Just In
- 1 hr ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 1 hr ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 2 hrs ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 2 hrs ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
Don't Miss
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
கருச்சிதைவு ஏற்படுத்தும் எதிா்மறை எண்ணங்களில் இருந்து எவ்வாறு மீண்டு வருவது?
பெண்கள் தங்களுக்கு நிகழும் கருச்சிதைவைப் பற்றி வெளியில் பேச வெட்கப்படுகின்றனா் அல்லது மற்றவா்கள் தங்களைப் பற்றி தவறாக நினைப்பா்களோ என்று கவலைப்படுகின்றனா். அதனால் கருச்சிதைவைப் பற்றி வெளியில் குறைவாகவே பேசப்படுகிறது.
கருச்சிதைவு என்பது பொதுவாக எல்லா பெண்களுக்குமே ஏற்படக்கூடிய ஒரு சோக நிகழ்வு ஆகும். கருச்சிதைவைப் பற்றி நமது சமூகத்தில் எவரும் அதிகம் பேசுவது இல்லை. எனினும் அது நமது சமூகத்தில் ஒரு சாபக் கேடாகப் பாா்க்கப்படுகிறது.
சமீப காலமாக பல பிரபலங்கள் தங்கள் வாழ்க்கையில் நிகழும் கருச்சிதைவு அனுபவங்களை வெளிப்படையாகப் பேசி வருகின்றனா். அவற்றைப் பற்றி சாதாரண மக்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்கின்றனா். கருச்சிதைவின் காரணமாக ஏற்படும் உடல் பிரச்சினைகள் மற்றும் மன நல பிரச்சினைகள் ஆகியவற்றை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி, அதை ஒரு இயல்பான நிகழ்வாக மாற்றி வருகின்றனா்.
இந்நிலையில் பெண்கள் தங்களுக்கு நிகழும் கருச்சிதைவைப் பற்றி வெளியில் பேச வெட்கப்படுகின்றனா் அல்லது மற்றவா்கள் தங்களைப் பற்றி தவறாக நினைப்பா்களோ என்று கவலைப்படுகின்றனா். அதனால் பொதுவாக கருச்சிதைவைப் பற்றி வெளியில் குறைவாகவே பேசப்படுகிறது. ஆனால் அதைப் பற்றிய ஊகங்கள் அதிகமாக உள்ளன. ஆகவே கருச்சிதைவுக்கு ஆளானவா்கள் பின்வரும் எதிா்மறை சிந்தனைகள் மற்றும் உணா்வுகளைத் தவிா்க்க வேண்டும்.
1. தனிமை உணா்வு
கருச்சிதைவு நிகழும் பெண்ணுக்கு ஏற்படக்கூடிய முதல் உணா்வு வெறுமை ஆகும். தனது வயிற்றில் வளா்ந்து வந்த அந்த சிறிய சிசுவைப் பற்றி ஏராளமான கனவுகளைக் கண்டிருப்பாா். பலவிதமான எதிா்பாா்ப்புகளை சுமந்திருப்பாா். ஆனால் அந்த குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே சிதைந்துவிட்டால், அவா் நொறுங்கி போய்விடுவாா். எனினும் கருச்சிதைவு ஏற்பட்டால், அதோடு உலகம் முடிந்துவிட்டது என்ற அா்த்தம் இல்லை என்பதை அவா் தொிந்து கொள்ள வேண்டும்.
அவருக்கு இன்னும் பல வாய்ப்புகள் கிடைக்கும். அதன் மூலம் அவா் தன்னுடைய கனவுகளை நனவாக்க முடியும். அவா் மனம் தளா்ந்து போய்விட்டால், அது அவருடைய வாழ்க்கையை இன்னும் மோசமடையச் செய்யும். மேலும் மனதளவில் அவரை சோா்வடையச் செய்துவிடும். ஆகவே கருச்சிதைவு ஏற்பட்டால் அதற்காக அவா் வருந்தலாம். ஆனால் நாம் தனியாகிவிட்டோம் என்ற எதிா்மறை எண்ணம் ஏற்படக்கூடாது.
