Just In
- 32 min ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- 34 min ago ஜாகிங் போகும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க எலும்புகள் அவ்வளவுதான்...!
- 2 hrs ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 3 hrs ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
Don't Miss
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- News "இது" வேற வெளியே வந்துருச்சு.. காந்திராஜ் தோட்டத்தில்.. அது பாட்டுக்கு போகுது.. திகைத்த தஞ்சாவூர்
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Movies எரிகிற கொள்ளியில் இன்னும் ஏன் எண்ணெய் ஊத்துற.. விஜய்யை கடுமையாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
நீங்கள் அறியாமல் செய்யும் இந்த தவறுகள் உங்கள் குழந்தைகளை தனிமையில் அழ வைக்கும் என தெரியுமா?
பெற்றோர்கள் செய்யும் இந்த நான்கு தவறுகள் குழந்தைகளை தனிமையில் அழ வைக்கின்றன.
பெற்றோர்கள் செய்யும் சில தவறுகள் குழந்தையை மனதளவில் எவ்வளவு பாதிக்கும் என்பதை அவர்கள் அறிவதில்லை. நீங்கள் கவனிக்காமல் செய்யும் சில தவறுகள் உங்கள் குழந்தைக்கு வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு வேதனையை கொடுத்து இரவில் அவர்களை இரகசியமாக அழ செய்யுமாம். அவை என்னவென்று காணலாம்.
1. துக்க செய்திகள்
இப்போது டிவி செய்திகள் சில கொடுரமான விஷயங்களை அப்படியே படம் பிடித்து காட்டுகின்றன. இரணுவ சண்டைகள், இறப்பு போன்ற சில விஷயங்களை குழந்தைகள் காண்பதால் அவர்கள் அதிகமாக கவலை அடைந்து, இரவு நேரங்களில் இதை நினைத்து இரகசியமாக அழுகிறார்கள்.
2. பெற்றோர்களின் சண்டை
தாய், தந்தை வீட்டில் சண்டையிடுவது எந்த ஒரு குழந்தைக்கும் பிடிக்காது. அது சிறிய விஷயமோ அல்லது பெரிய விஷயமோ மிக சத்தமாக சண்டை போடுவது குழந்தைகளை மன ரீதியாக பாதிக்கிறது. ஆனால் அவர்கள் இதை வெளியில் அவர்கள் சொல்வதில்லை. உங்கள் பிரச்சனைகளை இரவு தூங்குவதற்கு முன்பாக முடித்துக்கொள்ளுங்கள். அல்லது குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும் போது பிரச்சனைகளை பற்றி பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். வெளியில் இருக்கும் போது குழந்தைகளின் கவனம் உங்கள் பேச்சில் திரும்பாது.
3.பெற்றோர்களின் விவாகரத்து
தனது பெற்றோர்களின் பிரிவு குழந்தையை பாதிக்காது என நீங்கள் நினைத்து கொண்டிருந்தால், அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். இது மனதளவில் குழந்தையை அதிகமாக பாதிக்கும். சில குழந்தைகள் இதனை வெளியே சொல்வார்கள். சிலர் இதனை மறைத்துவிடுவார்கள். நீங்கள் விவாகரத்து பெறும் முடிவில் இருந்தால் சற்று உங்கள் குழந்தைகளை பற்றி நினைத்து பாருங்கள். அவர்களது கண்ணீருக்கு காரணமாகிவிடாதீர்கள்.
4. அவமதிக்கும் பெயர்கள்
குழந்தைகளை அவமதிக்கும் பெயர்களை வைத்து அழைக்காதீர்கள். முட்டாள், சோம்பேறி என்பது போன்ற பெயர்களை சொல்லி அழைப்பது அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும். இதனை நினைத்து அவர்கள் இரவில் இரகசியமாக மனமுடைந்து அழுவார்கள். எனவே இது போன்ற செயல்களால் பிஞ்சு மனதை காயப்படுத்தாதீர்கள்.