For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன

பெரும்பாலான சமயங்களில் குழந்தைகளுக்கு பால் கொடுக்கின்ற போது, உண்டாகின்ற பிரச்னைகள் பல இருக்கின்றன. அவற்றுக்கு தாய்மார்கள் சாப்பிடுகிற உணவுகளும் காணரமாகின்றன.

|

ஒன்பது மாதங்களுக்கு நீங்கள் கவனமாக இறைச்சி, சீஸ் (மற்றும் பிற கர்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்) எதுவும் உண்ணாமல் தவிர்த்து விட்டீர்கள், உங்கள் குழந்தையின் நலனுக்காக.

Are There Foods to Avoid While Breastfeeding?

பாதுகாப்பிற்கான உணர்வு இன்னும் அதிகமாகிவிட்ட தருணம் இது - அதனால் தற்போதும் இத்தகைய உணவுகளை உண்ணலாமா வேண்டாமா என்ற கேள்வி நியாயமே. நீங்கள் உண்ணும் உணவில் உள்ள ஒவ்வொரு மூலக்கூறும் உங்கள் பாலின் மூலம் குழந்தைக்கு செல்கிறது. நல்ல விஷயம் என்னவென்றால் தாய் பால் கொடுக்கும்போது, தவிர்ப்பதற்கு மிக பெரிய லிஸ்ட் ஒன்றும் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாய்ப்பால்

தாய்ப்பால்

"தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் என்று எதுவும் இல்லை. பெரும்பாலும் தாய் பால் கொடுக்கும் எல்லா தாய்மார்களும் எப்போதும் சாதாரணமாக எடுத்துக்கொள்வது போல எவ்வகை உணவும் உண்ணலாம். மிதமான உணவு முறை முக்கியம். சமச்சீரான உணவு உங்களையும் உங்கள் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில் தவிர்க்க வேண்டிய உணவு என்று பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும், தாய் பால் அதிக அளவில் சுரப்பதற்கும், குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் தகுந்த உணவுகளை உண்பது நல்லது. தாய்ப்பால் கொடுக்கும்போது எவ்வகை உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும், எவற்றை தவிர்க்கவேண்டும் என்றும் தெரிந்து கொள்ள மேலும் படிக்கவும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

தவிர்க்க வேண்டிய உணவுகள்

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், இதைப்பற்றி மிக கவலை படவேண்டிய அவசியமில்லை - ஆனால் உண்ணும் உணவின் முறைமையில் கவனம் செலுத்த வேண்டும். சில வகையான உணவுகளை அதிக அளவில் உண்ணும்போது, அது குழந்தையின் ஆரோக்கியத்தையும் உங்களது பால் சுரப்பியையும் பாதிக்கும். இங்கே எவ்வகையான உணவுகளை குறைத்துக் கொள்ளலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயன் பெறுங்கள்.

மது

மது

9 மாத மது விளக்கிற்கு பின் நீங்கள் கொஞ்சம் பீர் அல்லது ஒரு டம்ளர் வைன் குடிக்கவேண்டும் என்று விரும்பலாம் - அதில் தவறேதும் இல்லை. ஆனால், மது உங்கள் பாலின் வழியாக குழந்தைக்குச் செல்லும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனென்றால், அது பாலை வெளியேற்றி விடும், ஆனால், உங்கள் இரத்தத்தில் மதுவின் அளவு அதிகமாகவே இருக்கும்." சிறிய அளவு அதிகமாக இருந்தாலும் கூட, உங்கள் உடலில் இருந்து மது முழுமையாக வெளியேறிய பிறகே நீங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். உங்கள் உடலிலிருந்து மது வெளியேறிய உடன், உங்கள் பாலிலும் மது இருக்காது. நிச்சயமாக மது போதையின் கால அளவு ஒருவருக்கொருவர் மாறுபடும்.

குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு பிறகு குடிக்கவும், பின் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து மீண்டும் தாய்ப்பால் கொடுக்கலாம். அப்போது உடலுக்கு மதுவை வெளியேற்றுவதற்கான அவகாசம் கிடைக்கும். முடிந்தால் முன்னதாகவே கூட சிறிதளவு தாய்ப்பாலை எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

காபி

காபி

இரவு அதிக நேரம் குழந்தையுடன் கண் விழிக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. தாய்ப்பால் கொடுக்கும்போது காபி குடிப்பது ஒன்றும் தீங்கானது இல்லை. குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம். அதனால் உங்கள் காலை காபி, மாலை டீ மற்றும் இடையிடையில் சோடா போன்றவற்றை தாராளமாக சந்தோஷமாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்துக் கொள்ளும் காபினின் அளவு, ஒரு நாளைக்கு மூன்று கப்களுக்கு மேல் இல்லாமல் இருப்பது நல்லது. காபி உள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டியதில்லை என்றாலும், தாய்ப்பால் கொடுத்து முடித்துவிட்டு பிறகு காபி உட்கொள்ளலாம்.

