Just In
- 1 hr ago நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- 2 hrs ago சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது?
- 2 hrs ago அனுமன் ஜெயந்தியன்று உருவாகும் அரிய யோகங்கள்: இன்று இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப் போகுது..
- 3 hrs ago சித்ரா பெளர்ணமியில் கண்டிப்பாக இதை செய்யுங்கள்... செல்வம் சேரும்..!
Don't Miss
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- News முஸ்லீம்களுக்கு சொத்து..மோடியின் நச்சுக் கருத்து..! தேர்தல் ஆணையத்துக்கு பறந்த புகார்..திருமா சுளீர்
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Movies தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க.. போட்டுத்தாக்கிய பிரபலம்
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உங்க குழந்தைய வீட்டுல தனியா விட்டு செல்லும்போது இதெல்லாம் நீங்க கண்டிப்பா பண்ணணுமாம்...!
பெரியவர்களின் கண்காணிப்பு இல்லாமல் இருந்தால், உங்கள் குழந்தை நாள் முழுவதையும் டிவி பார்ப்பது, வீடியோ கேம்கள் விளையாடுவது அல்லது இணையத்தைப் பயன்படுத்துவது போன்றவற்றில் ஈடுபடலாம்.
நீங்கள் எப்போதாவது உங்கள் குழந்தையை வீட்டில் தனியாக விட்டு சென்றிருக்கிறீர்களா? நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், வேலை அல்லது அவசரநிலை காரணமாக, உங்கள் குழந்தையை வீட்டில் தனியாக விட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். உண்மையில் இதற்குத் தயாராவதற்கான சிறந்த வழியை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். உங்கள் குழந்தையை வீட்டில் சிறிது நேரம் 15- 20 நிமிடங்கள் விட்டுவிட்டு, பக்கத்தில் சந்தைக்கு செல்லும்போது பெரிய விஷயம் ஏதும் இல்லை. இருப்பினும், உங்கள் குழந்தையை வீட்டில் தனியாக இரண்டு மணிநேரம் விட்டுச் செல்ல வேண்டிய அவசியம் உங்களுக்கு ஏற்பட்டால் என்ன செய்வது? எனவே இந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்று அவர்களைத் தயார்படுத்துவது நல்லது.
இது அவர்கள் உங்களைச் சார்ந்து இருப்பதை உணராமல் இருக்கவும், நீங்கள் வெளியில் இருக்கும் போது தாங்களாகவே விஷயங்களை நிர்வகிக்கவும் தெரிந்துகொள்ள உதவும். உண்மையில், இந்த அனுபவம் உங்கள் குழந்தை மிகவும் சுதந்திரமாகவும், பொறுப்பாகவும், நம்பிக்கையுடனும் இருக்க உதவும். உங்கள் பிள்ளையை வீட்டிலேயே விட்டுச் செல்வதற்கு முன், அவர்களைத் தயார்படுத்த நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
அவசர தொடர்பு எண்கள்
உங்கள் குழந்தையின் மொபைல் ஃபோனில் தொடர்பு எண்கள் சேமிக்கப்பட்டிருந்தாலும், குறைந்தபட்சம் 2-3 அவசரகால தொடர்பு எண்களை மனப்பாடம் செய்ய வைப்பது நல்லது. இதில் பெற்றோர், நெருங்கிய உறவினர் மற்றும் நம்பிக்கையான அண்டை வீட்டாரின் தொலைபேசி எண்கள் இருக்கலாம். தேவைப்பட்டால், இந்த தொடர்புகளின் பட்டியலை வீட்டில் உள்ள டைரியில் நீங்கள் எழுதி வைத்துவிட்டு செல்லலாம். உங்கள் குழந்தையை அழைப்பதன் மூலம் அவர்கள் சரியாகச் செயல்படுகிறார்களா என்பதை உறுதிசெய்து, நீங்கள் எப்போது திரும்பி வருவீர்கள் என்பதையும் அவர்களிடம் கூறிவிட்டு செல்லவும். முடிந்தால் உங்கள் குழந்தையைச் சற்று பார்த்துக்கொள்ளுமாறு நண்பர் அல்லது பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்கலாம்.
திரை நேர விதிகள்
பெரியவர்களின் கண்காணிப்பு இல்லாமல் இருந்தால், உங்கள் குழந்தை நாள் முழுவதையும் டிவி பார்ப்பது, வீடியோ கேம்கள் விளையாடுவது அல்லது இணையத்தைப் பயன்படுத்துவது போன்றவற்றில் ஈடுபடலாம். திரை நேரத்தைப் பற்றி நீங்கள் சற்றுக் கண்டிப்பாகப் புரிந்துகொள்வதும், இந்த விதிகளைக் கடைப்பிடிப்பது ஏன் முக்கியம் என்பதை உங்கள் பிள்ளைக்கு புரிய வைப்பதும் முக்கியம்.
