Just In
- 3 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 4 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 5 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 5 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்பதை எப்படிக் கண்டறிவது?
குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் போதுமா? அது குழந்தைக்கு போதுமானதாக இருக்கிறதா என்பதை எப்படி கண்டறிவது என்பது குறித்து சில யோசனைகள்
இன்றைக்கு இருக்கும் இளைய தலைமுறையினருக்கு குழந்தை வளர்ப்பு என்பது பெரும் சிக்கல் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. வளர்ந்திருக்கும் மருத்துவ முறை, பெருகி வரும் தனிக்குடித்தனம்,நவீன வாழ்க்கை முறை ஆகியவை குழந்தை வளர்ப்பு என்பதை ஏதோ சவாலான விஷயமாக மாற்றியிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.
இளம்
தாய்மார்கள்
பலருக்கும்
எழக்கூடிய
சந்தேகம்
தான்
இது.
நாள்
முழுவதும்
குழந்தை
தாய்ப்பால்குடித்தாலும்...
என்
குழந்தைக்கு
போதுமான
தாய்ப்பால்
கிடைக்கிறதா?
குழந்தையின்
தேவையை
பூர்த்தி
செய்கிறதா
என்ற
கவலைபடாத
தாய்மார்களே
இல்லை
எனலாம்.
அவர்களை
வழி
நடத்தக்கூடிய
கட்டுரை
தான்
இது.
குழந்தைக்கு
போதுமான
அளவு
தாய்ப்பால்
கிடைத்து
விட்டது
என்பதை
நீங்கள்
சில
அறிகுறிகளை
வைத்தே
கண்டுபிடிக்கலாம்.
குழந்தை குடிக்கும் போது :
குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது உங்கள் மார்ப்பகத்தில் தொடர்ந்து உறியும். அப்படி தொடர்ந்து உறியும் போது தான் தாய்ப்பால் சுரப்பும் அதிகரித்து குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்கிறது.
குழந்தை தொடர்ந்து உறிந்து அதற்கு தாய்ப்பால் கிடைத்தால் அதனை முழுங்கும்.
அசைவு:
தாய்ப்பால் கிடைத்துவிட்டது என்பதை குழந்தையின் தாடை அசைவை வைத்து குழந்தை முழுங்குகிறதா இல்லையா என்பதை பார்த்து கண்டுபிடிக்கலாம். குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்கவில்லையெனில் முழுங்கும் தாடை அசைவு இருக்காது.
தொடர்ந்து உறிந்து கொண்டேயிருக்கும் அந்த சோர்விலேயே பல நேரங்களில் தூங்கி விடுவதும் உண்டு. இதனால் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது அதன் தாடை அசைவை உன்னிப்பாக கவனியுங்கள்.
ஒரு மணி நேரம் :
பொதுவாக தாய்ப்பால் குடித்ததும் குழந்தை உற்சாகமாக இருக்க வேண்டும். அதைவிடுத்து எப்போதும் சோர்வாக இருந்தால் போதுமான தாய்ப்பால் கிடைக்கவில்லை என்று அர்த்தம்.
தாய்ப்பால் குடித்த ஒரு மணி நேரம் வரை குழந்தை பசிதாங்கும். அதற்குள்ளான நேரத்தில் தொடர்ந்து குழந்தை பசிக்காக அழுதாலும் அதற்கு தாய்ப்பால் போதவில்லை என்று அர்த்தம்.
டயாப்பர் :
குழந்தையின் சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.அதே போல மலத்தின் நிறமும் இங்கே கவனிக்க வேண்டியது முக்கியம் .
குழந்தை பிறந்த முதல் நாள் கருப்பு நிறமாகவும் பின்னர் பச்சை.... நான்காம் நாள் அல்லது ஐந்தாம் நாளுக்குத் தான் மஞ்சள் நிறத்தில் மலம் வெளியாகும். இதன் பிறகு குழந்தை உட்கொள்ளும் உணவு பொறுத்தே மலத்தின் நிறமிருக்கும்.
