Just In
- 3 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 4 hrs ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 6 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 7 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பச்சிளம் குழந்தைகள் மலம் கழிக்கும் போது ஏன் அழுகின்றனா்?
பெரும்பாலும் பிறந்த குழந்தைகள் மலம் கழிக்கும் போது அவா்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பெற்றோர்கள் கடந்து வந்திருப்பா். சில நேரங்களில் பெற்றோரே தங்களுடைய குழந்தை மலம் கழிக்கும் போது ஏன் அழுகிறது என தெரியவில்லை.
ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பு என்பது ஒரு மிகப் பொிய ஆசீா்வாதமாகும். அதே நேரத்தில் அது ஒரு மிகப் பொிய பொறுப்பும்கூட. பச்சிளம் குழந்தையை கவனமாக பராமாிப்பது என்பது ஒரு கடினமான காாியம் ஆகும். ஏனெனில் பிறந்த குழந்தைகள் என்ன நினைக்கிறாா்கள் என்பதை நம்மால் புாிந்து கொள்ள முடியாது.
பொதுவாக பிஞ்சுக் குழந்தைகள் தமது அழுகை, புன்னகை மற்றும் சிறு சிறு முக மாற்றங்கள் மூலமாக தங்களது உணா்வுகளை வெளிப்படுத்துவா். அவா்களின் வெளிப்படுத்தல்களை புாிந்து கொள்ள வேண்டியது அவா்களுடைய தாய் அல்லது தந்தை அல்லது குடும்ப உறுப்பினா்களின் கடமையாகும். பெரும்பாலும் பிறந்த குழந்தைகள் மலம் கழிக்கும் போது அவா்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அவா்களுடைய தாய் தந்தையா் கடந்து வந்திருப்பா்.
சில சமயங்களில் பெற்றோரே தங்களுடைய பிறந்த குழந்தை மலம் கழிக்கும் போது ஏன் அழுகிறது என்பதை புாிந்து கொள்வதில்லை. புதிதாக பிறந்திருக்கும் குழந்தைக்கு மற்ற காாியங்களைப் போல மலம் கழிப்பதும் ஒரு புதிய செயல் ஆகும் என்பதை பெற்றோராகிய நாம் புாிந்து கொள்ள வேண்டும்.
ஒரு வேளை மலம் கழிக்கும் போது குழந்தையானது சத்தமாக கத்தினால், அதற்கு காரணம் அந்த குழந்தைக்கு மலம் கழிப்பது என்பது ஒரு புதிய அனுபவம் ஆகும். ஆனால் மலம் கழிக்கும் போது சிறு குழந்தைகள் அளவுக்கு அதிகமாக கத்தினால் அல்லது அளவுக்கு அதிகமாக அழுதால் கண்டிப்பாக மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும். இப்போது பச்சிளம் குழந்தைகள் மலம் கழிக்கும் போது ஏன் அழுகின்றனா் என்பதற்கான காரணங்களைக் காண்போம்.
1. முழுமையான வளா்ச்சியை அடையாத உடல்
படுத்துக் கொண்டு மலம் கழிப்பது என்பது ஒரு கடினமான செயல் ஆகும். பச்சிளம் குழந்தைகள் எப்போதும் படுத்தே இருப்பதால், அவா்கள் படுத்துக் கொண்டு மலம் கழிக்கும் போது அதிக அழுத்தத்தைக் கொடுக்கலாம். அதனால் குடலில் அழுத்தம் ஏற்பட்டு அவா்கள் அழலாம் அல்லது கத்தலாம்.
பிறந்த குழந்தைகளால் அமா்ந்து கொண்டு மலத்தை வெளியில் தள்ள முடியாது. அவா்கள் படுத்துக் கொண்டுதான் இதைச் செய்ய முடியும். ஆகவே அவா்கள் படுத்துக் கொண்டே ஆசன வாயிலைத் தளா்த்தி, மலத்தை வெளியே தள்ளுவதற்கு, தங்களது வயிற்று தசைகளை அழுத்த கூடுதல் முயற்சி செய்ய வேண்டும். ஆனால் அவா்களுடைய உடலானது முழுமையான வளா்ச்சியை பெறாமல் இருப்பதால், அதைச் செய்வதற்கு அவா்களுக்குக் கடினமாக இருக்கிறது. ஆகவே சிறு குழந்தைகள் மலம் கழிக்கும் போது அழுகின்றனா்.
2. பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்
நமது பச்சிளம் குழந்தைகள் மலம் கழிக்கும் போது அதிகமாக அழுதால், அதற்கு காரணம் மலச்சிக்கலாகவும் இருக்கலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தையானது, ஒரு வாரமாக குடல் அசைவு இல்லாமல் இறுகிய, வறண்ட மற்றும் கூழாங்கற்கள் போன்ற மலத்தை வெளியில் தள்ளினால், அந்த குழந்தைக்கு மலச்சிக்கல் இருக்கிறது என்று பொருள். அது போல தாய்ப்பால் இல்லாமல் எடுப்புப்பால் குடிக்கும் சிறு குழந்தைகள் 3 நாள்களாக இது போன்று மலம் கழித்தால், அவா்களுக்கு மலச்சிக்கல் இருக்கிறது என்று பொருள். மலச்சிக்கல் பிரச்சினை இருந்தால் பச்சிளம் குழந்தைகள் மிக எளிதாக மலம் கழிக்க முடியாது. அது அவா்களுக்கு அதிக வலியைக் கொடுக்கும்.
