Just In
- 1 hr ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 3 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 4 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 4 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பெண்ணின் இரத்த அழுத்தத்தைக் கொண்டு, பிறக்கும் குழந்தை ஆணா, பெணா என்பதை அறியலாம் தெரியுமா?
இங்கு ஒரு பெண்ணின் இரத்த அழுத்தத்தைக் கொண்டு, பிறக்கும் குழந்தை ஆணா, பெணா என்பதை அறியலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பெண்கள் கருத்தரித்துவிட்டால், அப்பெண்ணுக்கும், குடும்பத்தாருக்கும் என்ன குழந்தையாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள அதிக ஆர்வமாக இருக்கும். ஆனால் நம் இந்தியாவில் பெண் சிசுக் கொலைகள் நடைபெறுவதால், பாலினத்தை கேட்டு அறிவது தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நம் முன்னோர்கள் கூறும் சில அறிகுறிகளைக் கொண்டு, பலரும் வயிற்றில் என்ன குழந்தை இருக்கும் என்பதை கணித்துக் கூறுவார்கள்.
சமீபத்தில் ஒரு ஆய்வில் கருத்தரிக்க நினைக்கும் பெண்களின் இரத்த அழுத்தத்தைக் கொண்டு, அவர்களுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை அறியலாம் என கண்டறியப்பட்டுள்ளது. என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆனால் அதுவே உண்மை. இப்போது அதுக்குறித்த உண்மைகளைக் காண்போம்.
உண்மை #1
சமீபத்தில் டாக்டர். ரவி ரத்னாகரன் மேற்கொண்ட ஆய்வில், கரித்தரிக்கும் முன் பெண்களது இரத்த அழுத்தத்தைக் கொண்டு, என்ன குழந்தை பிறக்கும் வாய்ப்புள்ளதை அறியலாம் என தெரிய வந்துள்ளது.
உண்மை #2
டாக்டர். ரவி ரத்னாகரன் மற்றும் அவரது ஆய்வு குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், சுமார் திருமணமாகி கருத்தரிக்க நினைக்கும் 1400 பெண்கள் கலந்து கொண்டனர்.
உண்மை #3
ஆய்வு குழுவினர் கருத்தரிப்பற்கு 26 வாரத்திற்கு முன்பே ஒவ்வொரு பெண்ணின் இரத்த அழுத்தத்தையும் பரிசோதித்துக் கொண்டனர்.
உண்மை #4
இந்த சோதனையில் உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்ட பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்புள்ளதும், குறைந்த இரத்த அழுத்தத்தைக் கொண்ட பெண்களுக்கு பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது.
உண்மை #5
இதுக்குறித்து டாக்டர். ரத்னாகரன் கூறுகையில், ஒரு பெண்ணின் இரத்த அழுத்தம் அப்பெண்ணின் அக உடற்செயலியலைக் குறிப்பதாகவும், இதைக் கொண்டு அப்பெண் எந்த குழந்தையை சுமக்கும் வாய்ப்புள்ளதும் கண்டறியப்படுகிறதாம். உள் உடற்செயலியல் தான் குழந்தையின் பாலினத்தில் முக்கிய பங்கை வகிப்பதாகவும் டாக்டர் ரத்னாகரன் கூறினார்.
உண்மை #6
டாக்டர். ரத்னாகரன் பெண்ணின் இரத்த அழுத்தத்திற்கும், குழந்தையின் பாலினத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து, மேன்மேலும் ஆய்வு மேற்கொள்ள போவதாகவும் கூறினார்.