Just In
- 20 min ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 1 hr ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 1 hr ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 2 hrs ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
Don't Miss
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கருச்சிதைவுக்கு ஆளான பெண்கள் அடுத்த குழந்தைக்கு முயற்சி செய்ய எவ்வளவு நாள் காத்திருக்கனும் தெரியுமா?
கருத்தரிப்பது என்பது பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு காலக்கட்டமாகும். கர்ப்பம் தரிப்பது ஒரு அழகான அனுபவமாக இருக்கும்போது, கருச்சிதைவு உங்களை உடல்ரீதியாகவும் உணர்ச்சிரீதியாகவும் பாதிக்கக்
கருத்தரிப்பது என்பது பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு காலக்கட்டமாகும். கர்ப்பம் தரிப்பது ஒரு அழகான அனுபவமாக இருக்கும்போது, கருச்சிதைவு உங்களை உடல்ரீதியாகவும் உணர்ச்சிரீதியாகவும் பாதிக்கக்கூடும். கருச்சிதைவு ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். எதிர்பாராத விபத்து அல்லது புகைபிடித்தல் / குடிப்பழக்கம் போன்றவற்றால் கூட ஏற்படலாம்.
கருச்சிதைவு என்னும் பேரிழப்பிலிருந்து வெளிவர சிறந்த வழி அதை ஏற்றுக்கொள்வதும், அதைப் பற்றி வருத்தப்படுவதற்கு போதுமான நேரத்தை உங்களுக்கு வழங்குவதும் ஆகும். சில பெண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கருச்சிதைவுகளால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அந்த சூழ்நிலையில் அவர்கள் மற்ற பெண்களை விட மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருச்சிதைவால் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
தொடர்ந்து வெப்பநிலையை சோதிக்கவும்
கருச்சிதைவுக்குப் பிறகு ஒரு வாரத்திற்கு உங்கள் வெப்பநிலையை சரிபார்க்கவும். உங்கள் வெப்பநிலையை தினசரி அடிப்படையில் பதிவுசெய்து, 100 ° F ஐ விட அதிகமாக இருந்தால் மருத்துவரிடம் புகாரளிக்கவும். அதிக வெப்பநிலை உடலில் தொற்று அல்லது சிக்கல்களைக் குறிக்கும், இது உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய பிரச்சினையாகும்.
இரத்தப்போக்கு 4 வாரங்களுக்கு தொடரக்கூடும்
பொதுவாக பெண்கள் கருச்சிதைவுக்குப் பிறகு இரத்தப்போக்கு போன்ற ‘காலத்தை' அனுபவிக்கிறார்கள். இந்த இரத்தப்போக்கு ஸ்பாட்டிங்காக நிகழக்கூடும், சில பெண்கள் அதிக இரத்த ஓட்டத்தையும் அனுபவிக்கிறார்கள். இது 4 வாரங்கள் வரை நீடிக்கும், அதற்காக நீங்கள் பேட்கள் / டம்பான்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். இது பெண்களை பெரும் அவஸ்தைக்குள்ளாக்கும்.
MOST READ: பிணத்தை துண்டு துண்டாக வெட்டி கழுகுகளுக்கு உணவாக்கும் இறுதி சடங்கு... உலகின் மோசமான இறுதி சடங்குகள்!
தசைப்பிடிப்பு மற்றும் வலி
கருச்சிதைவுக்குப் பிறகு பெண்கள் தசைப்பிடிப்பு மற்றும் வயிற்று வலியை அனுபவிக்கக்கூடும். இந்த பிடிப்புகள் வேறு எதுவும் இல்லை, கருப்பை சுவர்களை சுத்தம் செய்வதற்கான ஒரு வழி. வலி தாங்க முடியாமல், குமட்டலுடன் இருந்தால், நீங்கள் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம் அல்லது உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ளலாம்.
உடலுறவைத் தவிர்க்கவும்
இரத்தப்போக்கு நிறுத்தப்படும் வரை உடலுறவு அனைத்து நிலைகளிலும் தவிர்க்கப்பட வேண்டும். இது தாயின் உடலுக்கு இயல்பு நிலைக்கு வர போதுமான நேரம் கொடுக்கும். கருச்சிதைவின் தீவிரம் அது எந்த கட்டத்தில் நடந்தது என்பதைப் பொறுத்தது. கர்ப்பத்தின் பிற்கால கட்டத்தில் நிகழும் கருச்சிதைவுகள் தாயின் வாழ்க்கைக்கும் அச்சுறுத்தலாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், மீண்டும் முயற்சிக்கும்போது உங்கள் மருத்துவரிடம் வழிகாட்டுதல் பெறுவது நல்லது.
MOST READ: குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் ஏன் ஆண்களுக்கு மொட்டை அடிக்கிறார்கள் தெரியுமா?
மீண்டும் கருத்தரிக்க முயற்சிக்கும் முன் 5-6 வாரங்கள் காத்திருக்கவும்
மீண்டும் கருத்தரிக்க முயற்சிக்கும் முன் குறைந்தது ஒரு மாதமாவது காத்திருப்பது நல்லது. கருச்சிதைவால் பாதிக்கப்பட்ட பின்னர் ஒரு மாதவிடாய் சுழற்சியை நீங்கள் கடந்து செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் இது கருப்பையை சரிசெய்ய உதவும். கருச்சிதைவால் அவதிப்படுவது உணர்ச்சிரீதியாக மோசமாக இருக்கும். அதிலிருந்து குணமடைய உங்களுக்கு போதுமான நேரம் கொடுங்கள் மற்றும் உகந்த ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் பேசவும், கவலையைத் தடுக்க உங்களை ஈடுபடுத்தவும்.