Just In
- 1 hr ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 1 hr ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 3 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 3 hrs ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
Don't Miss
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- News பள்ளி திறப்பு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை.. மாணவர்களுக்கு வரும் குட்நியூஸ்?
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Movies Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா திருமணம்.. செல்வி சொன்ன விஷயம்.. உறைநத பழனிச்சாமி!
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கருச்சிதைவு ஏற்பட்டால் மார்பக புற்றுநோய் வருமா?
தற்போது பெண்கள் அனைவரும் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான் மார்ப புற்றுநோய். இத்தகைய மார்பக புற்றுநோயால் நிறைய பெண்கள் பாதிக்கப்படுவதால், அனைத்து பெண்களும் மார்பக புற்றுநோயைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்காகத் தான் இந்த நோயைப் பற்றிய பல விழிப்புணர்வுகள் ஆங்காங்கு நடைபெறுகின்றன.
பொதுவாக மார்பக புற்றுநோய் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரை, முறையற்ற மாதவிடாய் சுழற்சி, அதிகப்படியான ஆல்கஹாலை அருந்துதல் மற்றும் கருச்சிதைவு போன்றவை குறிப்பிடத்தக்கவை.
எப்படி கருச்சிதைவு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்?
கருச்சிதைவு ஏற்பட்டால், மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். ஏனெனில் பெண்கள் கர்ப்பமாகும் போது, அவரது உடலில் பெண் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜனின் உற்பத்தி அதிகமாக இருக்கும். அப்படி ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகரிக்கும் போது, மார்பகத்தின் அளவு அதிகரிக்க ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, அதே சமயம் பால் சுரக்கவும் ஆரம்பிக்கும். அப்படி இருக்கும் போது, கருச்சிதைவு நடைபெற்றால், அது மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும். அதுவே இரண்டு மூன்று மாதங்கள் கழித்து கருச்சிதைவு நடைபெற்றால், அது மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பை இன்னும் அதிகரிக்கும்.
அதுமட்டுமல்லாமல், 1997 ஆம் ஆண்டு நியூ இங்கிலாந்து ஜெர்னல் ஆஃப் மெடிசன், மார்பக புற்றுநோய்க்கும், கருச்சிதைவிற்கு உள்ள தொடர்பினை கண்டறிவதற்கு சர்வே ஒன்றை நடத்தியது. இதில் கருச்சிதைவானது கருத்தரித்த ஆரம்ப காலத்தில் ஏற்பட்டால், மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்றும், அதுவே 2-3 மாதங்கள் கழித்து ஏற்பட்டால், அது மோசமாகும் வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மார்பக புற்றுநோய் இருப்பதை எப்படி கண்டுப்பிடிப்பது?
மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுப்பிடித்தால், அதனை குணப்படுத்திவிடலாம். அதற்கு அதனை எப்படி கண்டுப்பிடிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் வீட்டிலேயே சோதனையை செய்து எளிமையாக கண்டுப்பிடிக்கலாம். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், இது தான்..
* முதலில் தரையில் நேராக படுத்துக் கொண்டு, வலது கையை மேலே தூக்கி, கழுத்தின் பின்புறம் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு இடது கையின் விரல்களால், மார்பகம் மற்றும் மார்பகத்தைச் சுற்றியுள்ள இடத்தை வட்ட சுழற்சியில் மென்மையாக மசாஜ் செய்வது போல் தேய்த்து பார்க்க வேண்டும். இதேப் போன்று இடது பக்கமும் செய்து பார்க்க வேண்டும். அப்போது ஏதேனும் கட்டி போன்று தென்பட்டால், அது மார்பக புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறியாகும்.
* அதுமட்டுமல்லாமல், மார்பக காம்புகளில் இருந்து ஏதேனும் நீர்மம் அடிக்கடி வெளிவந்தாலோ அல்லது மார்பக காம்புகளின் நிறம் மாறுபட்டாலோ அல்லது மார்பகத்தின் வடிவம் வித்தியாசமாக இருந்தாலோ, உடனே மருத்துவரை அணுக வேண்டும்.