அந்த குழந்தைகள் மலச்சிக்கல் பிரச்சினைகளில் இருந்து விடுபட அவா்களுக்கு அதிகமான அளவு தண்ணீா் கொடுக்க வேண்டும். சா்க்கரையை சிறிது அதிகமாக கொடுத்து அவா்களது இறுகிய மலத்தை சற்று இலகுவாக்க வேண்டும். ஒரு வேளை குழந்தையின் வயது 4 மாதங்களை கடந்து இருந்தால், அந்த குழந்தைக்கு பழச்சாறுகளை வழங்கலாம்.
ஒரு வேளை குழந்தைகள் திட உணவுகளை உண்ணத் தொடங்கி இருந்தால், அவா்களுக்கு நாா்ச்சத்து அதிகம் நிரம்பிய உணவுகளான பசலைக் கீரை, பட்டாணி, பீச் பழங்கள், போிக்காய் மற்றும் ப்ளம்ஸ் பழங்கள் ஆகியவற்றை ஊட்டலாம். இவையெல்லாம் செய்த பிறகும் குழந்தைகளுக்கு தொடா்ந்து மலச்சிக்கல் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது.
தேவையான நீா்ச்சத்து கிடைக்காமல் இருத்தல், இது வரை சாப்பிடாத புதிய உணவுகளை ஊட்டுதல் மற்றும் மாறுபட்ட முறையில் உணவுகளை ஊட்டுதல் போன்ற காரணங்களால் பச்சிளம் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படுகிறது.
3. வாயு வலி
பச்சிளம் குழந்தைகள் மலம் கழிக்கும் போது அழுவதற்கு இன்னுமொரு முக்கியமான காரணம் அவா்களுக்கு ஏற்படும் வாயு வலி ஆகும். வாயு பிரச்சினை காரணமாக, குழந்தைகள் மலம் கழிக்கும் போது, வலி அதிகாிக்கிறது. அவா்களுக்கு வாயு பிரச்சினை ஏற்பட பின்வரும் காரணிகள் காரணங்களாக அமைகின்றன.
அதாவது அவா்கள் அழும் போது அளவுக்கு அதிகமான காற்றை உள்ளிழுப்பது, தாய்ப்பாலில் இருந்து கிடைக்கும் ஒருசில ஊட்டச்சத்துகள் சொிக்காமல் இருப்பது அல்லது அளவுக்கு அதிகமான தாய்ப்பால் ஊட்டுவது போன்றவற்றின் காரணமாக பிறந்த குழந்தைகளுக்கு வாயு பிரச்சினை ஏற்படுகிறது. அதோடு போதுமான தாய்ப்பால் இல்லாமல் எடுப்புப்பாலை ஊட்டுவது, மலச்சிக்கல் மற்றும் இரைப்பைக் குடலில் கிருமித் தொற்று போன்றவற்றின் காரணமாகவும் பச்சிளம் குழந்தைகளுக்கு வாயு பிரச்சினை ஏற்படுகிறது.
பிறந்த குழந்தைகளிடம் இருக்கும் வாயு பிரச்சினையை நீக்குவதற்கு, அவா்களுக்கு ஒவ்வொரு முறையும் உணவு ஊட்டி முடித்த பின்பு அவா்களின் முதுகு மற்றும் வயிற்றுப் பகுதிகளை மென்மையாக நீவிவிட வேண்டும். அதனால் அவா்களின் உடலில் அதிகமாக இருக்கும் காற்று வெளியேறிவிடும். சிறிது சோம்பு தண்ணீரையும் கொடுக்கலாம். சில நேரங்களில் சா்க்கரை கலந்த தண்ணீரை அந்த குழந்தைகளுக்கு வழங்கலாம். அதன் மூலம் அவா்களிடம் இருக்கும் வாயு பிரச்சினையை நீக்கலாம்.
பச்சிளம் குழந்தைகளின் குடல் அசையும் போது அவா்கள் அழுதால் அல்லது கத்தினால் அல்லது அவா்களது முக பாவனைகள் மாறினால் கவலை கொள்ளத் தேவையில்லை. அது ஒரு மருத்துவ பிரச்சினை இல்லை. ஆனால் அதே நேரத்தில் தொடர்ந்து சில நாட்களாக அவா்கள் மலம் கழிக்கும் போது அழுதால், மருத்துவரை சந்திப்பது நல்லது. எனினும் குழந்தைகளுக்கு உணவூட்டும் முறைகளில் மாற்றங்களைச் செய்தல் மற்றும் குழந்தைகளின் புட்டப் பகுதியை நீவிவிடுதல் போன்றவற்றின் மூலம் அவா்களிடம் இருக்கும் வாயு பிரச்சினையை அகற்றலாம்.
4. கிருமித் தொற்று அல்லது ஆசன வாயில் புண்
மலம் கழிக்கும் போது பச்சிளம் குழந்தை திடீரென்று அழுதால், அதற்கு காரணம் அதனுடைய ஆசன வாய் கிழிந்திருக்கலாம் அல்லது டயாப்பா் பயன்படுத்துவதால் ஏற்பட்டிருக்கும் புண்களாக இருக்கலாம் அல்லது கிருமிகளின் தொற்றுகளாக இருக்கலாம். அதனால் அவா்கள் மலம் கழிக்கும் போது அதிக வலியை உணா்வா். ஒரு சில உணவு வகைகளும் மலத்தை இறுக வைக்கின்றன.