Just In
- 19 min ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 59 min ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 1 hr ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 2 hrs ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
Don't Miss
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கைக்குழந்தை வயிற்று வலியால் அழுதால் என்ன செய்ய வேண்டும்?
சின்ன சின்ன உடல் உபாதைகள் வர ஆரம்பித்து விட்டால் குழந்தைகள் பயங்கரமாக அழ ஆரம்பித்து விடுவார்கள். பொதுவாக கைக்குழந்தைகள் அடிக்கடி வயிற்று வலி பிரச்சினையால் அவதிப்படுவது அதிகம்.
பிறந்த குழந்தையை சமாளிப்பது என்பது லேசுபட்ட காரியமல்ல. அதற்கு நீங்கள் ரெம்ப பொறுமையாக இருக்க வேண்டும். அதிலும் சின்ன சின்ன உடல் உபாதைகள் வர ஆரம்பித்து விட்டால் குழந்தைகள் பயங்கரமாக அழ ஆரம்பித்து விடுவார்கள். பொதுவாக கைக்குழந்தைகள் அடிக்கடி வயிற்று வலி பிரச்சினையால் அவதிப்படுவது அதிகம்.
இதற்கு நீங்கள் அவர்களின் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும். இப்படி குழந்தைகளுக்கு எந்த மாதிரியான செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதை கீழ்க்கண்டவாறு நாம் காணலாம்.
MOST READ: சர்க்கரை நோய் வராமல் இருக்க நம் முன்னோர்கள் பயன்படுத்தியது இதை தானாம்!
செரிமான சிக்கல்
குழந்தைகளுக்கு செரிமான சிக்கல் வந்து விட்டால் உடனே அழத் தொடங்கி விடுவார்கள். மேலும் பிறந்த குழந்தைகளுக்கு அதன் ஜீரண மண்டலம் இன்னும் சரியாக வளர்ச்சி பெற்றிருக்காது. உணவை வயிற்றுக்கு அனுப்பும் உணவுக் குழாய் வால்வு இன்னும் வளர்ச்சியடைய வேண்டியிருக்கும். இதனால் தான் பிறந்த குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்று வலி, வாந்தி, எதுக்களித்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.
பொதுவான காரணங்கள்
* வைரல் அல்லது பாக்டீரியா தொற்று. பொதுவாக குழந்தைகள் எதாவது பொருளை வாயில் வைப்பதால், தூசிகளில் விளையாடி விட்டு கையை வாயில் வைப்பதால் நோய்த்தொற்றுகள் உண்டாகிறது.
* பிறந்த குழந்தைகள் ஆரம்ப காலத்தில் சாப்பிடும் போதோ அல்லது பால் குடிக்கும் போதோ காற்றை உறிஞ்சிக் கொள்ளும். இது குழந்தைகளுக்கு வயிற்றில் வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும்.
* அதே மாதிரி குழந்தைகள் திட உணவுகளை உண்ண ஆரம்பிக்கும் போது அவர்கள் மலச்சிக்கலை அனுபவிக்கலாம்.
லாக்டோஸ் சகிப்புத்தன்மை
பால் போன்ற பொருட்களை உண்ணும் போது, அந்த உணவுப் பொருட்கள் சரிவர செரிமானமாகாவிட்டால், செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதன் அறிகுறிகளை கீழ்க்கண்டவாறு காணலாம்
அறிகுறிகள்:
* எதற்கெடுத்தாலும் குழந்தை அழத் தொடங்குவர்
* பாக்டீரியா தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
* வயிற்று போக்கு
* வாந்தி
* மலச்சிக்கல்
* வயிற்று வீக்கம்
மேற்கண்ட அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் உடனே குழந்தைகள் நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.
எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும்?
* அதீத காய்ச்சல்
* தீவிர வயிற்று போக்கு
* பசியின்மை
* எடை இழப்பு
* தொடர்ச்சியான விக்கல்கள்
* மூச்சு விட சிரமம்
* பச்சை கலரில் வாந்தி எடுத்தல்
* வாந்தி எடுக்கும் போது இரத்தம் வருதல்
* நீர்ச்சத்துயின்மை
* மலத்தில் இரத்தம் வருதல்
* அதிகப்படியான சோம்பல்
* மலம் கழிக்க முடியாமல் போதல்
மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.