Just In
- 18 min ago தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- 48 min ago இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- 1 hr ago குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- 2 hrs ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
Don't Miss
- Finance பேடிஎம் UPI ஐடிகள், புதிய வங்கிகளுக்கு மாற்றம்.. RBI அதிரடி அறிவிப்பு!
- Movies பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு.. வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்!
- News ‛‛சார் ஹிந்தி ப்ளீஸ்’’.. முகம்மாறி சீமான் கூறிய வார்த்தை.. விடாத பெண் நிருபரால் கடைசியில் ட்விஸ்ட்!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆண் குழந்தை பெற்றெடுக்க பண்டையக் காலத்தில் என்னென்ன செய்தார்கள் என தெரியுமா?
இளங்கலை ஆயுர்வேத படிப்பு புத்தகத்தில் கூறப்பட்டுள்ள இந்த ரெசிபி ஆண் குழந்தை பிறக்க உதவும் என கூறப்பட்டுள்ளது.
ஆண் குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. தனது வம்சத்தை விரிவு படுத்தும் வரமாக ஆண் குழந்தைகளை பார்க்கின்றனர். ஆனால், ஒரு வம்சத்தை விரிவு படுத்தும் வரமாக கருதப்படும் ஆண் குழந்தையை ஈன்றெடுக்கு பெண்ணால் தான் முடியும் என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.
ஏனோ, அன்று முதல் இன்று வரை இந்தியாவில் லஞ்சமும், ஊழலும் போல தம்பதி மத்தியில் ஆண் குழந்தை மோகமும் சற்றும் குறையவில்லை. ஒருவேளை அதிகரிக்கும் கற்பழிப்பு குற்றங்களினால் அச்சம் கொண்டு கூட பெண் பிள்ளை பெற்றுக் கொள்ள தம்பதிகள் மறுக்கிறார்களோ?
சரி, மேட்டருக்கு வருவோம்... அது என்ன பண்டைய காலத்து முறை என்கிறீர்களா? ஆம், இளங்கலை ஆயுர்வேதம் படிக்கும் மாணவர்களின் பாட புத்தகத்தில் இப்படி ஒரு பாடம் இடம் பெற்றுள்ளது. வாங்க அதை பற்றி காணலாம்...
ஆயுஷ் அமைச்சகம்!
ஆயுர்வேத யோகா, இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி போன்றவற்றை அடங்கியது தான் ஆயுத் (AYUSH) ஆகும்.
இதில் இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் (BAMS) படிக்கும் மாணவர்களின் மூன்றாம் ஆண்டு பாட புத்தகத்தில் தான் ஆண் குழந்தை பெற உதவும் ரெசிபிக்கள் பற்றி கற்றுத் தருகிறார்கள்.
ரெசிபி 1!
உளுத்தம்பருப்பு, கடுகு எடுத்துக் கொண்டு அதை, தயிருடன் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். ஆண் கரு உண்டாகும் உதவும் இந்த செயல்திறனுக்கு புஷன்வன் என பெயரிட்டிருக்கிறார்கள்.
ஆண் குழந்தை விரும்பும் கருத்தரித்த பெண்கள், இந்த சடங்கை செய்து வந்தால், அவர்களுக்கு ஆண் குழந்தை கிடைக்கும் என இதில் கூறப்பட்டுள்ளது.
ரெசிபி 2!
தங்கம், வெள்ளை கொண்டு சிறிய ஆண் சிலை செய்து, அதை உலையில் இட வேண்டும். அது உருகிய பிறகு அதை பால், தயிர் அல்லது நீரில் கலந்து புஷ்ப நக்ஷத்திரதில் பருக வேண்டுமாம்.
ரெசிபி 3!
அரிசி மாவை நீரில் கலந்து சமைக்க வேண்டும், சமைக்கும் போது வெளிவரும் அந்த ஆவியை பெண்கள் மூச்சு மூலம் உள்ளிழுக்க வேண்டும்.
பஞ்சு உருண்டை!
பிறகு சமைத்த அரிசு மாவுடன் தண்ணீர் சேர்த்து அதில் பஞ்சு உருண்டையை நனைத்து எடுத்து கொள்ள வேண்டும். கதவு நிலை இடத்தில் தலை நிலத்தில் படும் நிலையில் படுத்து, அந்த நனைத்த பஞ்சு உருண்டையை நீரை சில துளிகள் நாசி வழியே ஊற்றி, வாய் வழியே துப்ப வேண்டும். பிறகு அந்த பஞ்சு உருண்டையை விழுங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்களை (Dangal) மிஞ்சும் ஸ்க்ரீன் ப்ளே!
தங்கள் படத்தில் அமீர் கானுக்கு ஆண் குழந்தை வேண்டும் என என்னென்னமோ செய்வார்கள். ஆனால், ஆண் குழந்தையே பிறக்காது. அவற்றை எல்லாம் மீறி, மிஞ்சி நிற்கிறது இந்த பாடப்புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் வழிமுறைகள்!
அறிவியல்!
அறிவியல் ஆராய்ச்சியில் வெகு தூரம் முன்னோக்கி சென்றுக் கொண்டிருக்கும் போது, அப்படிப்பட்ட பாடங்களை சேர்ப்பதை எவ்வாறு எடுத்துக் கொள்வது? பண்டையக் காலத்தில் கூறப்பட்டவை என்பதற்காக, என்ன? ஏது? இதனால் என்ன பயன் விளையும், அதன் தாக்கங்கள் எப்படி இருக்கும் என தெரியாமல் கண்மூடித்தனமாக அனைத்தையும் பின்பற்றுவது சரியானது அல்ல.