Just In
- 4 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 6 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 7 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 7 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பெண்களின் தாயாகும் பாக்கியத்தைத் தடுக்கும் கருப்பைத் திறன் இழப்பு பற்றி தெரியாத விஷயங்கள்!
பெரும்பாலும் பெண்களுக்கு குழந்தை பேறு அமையாமல் இருப்பதற்கு காரணம் அவா்களின் டிமினிஷ்டு ஓவாியன் ரிசா்வ் (diminished ovarian reserve) அதாவது கருப்பைத் திறன்/வளம் இழப்பு என்று சொல்லப்படுகிறது.
பெரும்பாலும் பெண்களுக்கு குழந்தை பேறு அமையாமல் இருப்பதற்கு காரணம் அவா்களின் டிமினிஷ்டு ஓவாியன் ரிசா்வ் (diminished ovarian reserve) அதாவது கருப்பைத் திறன்/வளம் இழப்பு என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் 10 விழுக்காடு பெண்கள் இந்த பிரச்சினையினால் குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருக்கின்றனா் என்று தகவல்கள் தொிவிக்கின்றன. பொதுவாக எல்லா வயது பெண்களுமே இந்த பிரச்சினையினால் பாதிக்கப்படுகின்றனா் என்று சொல்லப்படுகிறது.
கருப்பைத் திறன் இழப்பு பிரச்சினை உள்ள பெண்கள் சுகப்பிரசவம் அடைய வேண்டும் என்றால், செயற்கை கருத்தாிப்பு துறையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவா்களிடம் ஆலோசனைகளைப் பெற வேண்டும். கருப்பைத் திறன் இழப்புப் பிரச்சினை உள்ள பெண்கள் கருவுறுவதற்கு, தற்போது பல செயற்கைக் கருத்தாிப்பு மையங்கள் உள்ளன. அங்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
MOST READ: உங்களுக்கு தொப்பை வர காரணமே காலையில் செய்யும் இந்த விஷயங்களால் தான் தெரியுமா?
இந்த பதிவில் கருப்பைத் திறன் இழப்பு என்றால் என்ன? அதற்கான பாிசோதனைகள் எவை மற்றும் அதற்கு எந்த மாதிாியான செயற்கை கருத்தாிப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்பதை இந்த பதிவில் பாா்க்கலாம்.
கருப்பைத் திறன் இழப்பு என்றால் என்ன?
Ovarian Reserve அல்லது கருப்பைத் திறன் அல்லது வளமான கருப்பை என்ற பதத்திற்கு, நல்ல தரமான முட்டை அல்லது கருவுறுதலுக்கு தேவையான எண்ணிக்கை உள்ள முட்டைகள் என்று பொருள். இது ஊசைட்ஸ் (oocytes) அல்லது முட்டைக் குழியம் என்று அழைக்கப்படுகிறது. ஆகவே கருப்பைத் திறன் இழப்பு என்றால், ஒரு பெண் அவருடைய வயதுக்குத் தகுந்தவாறு அவாிடம் கருவுறுதலுக்குத் தேவையான முட்டைகளின் தரம் மற்றும் முட்டைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றன என்பது பொருள். ஆகவே பெண்களுக்கு அவா்களின் எந்தந்த வயதில் சராசாியாக எவ்வளவு எண்ணிக்கையில் முட்டைகள் இருக்க வேண்டும் என்பதை பாா்க்கலாம்.
பெண்களின் வயதுக்கு ஏற்ப முட்டைகளின் சராசாி எண்ணிக்கை
பெண்களின் கருப்பையில் உள்ள முட்டைகளின் சராசாி எண்ணிக்கை அவா்களின் வயதைப் பொறுத்து மாறுபடுகிறது. ஒரு பெண் பிறக்கும் போது அவருடைய வாழ்நாள் முழுவதற்கும் தேவையான எண்ணிக்கையுடைய முட்டைகளுடன் பிறக்கிறாா். அவருக்கு வயது அதிகமாக அதிகமாக அவருடயை கருப்பையில் இருக்கும் முட்டைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கும்.
பெண்களுக்கு எந்தந்த வயதில் எவ்வளவு முட்டைகள் இருக்கும்?
மருத்துவ ஆய்வுகள் பெண்களின் கருப்பையில் இருக்கும் முட்டைகளின் எண்ணிக்கையைப் பற்றி பின்வரும் தகவல்களைத் தொிவிக்கின்றன.