பிஸியாக வைத்திருக்க வேண்டும்
குழந்தைகளுக்கு அவ்வப்போது சில கூடுதல் திரை நேரத்தை நீங்கள் அனுமதிக்கலாம். ஆனால் நாள் முழுவதும் அல்ல. நீங்கள் வெளியில் செல்லும்போது, அவர்களை பிஸியாகவும், பலனளிக்கக்கூடியதாகவும் வைத்திருக்க, துணிகளை மடிப்பது போன்ற சிறிய வீட்டு வேலைகளை அவர்களுக்குக் கொடுங்கள். கலைப் பொருட்கள் அல்லது புதிர் விளையாட்டுகளில் அவர்களை பிஸியாக வைத்திருக்கலாம். இதனால் அவர்கள் திரையை நோக்கி அதிகம் செல்லமாட்டார்கள்.
முதலில் பாதுகாப்பு
சில பொருட்கள் குழந்தை வீட்டில் தனியாக இருக்கும் போது பிரச்சனையை ஏற்படுத்தலாம். மேலும் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளலாம். உங்கள் பிள்ளைக்கு தீக்குச்சிகள் அல்லது அடுப்புகளைப் பயன்படுத்த தெரிந்திருந்தால், அவர்களை தனியாக விட்டுவிடுவது நல்ல யோசனையாக இருக்காது. எப்படியிருந்தாலும், உங்கள் குழந்தைக்கு அடிப்படை சமையலறை உபகரணங்களை எவ்வாறு கையாள்வது என்பதைக் கற்றுக்கொடுப்பது முக்கியம். மேலும் உங்கள் அனுமதியின்றி சமையலறையில் உள்ள அடுப்பு, தீப்பெட்டிகள் அல்லது கத்தி போன்ற கூர்மையான பொருட்களை எடுக்க முயற்சிக்கக் கூடாது என்று கண்டிப்புடன் சொல்ல வேண்டும்.
குழந்தைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்
உங்கள் குழந்தைகளை புண்படுத்தக்கூடிய விஷயங்களை உங்கள் பிள்ளையின் அணுகலுக்கும் அறிவுக்கும் எட்டாத இடத்தில் பூட்டி வைப்பதே சிறந்தது. நீங்கள் வீட்டில் அடிப்படை முதலுதவி பெட்டி வைத்திருப்பதையும், அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதும் உங்கள் குழந்தைக்குத் தெரியும் என்பதையும் உறுதிப்படுத்தவும். மின்வெட்டு ஏற்பட்டால் மின்விளக்குகளையும் வைத்திருங்கள். அவற்றை எவ்வாறு உபயோகிப்பது என்பதையும் சொல்லிக்கொடுங்கள்.
உணவுப் பொருட்களை சேமித்து வைக்கவும்
'எனக்கு பசிக்கிறது' என்று குழந்தை தெரிவிக்கும் போதெல்லாம் அவர்களுக்குப் நீங்கள் வீட்டில் இருக்கும் போது உணவை கொடுக்கலாம், கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால், குழந்தை தனியாக இருக்கும்போது, உங்கள் குழந்தை பசியுடன் இருக்கும்போது அல்லது அவர்களுக்குப் பசி எடுக்கும் போதெல்லாம் அவர்கள் சாப்பிடக்கூடிய உணவை நீங்கள் முன்கூட்டியே தயாரித்து வைத்துவிட்டு செல்வது நல்லது. உண்மையில், நீங்கள் சத்தான உணவைத் தயாரித்து, நீங்கள் திரும்பி வருவதற்குள் உணவை முடிக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தினால், உங்கள் குழந்தைக்கு அனைத்து உணவுகளையும் சாப்பிடும்.
கதவை திறப்பதில் கவனம் வேண்டும்
வெளியில் யார் இருக்கிறார்கள், எதற்காக வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்று முதலில் பார்க்காமல் உங்கள் பிள்ளை கதவைத் திறக்க வேண்டாம் என்று சொல்லிக்கொடுங்கள். அந்நியர்கள் யாரேனும் வந்தால், கதவைத் திறக்க வேண்டாம் என்றும் கூறிவிடுங்கள். ஏனெனில், குழந்தைகள் பல நேரங்களில் ஏமாந்து போகிறார்கள். தங்களுக்குப் பிடித்த கார்ட்டூனில் கவனம் சிதறும்போது, அவர்கள் கதவைச் சரியாக மூடுவதில் போதுமான கவனம் செலுத்த மாட்டார்கள். இந்த பாதுகாப்பு வழிமுறைகளுக்கு கவனம் செலுத்துமாறு அவர்களிடம் தெளிவாகச் சொல்வது முக்கியம். யாராவது வீட்டிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறதா என்பதை குழந்தைக்கு முன்பே தெரியப்படுத்துங்கள். இந்த பழக்கவழக்கங்கள் வழக்கமான அடிப்படையில் புகுத்தப்பட வேண்டும். நீங்கள் எப்போது வீட்டிற்குத் திரும்புவீர்கள் என்பதை உங்கள் குழந்தைக்குச் சொல்லுங்கள்.