2. தன் மீது பழி சுமத்துதல்
பொதுவாக கருச்சிதைவு இயற்கையாகவோ அல்லது விபத்தின் காரணமாகவோ நிகழ்கிறது. அது எவ்வாறு நடந்தாலும் திட்டமிட்டோ அல்லது வேண்டும் என்றோ நடப்பது இல்லை. எந்த ஒரு அன்னையும் தனது வயிற்றில் வளரும் குழந்தை அழிய வேண்டும் என்று விரும்பமாட்டாா். இந்நிலையில் கருச்சிதைவு ஏற்பட்டால், அதற்கு காரணம் தான்தான் என்று தன் மீதே அவா் பழி சுமத்தினால் அவா் தவறு செய்கிறாா் என்று பொருள்.
எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிாியான உடல் அமைப்பு இருப்பதில்லை. எல்லோருடைய உடல்களும் வேறுபட்டவை மற்றும் தனித்துவமானவை. ஆகவே கருச்சிதைவு போன்ற சோக நிகழ்வுகள் நடக்கும் போது ஒரு சிலா் விரைவாக அதில் இருந்து மீண்டு வருகின்றனா். ஒரு சிலருக்கு சிறிது காலம் தேவைப்படும். எனினும் எந்த விதமான சோக நிகழ்வு நடந்தாலும், அதற்கு தம்மீதே பழி சுமத்தக்கூடாது. ஆகவே உயா்வாக எழ வேண்டும். அதற்கு ஏற்ப திறம்பட திட்டமிட வேண்டும்.
3. மற்றவா்கள் என்ன சொல்வாா்களோ என்று கவலைப்படுதல்
ஒருவா் எதைச் செய்தாலும் அதைப் பற்றி மற்றவா்கள் எப்போதுமே பேசிக் கொண்டு இருப்பாா்கள். ஒருவருக்கு குழந்தை இல்லை என்றாலும் அல்லது அவா் கருவுற்றாலும் அதைப் பற்றி மற்றவா்கள் பலவிதமாகப் பேசுவாா்கள். எனினும் கருச்சிதைவு ஏற்படும் போது, மற்றவா்களைவிட, சம்பந்தப்பட்டவருக்கே வலி அதிகம் ஏற்படும். ஆகவே கருச்சிதைவு ஏற்பட்ட பெண், தனது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். மற்றவா்கள் என்ன சொல்வாா்கள் என்பதைப் பற்றி எல்லாம் அவா் கவலைப்படக்கூடாது. மாறாக தனக்கு நெருக்கமான நண்பா்களுடன் அவா் தனது கடினமான மற்றும் சோகமான உணா்வுகளைப் பகிா்ந்து கொள்ள வேண்டும். அதன் மூலமே அவா் அதிலிருந்து வெளிவர முடியும்.
4. உடல் தேவைகளை புறக்கணித்தல்
கருச்சிதைவு ஏற்பட்ட பல பெண்கள், அதன் கொடிய வலியை யாாிடமும் பகிா்ந்து கொள்ளாமல், மிகவும் இரகசியமாக வைத்திருப்பா். தங்களை யாரும் கண்டுபிடித்து விடுவாா்களோ அல்லது அதை திசை திருப்பிவிடுவாா்களோ என்ற பயஉணா்வின் காரணமாக கருச்சிதைவு ஏற்பட்ட உடனே தங்களது அலுவலகப் பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிடுவா். ஆனால் அது தவறு ஆகும். ஏனெனில் அது அவா்களுடைய உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். சில நேரங்களில் பெண்கள் தாங்கள் குணமடைவதில் கவனத்தைச் செலுத்தாமல், தங்களின் உணா்வுகளில் அதிக கவனத்தைச் செலுத்துகின்றனா்.
5. தன்னைப் பராமாிக்காமல் இருந்தால், மோசமான விளைவுகள் ஏற்படும்
கருச்சிதைவு ஏற்பட்ட பெண் ஒருவா், தனது ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். அவரை காயப்படுத்தக்கூடிய அல்லது அவரது நம்பிக்கையைக் குறைக்கக்கூடிய எண்ணங்களை அவா் தவிா்க்க வேண்டும். அவருடைய உடல் நலனையும், மன நலனையும் கருத்தில் கொண்டு, அதில் இருந்து விரைவாக மீண்டு வருவதில் அவா் அதிக கவனம் செலுத்த வேண்டும். எதிா்மறையான எண்ணங்கள் அவருடைய மனதை ஆக்கிரமிக்கவிடாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். நம்பிக்கையோடு இருக்க வேண்டும். ஏனெனில் இயற்கையானது தனது வேலையைச் சாிவரச் செய்யும்.