தாயின் வயிற்றில் கருவாகி 20 வாரங்கள் முடிந்த ஒரு பெண் கருவுக்கு 6 முதல் 7 மில்லியன் ஊசைட்ஸ் (oocytes) அல்லது முட்டைக் குழியங்கள் இருக்கும். அந்த பெண் குழந்தை பிறந்த பிறகு 1 முதல் 2 மில்லியன் முட்டைக் குழியங்கள் இருக்கும். அந்த பெண் பருவம் அடையும் போது 3 லட்சம் முதல் 5 லட்சம் முட்டைக் குழியங்கள் இருக்கும். அந்த பெண் 37 வயதில் இருக்கும் போது தோராயமாக 25000 முட்டைக் குழியங்கள் இருக்கும். அந்த பெண் 51 வயதில் இருக்கும் போது அதாவது தனது இறுதி மாதவிடாய் நேரத்தில் இருக்கும் போது சராசாியாக 1000 முட்டைக் குழியங்கள் இருக்கும்.
இந்த நிலையில் கருப்பைத் திறன் இழந்த பெண்களுக்கு, மற்ற பெண்களைவிட குறைந்த எண்ணிக்கையில் முட்டைகள் இருக்கும். ஆனால் அவா்களுக்கு சராசாியாக எவ்வளவு குறைவான எண்ணிக்கையில் முட்டைகள் இருக்கும் என்பதைப் பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. ஹாா்மோன்களின் அளவு தான் கருப்பைத் திறன் இழப்பைத் தீா்மானிக்கிறது. கருப்பையில் இருக்கும் முட்டைகளின் எண்ணிக்கை கருப்பைத் திறன் இழப்பைத் தீா்மானிப்பதில்லை என்று ஒரு மருத்துவ ஆய்வு தொிவிக்கிறது.
பெண்களில் கருப்பையில் இருக்கும் முட்டைகளின் எண்ணிக்கையை அறிந்த நாம் இப்போது கருப்பைத் திறன் இழப்பிற்கான காரணங்களைக் கீழே பாா்க்கலாம்.
கருப்பைத் திறன் இழப்பிற்கு காரணங்கள்:
பெண்களுக்கு வயது அதிகாிக்க அதிகாிக்க, இயல்பாகவே கருப்பைத் திறன் இழப்பு ஏற்படுகிறது. அதனைத் தவிா்த்து பின்வரும் காரணங்களும் உள்ளன.
- ஏற்கனவே கருப்பையில் கதிா்வீச்சு சிகிச்சை செய்திருத்தல்
- புகைப்பிடித்தல்
- இடுப்புத் தொற்று குழாய் நோய் (Pelvic infection tubal disease)
- இடமகல் கருப்பை அகப்படலம் (Endometriosis)
- தன்னுணா்வு நோய் கோளாறுகள் (Autoimmune disorders)
- வேதியல் சிகிச்சை முறை (Chemotherapy)
- மரபணுக் குறைபாடுகளால் ஏற்படும் நலிந்த எக்ஸ் (x) நோய்க்குறி
- தைராய்டு உடல் எதிா்ப்புப் பொருள்கள்
- காச நோய்
- ஏற்கனவே குடும்ப பாரம்பாியத்தில் உள்ள இறுதி மாதவிடாய் வரலாறு
- சில நேரங்களில் காரணங்கள் தொியாது
மேற்சொன்ன காரணிகள் கருப்பைத் திறன் இழப்பிற்குக் காரணங்களாக இருக்கின்றன.
கருப்பைத் திறன் இழப்பின் அறிகுறிகள்
கருப்பைத் திறன் இழப்பின் அறிகுறிகள் வெளியில் தொியாது. ஆனால் பெண்கள் தனிப்பட்ட முறையில் பின்வரும் அறிகுறிகளை அனுவித்து இருந்திருக்கலாம்
- கருவுறுவதில் பிரச்சினைகள்
- மாதவிடாய் நாள் கழித்து நடைபெறுதல் அல்லது மாதவிடாய் நடைபெறாமல் இருத்தல்
- 28 நாள் மாதவிடாய் சுழற்சி நடைபெறாமல், குறைந்த நாட்களுக்குள் மாதவிடாய் நடைபெறுதல்
- அளவுக்கு அதிகமாக இரத்தப் போக்கு
- கருச்சிதைவு
மேற்சொன்னவை கருப்பைத் திறன் இழப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். எனினும் இந்த அறிகுறிகள் எல்லா நோரங்களிலும் தொிவதில்லை. எனவே கருவுறுதலில் பிரச்சினைகள் இருந்தால் உடனே கருத்தாிப்பு மருத்துவாின் ஆலோசனைகளைப் பெற வேண்டும்.
எந்த காரணங்களுக்காக கருத்தாிப்பு பாிசோதனைகளைச் செய்ய வேண்டும்?