உடல் எடை :
குழந்தை பிறந்த போது இருந்த எடைக்கும் பின் ஒரு வாரத்திற்கு பிறகு எடை வித்யாசங்கள் இருக்கும். அதாவது பிறந்திருப்பதை விட ஐந்து முதல் ஏழு சதவீதம் எடை குறையலாம். ஆனால் பத்து சதவீதத்திற்கும் அதிகமாக உடல் எடை குறைந்தால் குழந்தைக்கு தேவையான உணவு கிடைக்கவில்லை என்று அர்த்தம்.
முதல் பத்து நாட்கள் மட்டுமே இந்த எடை குறைவு பிரச்சனை இருக்கும். அதன் பிறகு நிலையான எடையில் இருக்க ஆரம்பித்து விடும். அதைத் தாண்டியும் குழந்தையின் எடையில் மாற்றங்கள் தெரிந்தால் அதற்கு உணவு போதவில்லை அல்லது உடலில் நோய்த்தொற்று இருக்கிறது என்று அர்த்தம்.
மார்பகம் :
குழந்தை தாய்ப்பால் குடிப்பதற்கு முன்னும் பின்னும் உங்களுடைய மார்பகத்தை கவனித்தால் இந்த மாற்றம் உங்களுக்கு தெரியும். குடிப்பதற்கு முன் உங்கள் மார்பகம் மிகவும் பாரமாகவும் விறைப்பாக இருப்பது போன்றும் தோன்றும். இதே குழந்தை குடித்த பிறகு மிகவும் லேசானதாக தோன்றிடும்.
இடைவேளி :
குழந்தை பிறந்த முதல் மூன்று வாரங்களுக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது போன்ற சூழல் உருவாகும். அதன் பின்னர் இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை நான்கு மணி நேரங்களுக்கு ஒரு முறை என்று அந்த இடைவேளி குறையும்.
இந்த இடைவேளியை கணக்கிடுங்கள். இடைவேளி நேரம் குறைவாக இருந்தால் குழந்தைக்கு தொடர் பசியிருக்கிறது, வயிறு நிறையவில்லை என்று அர்த்தம்.
தூங்கும் போது :
சில குழந்தைகள் தூங்கும் நேரத்தில் மட்டும் வந்து தாய்ப்பால் குடிக்க நினைப்பார்கள். அது தாய்ப்பால் தேவைக்காக அல்லாமல் ஒரு அரவணைப்புத் தேவையாக இருக்கும்.
பகல் நேரங்களில் அல்லது முழித்துக் கொண்டிருக்கும் போது தாய்ப்பால் கேட்காமல் சரியாக தூங்கும் போது மட்டும் தாய்ப்பால் கேட்டால்... அது குழந்தை பசியாற்ற அல்ல என்பதை புரிந்து கொள்ளலாம்.
அதிகமாக :
போதுமான தாய்ப்பால் கிடைக்கிறதா என்ற சந்தேகம் ஒரு பக்கம் என்றால் குழந்தைக்கு ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான தாய்ப்பால் கொடுத்துவிட்டோமா என்கிற பயமும் ஏற்படுவதுண்டு. தாயிடமிருந்து நேரடியாக குடிக்கும் குழந்தைக்கு இந்தப் பிரச்சனை இருக்காது. ஏனென்றால் தனக்குத் தேவையான பாலை தானே உறிந்து குடிக்க வேண்டும். அதனால் குழந்தை தனக்குத் தேவையானளவு மட்டுமே உறிந்து குடிக்கும்.
பாட்டில் பால் :
பாட்டிலில் எடுத்து வைத்த தாய்ப்பாலோ அல்லது பவுடரை கலந்து கொடுப்பது அல்லது பசும்பாலை கொடுப்பது போன்ற நேரத்தில் தான் குழந்தைக்கு அளவுக்கு அதிகமான பால் சென்றிடும். ஏனென்றால் பாட்டிலில் குடிக்கும் போது அதன் நிப்பில் வழியாக பால் வந்து கொண்டேயிருக்கும். அதனை நிறுத்த வேண்டும் தனக்குப் போதும் என்று குழந்தைகளால் உணர முடியாது அளவுக்கு மீறி குடித்து விடுவார்கள்.