Just In
- 35 min ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 1 hr ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago ஜாகிங் போகும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க எலும்புகள் அவ்வளவுதான்...!
- 3 hrs ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
Don't Miss
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Movies கில்லி ரீ ரிலீஸ்.. ஆல் ஏரியாலயும் மாஸ்.. முதல் நாளில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா?
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
உடலுறவுக்குப் பின் நிறைய ஆண்கள் ஏன் தம் அடிக்கிறார்கள் தெரியுமா? இதுதான் மேட்டரு...
உடலுறவுக்குப் பின் ஆண்கள் புகைப்பிடிப்பது ஏன், அதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி தான் இங்கு விவாதிக்கப் போகிறோம். அதுபற்றி இந்த தொகுப்பில் விளக்கமாகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
அந்த விஷயத்தை குறித்து ஓர் ஆய்வு செய்யப்பட்டது. உடலுறவில் ஈடுபட்ட பிறகு பெண்கள், அதே நெருக்கத்தோடு அளவளாவிக்கொண்டிருக்க, முத்தமிட அல்லது ஆரத்தழுவிக்கொண்டிருக்க விரும்புகிறார்களாம்.
ஆனால், ஆண்கள் பாலுறவில் ஈடுபட்ட பிறகு புகை பிடிக்கவோ, மது அருந்தவோ அல்லது சாப்பிடவோ விரும்புகிறார்களாம். இது அந்த ஆய்வின் முடிவு கூறும் கருத்து.
உடலுறவு உந்துதல்
இனப்பெருக்க நோக்கில் உடலுறவுக்கு உந்தப்படும் மனிதனின் பரிணாம மனோவியல் குறித்த ஆய்வு சூசன் ஹியூஸ் என்பவரால் செய்யப்பட்டது. இனப்பெருக்க நடைமுறையானது உடலுறவு கொள்வதோடு நின்றுவிடுவதில்லை. உடலுறவுக்கு பிந்தைய குறிப்பிட்ட நடத்தைகளிலும் அதன் தாக்கம் இருக்கும் என்று அவர் கூறுகிறார்.
இந்த ஆய்வில் பங்கேற்றோர் கேள்வி - பதில் பட்டியல் ஒன்றை நிரப்பி கொடுத்தனர். அதன்படி, ஆண்கள், கட்டித்தழுவுதல் தவிர்த்து கூடுதலாக பாலுறவு செயல்களில் ஈடுபடுவதற்கே முன்னுரிமை கொடுப்பது தெரிய வந்தது.
MOST READ: காமாலைக்கு பயப்படறீங்களா? கரும்பு ஜூஸை இப்படி குடிங்க... காமாலை ஓடியே போயிடும்...
விந்தணுக்கள்
கருத்தரிக்க ஏதுவாக விந்தணு உள்ளே தங்கியிருப்பதற்காக உடலுறவில் ஈடுபட்ட பின்னர் அசையாமல் அப்படியே படுத்திருக்கும் தூண்டுதல், பரிணாம அமைப்பின்படி பெண்ணிற்கு இருக்கக்கூடும். மாறாக, தன் மரபு பரவும் வகையில் அதிகமான உடலுறவுகளில் ஈடுபடுவதற்கான தூண்டுதலும் அதன் காரணமான விலக்கமும் ஆணுக்கு இருக்கக்கூடும் என்று ஹியூஸ் விளக்குகிறார்.
பெண்ணின் ஏக்கம்
குறுகிய காலம் மற்றும் நீண்ட கால உறவுகளை விரும்புகிறவர்களுக்கிடையே கணிசமான வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. ஆண் இணை, எதையோ சாப்பிடுவதற்கோ, அருந்துவதற்கோ அகன்ற பிறகும் பெண் இணைக்கு அவனது ஆண்மை மேல் தேடல் இருக்கிறது.
காதல் இணைவு
பாலுறவில் ஆண், பெண் இருவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒன்று உள்ளதென்றால் அது, உடல்கள் இணையும் முன்னரும், கலப்பின்போதும், உடல்ரீதியான உறவு முடிந்த பின்னரும் "ஐ லவ் யூ" "என் பிரியமே" என்று கூறுவதுதான்.
MOST READ: ஆரோக்கியம்னு நெனச்சு குழந்தைகளுக்கு தர்ற மோசமான உணவுகள் இவைதான்... இனி தராதீங்க...
நெருக்கம்
தங்கள் இணையோடு நெடுங்காலம் உறவில் நிலைத்திருக்க விரும்பும் ஆணும் பெண்ணும் உடலுறவு முடிந்த பின்னரும் இணை மேலான பிரியத்தை வெளிக்காட்டுவது அவசியம். குறிப்பாக, ஆண்கள் இவ்வுறவில் தங்கள் ஈடுபாட்டை காட்டும் வண்ணம் உடல்ரீதியான உறவுக்குப் பின்னரும் இணைமேலான அன்பை வெளிப்படுத்தவேண்டும்.