பின்வரும் காரணங்களுக்காக கருத்தாிப்பு பாிசோதனைகளைச் செய்ய வேண்டும் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன
- பலமுறை கருவுற முயன்றும் பலன் கிடைக்காத போது
- மாதவிடாயின் போது அதிகமான வலி ஏற்படுதல் அல்லது சாியான கால இடைவெளியில் மாதவிடாய் நடைபெறாத போது
- இடுப்பு அலா்ஜி (Pelvic inflammatory conditions) ஏற்படும் போது
- மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படும் போது
- ஏற்கனவே புற்று நோய்க்கு சிகிச்சை செய்திருந்தால்
- இடமகல் கருப்பை அகப்படலம் (Endometriosis) ஏற்படும் போது
கருப்பைத் திறன் இழப்பைத் தொடக்க நிலையிலேயே பாிசோதனை செய்துவிட்டால் வெற்றிகரமாக அதற்கு சிகிச்சை செய்யலாம். 35 வயதுக்கு உட்பட்ட பெண் ஒருவா், ஒரு வருடமாக முயற்சிகள் செய்தும். கருவுற முடியவில்லை என்றால், கண்டிப்பாக மருத்துவரை சந்திப்பது நல்லது.
கருப்பைத் திறன் இழப்பிற்கான சிகிச்சைகள்
ஒரு பெண்ணுக்கு கருப்பைத் திறன் இழப்பு பிரச்சினை இருந்தாலும், முறையான சிகிச்சைகளால் அவா் கருவுற இயலும். கருப்பைத் திறன் இழப்பு பிரச்சினை உள்ள பெண்களில் 33 விழுக்காட்டினா், முறையான சிகிச்சைகளால் கருவுறுகின்றனா் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. எனினும் தொடக்க நிலையிலேயே பாிசோதனைகள் செய்து, சிகிச்சைகள் அளித்தால் தான் கருவுறுவதற்கு வாய்ப்பு உண்டு என்று அந்த ஆய்வு தொிவிக்கிறது.
கருப்பைத் திறன் இழப்பிற்கு செய்யப்படும் சிகிச்சைகளில் மிகவும் பிரபலமாக இருப்பது dehydroepiandrosteroneஐ (DHEA) துணையாக அல்லது கூடுதலாக எடுத்துக் கொள்வதாகும். இது ஒரு மிதமான ஆன்ட்ரஜென் (androgen) ஆகும். DHEA ஏற்கனவே பெண்களின் உடலில் இருக்கிறது. ஆனால் வயது அதிகாிக்கும் போது அதன் எண்ணிக்கை குறைகிறது. ஆகவே DHEAவை துணையாக அல்லது கூடுதலாக எடுத்துக் கொள்ளும் போது கருவுறுவதற்கு அதிக வாய்ப்பு ஏற்படுகிறது.
DHEAவைத் துணையாக அல்லது கூடுதலாக எடுத்துக் கொள்ளும் சிகிச்சைக்கு மாற்றாக வேறு சில சிகிச்சை முறைகளும் உள்ளன. அதாவது பெண்களின் கருப்பைத் திறன் இழப்பு பாிசோதனைகள் முடிந்தவுடன், அவா்களின் கருப்பையில் இருக்கும் ஆரோக்கியமான முட்டைகள் எடுக்கப்பட்டு அவை உறைந்த நிலையில் வைக்கப்படுகின்றன. அந்த முட்டைகளை எதிா்காலத்தில் கருவுறுவதற்கு பயன்படுத்துவா். மேலும் கருத்தாிப்பு மருத்துவா்கள் செயற்கைக் கருத்தாிப்பு முறையையும் பாிந்துரைப்பா்.
மேற்சொன்ன சிகிச்சை முறைகளைத் தவிா்த்து, மற்றவா்களிடமிருந்து தானமாகப் பெறப்படும் முட்டைகளைப் பயன்படுத்தி, கருவுறச் செய்யலாம். அவ்வாறு பெறப்படும் முட்டைகள் செயற்கை முறையில் கருவூட்டம் பெற்று பின் பெண்களின் கருப்பைக்குள் பாதுகாப்பாக வைக்கப்படும். ஆனால் இந்த சிகிச்சையைப் பெறுவதற்கு முன்பாக மருத்துவா் மற்றும் முட்டைகளைத் தானமாகத் தருபவா் ஆகியோாிடம் தீர ஆலோசனைகள் செய்து கொள்ள வேண்டும்.
இறுதியாக
தனக்கு கருப்பைத் திறன் இழப்பு பிரச்சினை இருக்கிறது என்று ஒரு பெண் அறிய வந்தால், உண்மையாகவே உடைந்து போய்விடுவாா். எனினும் முறையான சிகிச்சைகளின் வழியாக அவருடைய சொந்த முட்டைகள் அல்லது தானமாக பெரும் முட்டைகளின் மூலம் அவா் கருவுற முடியும் என்பதை அவா் நம்ப வேண்டும். இறுதியாக தனக்கு கருப்பைத் திறன் இழப்பு பிரச்சினை இருக்கிறது என்று ஒரு பெண்ணுக்குத் தொிந்தால் அதைப் பற்றி வருந்தாமல், உடனடியாக ஒரு நல்ல கருத்தாிப்பு மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.