Just In
- 1 min ago
இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி?
- 3 hrs ago
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
- 3 hrs ago
மிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..
- 4 hrs ago
திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் - எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை கும்பிடணும் தெரியுமா?
Don't Miss
- Automobiles
எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் 'ரேஞ்ச்' எங்கோ போகப்போகுது...!!
- Finance
பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளரா நீங்க.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..!
- News
குடும்ப கட்சிக்கு நாட்டு நலனாம்.. ஆட்டுக்காக ஓநாய் அழுவுது.. எஸ் வி சேகர் கடும் தாக்கு
- Sports
தோனி எப்படிப்பட்டவர் தெரியுமா? அவரை போய் இப்படி பேசலாமா.. ரவி சாஸ்திரி ஆவேசம்!
- Movies
சிலர் என்னிடம் ஆபாசமாக பேசினர்.. தவறாக நடக்க முயன்றனர்.. விஜய் பட நடிகை பரபரப்பு!
- Education
பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம்! தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்!
- Technology
அட்டகாசமான ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குழந்தைகள் உணவை மிச்சம் வைக்காமல் சாப்பிட தோட்டக்கலையை சொல்லிக்கொடுங்கள்!
அம்மாக்களுக்கு பிள்ளைகளை ஆரோக்கியமாக வளர்ப்பது தான் பெரும்படாக இருக்கும். அதற்காக அவர்கள் டிவியை பார்த்து புத்தகத்தை படித்து என்ன தான் வகைவகையாக சமைத்து கொடுத்தாலும், குழந்தைகளை சாப்பிட வைப்பது அனைத்து அம்மாக்களுக்கும் குதிரை கொம்பாக தான் இருக்கும்.
அப்படியே சாப்பிட்டாலும் குழந்தைகள் ஒரு சில காய்கறிகள், கீரைகளை சாப்பிடமாட்டார்கள். பாதியை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்காமலேயே போய்விடுகிறது.
இதற்கு என்ன தான் தீர்வு இருக்கிறது என குழப்பமா? கவலை வேண்டாம். நீங்கள் சொல்லாமலேயே உங்கள் குழந்தைகள் தானாகவே நன்றாக சாப்பிட வழி இருக்கிறது அது என்னவென்று காணலாம்.

உடல் பருமன்
இப்போது குழந்தைகள் சிறு வயதிலேயே அதிக உடல் பருமன் பிரச்சனைக்கு ஆளாகின்றனர். அதிக உடல் பருமன் பிற்காலத்தில் அதிக பிரச்சனைகளை தோற்றுவிக்கும். சக்கரை, உயர் இரத்த அழுத்தம், கார்டிவாஸ்குலர் இருதய நோய் ஆகியவற்றிக்கு உடல் பருமன் காரணமாகிறது. எனவே குழந்தைகளை சரியான உடல் பருமன் அளவில் பார்த்துக்கொள்வது அவசியம்.

தோட்டக்கலை
குழந்தைகளுக்கு செடி, கொடி மற்றும் மரங்களை வளர்க்க சொல்லித்தருவதால் பல நன்மைகள் உண்டாகிறது. குழந்தைகளுக்கு இயற்கையின் மீது ஆர்வம் வரும். நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். மன வளம் மேம்படும், அவர்களே ஒவ்வொரு செடியையும் பார்த்து பார்த்து வளர்ப்பதால் உணவை வீணக்க கூடாது என்ற எண்ணம் வரும். உடல் எடையை சரியாக பராமரிக்க இது உதவுகிறது.

ஆய்வுகள்
தோட்டக்கலையில் ஈடுபடும் குழந்தைகள் ஒரே வருடத்தில் ஆரோக்கியமான உடல் அமைப்பை பெறுகிறார்கள் என்று ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. மேலும் இது குழந்தைகளின் அறிவுவை மேம்படுத்துகிறது.

மற்றுமொரு ஆய்வு
குழந்தைகள் தொடர்ந்து இயற்கையான காய்கறிகளை சாப்பிடுவதால், அவர்களது எழுத்து மற்றும் அறிவுக்கூர்மை மேம்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. காய்கறிகளில் டின்ஏவில் ஆண்டிஆக்ஸிடன்டுகளை தக்கவைக்கின்றன. இது மூளைக்கு மிகவும் நல்லது.

குடும்ப செலவு
நீங்கள் வீட்டிலேயே உங்களுக்கு தேவையான செடிகளை வளர்ப்பதால், உங்களால் இரசாயனம் இல்லாத புத்தம் புதிய காய்கறிகளை உணவாக எடுத்துக்கொள்ள முடிகிறது. காய்கறிகளை வீட்டிலேயே பயிர் செய்வதால் செலவும் குறைகிறது. உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு இது வழிவகுக்கிறது.

ஆரோக்கியமான ஓய்வு நேரம்
குழந்தைகள் தங்களது ஓய்வு நேரத்தை டிவி பார்ப்பது, செல்போன்களில் விளையாடுவது போன்ற உடல்நலனை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவதை விட, செடிகளை வளர்ப்பது, அதற்கு நீர் ஊற்றுவது போன்ற வேலைகளில் ஈடுபடுவது சிறந்தது.