Just In
- 1 hr ago நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- 1 hr ago குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- 2 hrs ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 3 hrs ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Finance வாரம் 2 நாள் லீவு கதையெல்லாம் மலையேறிவிட்டது.. இனி 6 நாள் வேலை.. சாம்சங் அறிவிப்பால் ஷாக்..!!
- News பாஜகவுக்கு பலத்த அடி? 40 வருஷம் பிறகு உ.பி.யின் அம்ரோஹா காங்கிரஸ் வசமாகிறதா?
- Movies Ghilli movie: கில்லி படத்தின் FDFS.. திரையரங்கில் கொண்டாட்டத்துடன் என்ஜாய் செய்த பிரதீப் ரங்கநாதன்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
கருக்கலைப்பு மாத்திரை எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும்? எப்படி சாப்பிடக்கூடாது?
கருக்கலைப்பு செய்வதற்காகவோ கருத்தடைக்காகவோ மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்களாக இருந்தால் அதை எப்போது எடுக்க வேண்டும் என்று இற்த கட்டுரையில் விவாதிக்க்பட்டுள்ளது. அது பற்றிய விளக்கமான பதிவு தான் இது.
கருவுற்ற பெண்கள், கருவை கலைக்க விரும்பினால் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் முறை கருக்கலைப்பு மாத்திரைகள்தாம். ரணசிகிச்சைக்கு மாற்றாக மாத்திரைகளையே அநேகர் நாடுகின்றனர்.
கருக்கலைப்பு மாத்திரைகள் எதிர்மறை பக்கவிளைவுகளை அளிக்கக்கூடியவை. ஆகவே, மருத்துவ கண்காணிப்பில் அவற்றை பயன்படுத்துவது நல்லது. கருக்கலைப்பு மாத்திரைகளை எப்போது சாப்பிடலாம் என்பது குறித்து பெண்களிடையே பல சந்தேகங்கள் உள்ளன.
கருக்கலைப்பு மாத்திரை
கருவை கலைத்திட வேண்டும் என்று நூறு சதவீதம் உறுதியாக முடிவெடுத்தால் மட்டுமே மாத்திரைகளை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.
கருக்கலைப்பு மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன்பு அல்ட்ரா சவுண்ட் என்னும் ஸ்கேன் பரிசோதனையை செய்வது நல்லது.
பரிசோதனை
இந்தப் பரிசோதனை மூலம் கரு, கருப்பைக்குள் சரியாக உருவாகி உள்ளதா அல்லது கருப்பைக்கு வெளியே உருவாகியுள்ளதா என்று உறுதியாக அறிந்து கொள்ள முடியும். கருப்பைக்கு வெளியே கரு உருவாகியிருந்தால் கண்டிப்பாக கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது.
அது ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும். கருப்பைக்கு வெளியில் கரு உண்டாகியிருக்கும் நிலையில் கருக்கலைப்புக்கான மாத்திரைகளை சாப்பிட்டால், சினைப் பையிலிருந்து கருப்பைக்கு வரும் ஃபாலோபியன் குழல் வெடித்து உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படலாம்.
MOST READ:கருப்பு சப்போட்டா சாப்பிட்டிருக்கீங்களா? சாப்பிடுங்க... இந்த நோயெல்லாம் குணமாயிடும்...
எத்தனை நாள்?
அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, எத்தனை நாள் கர்ப்பம் என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.
கருவுற்று ஒன்பது வாரங்களுக்கு மேலாக கடந்திருந்தால் கருக்கலைப்பு மாத்திரைகளை உண்ணக்கூடாது.
கர்ப்பந்தரித்து 49 நாள்கள் கடந்திருந்தால் மருத்துவ கண்காணிப்பு இல்லாமல் மாத்திரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அட்ரீனல் செயலிழப்பு
கருத்தரித்த முதல் இரண்டு வாரங்களுக்குள் கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அக்காலத்தில் மாத்திரையின் மூலம் கருக்கலைந்திட 95 முதல் 97 சதவீதம் வாய்ப்பு உண்டு. நாட்பட்ட அட்ரீனல் செயலிழப்பு, இரத்தசோகை, இருதய நோய் மற்றும் கட்டுப்படுத்தாத வலிப்பு குறைபாடு போன்ற உடல்நல பாதிப்பு இருப்போருக்கு இவ்விஷயத்தில் முறையான மருத்துவ கண்காணிப்பு அவசியம்.
MOST READ:நியூட்ரிஷியன்கள் இந்த 6 உணவுகளை மட்டும் சாப்பிடவே மாட்டாங்களாம்... அது என்ன தெரியுமா?
கடைசி மாதவிடாய்
கடைசியாக மாதவிடாய் நின்று 49 நாள்களுக்குள் கருக்கலைப்பு மாத்திரையை சாப்பிட்டு விட வேண்டும். தவறினால், கருக்கலைப்புக்கு பின்னர் அதீத மற்றும் ஒழுங்கற்ற இரத்தப்போக்கு போன்ற வேண்டாத பின்விளைவுகள் உருவாகும்.