான முடிவுகள் பெரும்பாலும் குறுகிய காலமாகும். குழந்தைகளை அச்சுறுத்துவதால், பெற்றோருக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுத்துவதையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். நாம் அனைவரும் ஒரு கட்டத்தில் அல்லது மற்றொன்றில் சில வேலைகளைச் செய்யும்படி நம் குழந்தைகளை அச்சுறுத்தியுள்ளோம்.
நீங்கள் அடிக்கடி வேலைகளைச் செய்யும்படி உங்கள் குழந்தைகளை அச்சுறுத்துகிறீர்களா? இதை செய்வது சரியான காரியமா? உண்மையில் அவ்வாறு இல்லை. அச்சுறுத்தல்களின் நீண்டகால விளைவுகள் என்ன என்பதைப் பற்றியும், அதை எவ்வாறு நாம் தவிர்க்கலாம் என்பதை பற்றியும் இக்கட்டுரையின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.
குறைபாடு 1
குழந்தைகள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை அச்சுறுத்தல்களுக்கு பயப்படுவார்கள். என்று அவர்களை தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் இயங்குகிறார்களோ அன்று குழந்தைகள் அச்சுறுத்தல்களுக்கு பயப்படுவதில்லை.
MOST READ: இந்த உணவுகள் உங்க எடையை நீங்க நினைக்கறதவிட வேகமாக குறைக்க வைக்குமாம்...!
குறைபாடு 2
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமான உறவு மிகவும் உணர்ச்சி பூர்வமானது. ஆனால், பெற்றோர்கள் குழந்தைகளை நீண்டகாலமாக அச்சுறுத்துவதால் பெற்றோர்-குழந்தை உறவை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் இவை பாதிக்கின்றன.
குறைபாடு 3
பெற்றோர்களே! உங்கள் அச்சுறுத்தல்கள் ஒரு கட்டத்திற்குப் பிறகு மதிப்பை இழக்கின்றன. நீங்கள் எப்போதும் உங்கள் குழந்தைகளை அச்சுறுத்தினால், அவர்கள் ஒருகட்டத்திற்கு மேல் கவலைப்பட மாட்டார்கள், பயம் கொள்ளவும் மாட்டார்கள்.
உங்கள் பிள்ளைகளை அச்சுறுத்துவதைத் தவிர்ப்பதற்கான வழிகள்
#வழி 1
பெற்றோர்களே உங்கள் பணியை சுவாரஸ்யமானதாகவும், விளையாட்டுத்தனமாகவும் மாற்ற முயற்சி செய்யுங்கள். நீங்கள் பணியை விளையாட்டுத்தனமாகவும் அல்லது அவர்களுடன் பங்கேற்கலாம். இது உங்கள் உறவை மகிழ்ச்சிதரமானதாக மாற்றும்.
MOST READ: நீங்க ரொம்ப காலம் ஆரோக்கியமா வாழணுமா? அப்ப 'இத' உங்க உணவில் சேர்த்துக்கோங்க...!
# வழி 2
வெகுமதி மற்றும் அங்கீகாரம் குழந்தைகள் மத்தியில் நேர்மறையான தூண்டுதல்களாக செயல்படுகின்றன. ஆதலால், பெற்றோர்கள் குழந்தைகளுக்கான அங்கீகாரத்தை வழங்குகள். அவர்களின் சிறு முயற்சியையும், வெற்றியையும் பாராட்டுங்கள் மற்றும் பரிசளியுங்கள். அவ்வாறு இருப்பது குழந்தைகள்- பெற்றோர்கள் உறவை மகிழ்ச்சியாகவும் வலுவாகவும் மாற்றும்.
# வழி 3
குழந்தையின் தர்க்கரீதியான மற்றும் பகுத்தறிவு புத்திக்கு வழிகாட்டுங்கள். ஏதாவது செய்ய வேண்டியது ஏன் என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க முயற்சிக்கவும். குழந்தைகள் பகுத்தறிவோடு செயல்படுவது அவர்களுக்கும், இச்சமூகத்திற்கும் நல்லது. அவர்கள் உங்களையும், இச்சமுகத்தையும் புரிந்துகொண்டு வாழ்வதற்கு பகுத்தறிவு அவசியம். அதை பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைக்கு வழங்க வேண்டும்.
MOST READ: உங்க பெற்றோருக்கு மாரடைப்பு வரப்போகுது என்பதைக் குறிக்கும் ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
# வழி 4
வேலையைச் செய்யும்போது குழந்தைகள் செய்யும் சிறிய தவறை புறக்கணிக்கவும். ஒரு சிறிய குழந்தை எல்லாவற்றையும் சரியாக செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். பெரியவர்களே பல நேரங்களில் பல விஷயங்களை தவறாக செய்யும்போது, குழந்தைகளின் தவறை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது. அந்த தவறை பற்றிய புரிதலை குழந்தைக்கு ஏற்படுத்த வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒருவர் தங்கள் தவறுகளிலிருந்து பல பாடங்களை கற்றுக்கொள்கிறார்.
# வழி 5
தயவுசெய்து குழந்தைகள் முன்பு நீங்கள் பயன்படுத்தும் வார்த்தையை மிகவும் உணர்வுபூர்வமாகவும் தெளிவாகவும் பயன்படுத்தவும். ஏனெனில், உங்கள் வார்த்தைகளையும், நீங்கள் நடந்துகொள்ளும் முறைகளை பார்த்து தான் குழந்தைகள் வளர்க்கிறார்கள். நீங்கள் பேசும் எல்லா வார்த்தையும் குழந்தைகள் மனதில் பதியும். இது அவர்களின் பேச்சுக்களில் பிரதிபலிக்கும். ஆதலால், வார்த்தை உபயோகம் சரியாக இருக்க வேண்டும்.