மதுவைப் போல காபியும் உங்கள் இரத்தத்தின் மூலம் தாய் பாலில் கலந்து விடும் என்பதால், சில குழந்தைகளை அது நிலைகுலைக்கும். எனவே அடுத்த முறை குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும்போது, காபி உடலிலிருந்து வெளியேறி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

மீன்

மீன்

பொதுவாக எல்லா வகை மீன்களிலும் பாதரசம் இருக்கும். இது நரம்புகளைத் தாக்கி குழந்தையின் மூளையைப் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே தாய்ப்பால் கொடுக்கும்போது இவ்வகை மீன்கள் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. இதற்கு பதிலாக, வாரத்திற்கு 12 அவுன்ஸ், இறால், சால்மன், போலாக், கெளுத்தி மீன் போன்ற, பாதரசத்தின் அளவு குறைவாக உள்ள மீன்களை உண்ணலாம்.

புதினா, வோக்கோசு

புதினா, வோக்கோசு

இந்த மூன்று வகை மூலிகைகளும் அண்டி கேலக்டோகோகுகள் ஆகும், அதாவது, அதிக அளவில் உட்கொள்ளும்போது, தாய் பால் சுரப்பதை குறைத்துவிடும். "உண்மையைச்சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் அழிஞ்சில் சாப்பிடவேண்டுமென்றால், ஒரு அழிஞ்சில் சண்டவிச் சாப்பிடலாம்," சொல்கிறார் ஹாக்கின்ஸ். "அழிஞ்சில் சண்டவிச் அல்லது மிளகு கலந்த டீ ஒன்றும் தாய்ப் பாலை குறைத்துவிட போவதில்லை. மசாஜுக்காக புதினா எண்ணெயை அப்ளை செய்கிறீர்களா? அது உங்கள் இரத்தத்தில் கலக்கலாம்." புதினா, வோக்கோசு, அழிஞ்சில் போன்றவற்றை சாப்பிடும்வேளையில் பால் கம்மியாக சுரக்கிறது என்றால் அவற்றை தவிர்த்துவிடலாம்.

வலுவான மசாலாக்கள்

வலுவான மசாலாக்கள்

பூண்டு, காரசார உணவுகள் போன்றவற்றை தாய்ப்பால் தரும்போது தவிர்க்கவேண்டும் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் அது உங்கள் உணவு கலாச்சாரத்தைப் பொறுத்தது. உலகின் பல இடங்களில், தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்கள் பூண்டு, மற்றும் காரசாரமான உணவுகளை உண்டும் அவர்களது குழந்தைகள் நலமாகவே உள்ளன.

பலவகையான சுவைகளுக்கு குழந்தைகளை பழக்கப்படுத்த, இது உதவவும் செய்யும். "தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உண்ணும் உணவில் உள்ள மசாலாக்களின் சுவை ஓரிரு மணி நேரங்களில் பாலில் கலந்துவிடும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன" என்கிறார் ஷிப்லே. "இது குழந்தைகளுக்கு அசவுகரியத்தை தருவதில்லை, மாறாக பின்னாளில் உண்ணப்போகும் உணவின் சுவையின் அனுபவத்தைத் தருகிறது. தாய் பாலின் மூலமாக புதுவகையான சுவைகளை ருசிக்கும்போது, பின்னாளில் திட உணவுகளை குழந்தைகள் விரும்பி உண்ண இந்த அனுபவம் உதவும். "

மசாலா உணவுகள்

மசாலா உணவுகள்

மசாலா உணவுகளும் தாய்ப்பால் கொடுப்பதும் கண்டிப்பாக எந்த வித உறுத்தலுமின்றி கைகோர்த்து செல்லலாம், கூறுகிறார் ஹாக்கின்ஸ். ஆனால் இங்கு தான் பாரம்பரியமும் தனிப்பட்ட சுகாதாரமும் வருகிறது. சில குழந்தைகளுக்கு மசாலா உணவு வகைகள் ஒன்றுமே செய்யாது. ஆனால் அதற்கு பழக்கப்படாத குழந்தைகள் அவற்றை விரும்புவதில்லை. சாதாரணமாக இல்லாத மசாலா உணவுகளைத் தவிர்த்து, அளவாக உண்ணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Are There Foods to Avoid While Breastfeeding?

Mothers report that babies most often object to these foods while breastfeeding.
Desktop Bottom Promotion