Latest Updates
-
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க..
தாஜ்மஹாலின் 22 ரகசிய அறைகளுக்குள் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன தெரியுமா? ஒருவழியா பதில் கிடைச்சிருச்சு...!
தாஜ்மஹால் என்பது இந்தியாவின் மிகச்சிறந்த கட்டமைப்புகளில் ஒன்றாக இருப்பதுடன் உலக அதிசயங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. முகலாயப் பேரரசர் ஷாஜகான் தனது அன்பு மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவில் கட்டிய வெள்ளை-பளிங்கு கல்லறை உலக காதலர்களின் நினைவுச்சின்னமாக இருப்பதுடன் ஆண்டுதோறும் உலகம் முழுவதுமிருந்து அதிகளவு மக்களால் பார்வையிடப்படும் இடமாக இருக்கிறது.
மற்ற பாரம்பரிய சின்னங்களைப் போலவே, தாஜ்மஹால் அதற்கென் பல சொந்த கட்டுக்கதைளையும், மர்மங்களையும் கொண்டுள்ள, மேலும் இந்த 'மர்மங்கள்' அல்லது கட்டுக்கதைகள் இந்தியாவின் பிளவுவாத சக்திகளில் உருவாக்கப்பட்டு இன்று வரை பரப்பப்பட்டு வருகிறது.

அந்த கட்டுக்கதைகளின் படி "தேஜோ மஹாலயா' என்று அழைக்கப்படும் ஒரு பழங்கால சிவன் கோவில் மீதுதான் இது கட்டப்பட்டது என்றும், தாஜ்மஹாலின் கீழ் 22 'ரகசிய அறைகள்' உள்ளன, அங்கு இந்து தெய்வங்களின் சிலைகள் மற்றும் சிலைகள் சேமிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.
தாஜ்மஹாலின் அடியில் உண்மையில் ரகசிய அறைகள் உள்ளதா?
இதில் பாதி உண்மையும், பாதி பொய்யும் உள்ளது. தாஜ்மஹாலின் அடித்தளத்தில் உண்மையில் 'அறைகள்' உள்ளன, ஆனால் அவற்றில் இரகசியம் எதுவும் இல்லை. இவை உண்மையில் அறைகள் அல்ல, இவை கல்லறையின் அடித்தளத்தில் கதவுகள் மூலம் இணைக்கப்பட்ட ஒரு நீண்ட வளைவு நடைபாதை. இந்திய தொல்லியல் துறையால் (ASI) இப்பகுதி தொடர்ந்து சுத்தம் செய்யப்படுகிறது, ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக எப்போதும் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த அடித்தள அறைகள் கல்லறைக்கு கட்டமைப்பு ஆதரவை வழங்குகின்றன.
இந்த ரகசிய அறைகளுக்குள் என்ன இருக்கிறது?
பல ஆண்டுகளாக, இந்த ரகசிய அறைகளின் உள்ளடக்கங்கள் பற்றி பல கட்டுக்கதைகள் கூறப்படுகின்றன, பலர் இந்த அறைகள் ஒரு மறைக்கப்பட்ட நிலத்தடி அறையின் ஒரு பகுதியாக இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் மிகவும் சர்ச்சைக்குரிய கட்டுக்கதைகளில் ஒன்று, தாஜ்மஹாலை ஒரு சூடான விவாதத்தின் தலைப்பாக மாற்றியது, இந்த அறைகளில் இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகள் இருப்பதாகக் கூறி, கல்லறையை ஒரு இந்து கோவில் என்று வாதாடுகிறது.

2022 ஆம் ஆண்டில், அலகாபாத் உயர் நீதிமன்றம், தாஜ்மஹால் உண்மையில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவில் என்று கூறி பாஜக இளைஞர் அணித் தலைவர் தாக்கல் செய்த மனுவை ரத்து செய்தது, மேலும் "20 க்கும் மேற்பட்ட பூட்டிய அறைகளின் உள்ளடக்கங்கள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டது."
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சில நாட்களுக்குப் பிறகு, சமூக ஊடக தளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களின் பரவலைத் தடுக்கும் முயற்சியில் ASI 'ரகசிய அறைகள்' என்று அழைக்கப்படும் அறைகளின் படங்களை வெளியிட்டது. 1978 ஆம் ஆண்டு வரை பொது பார்வையாளர்களுக்காக இந்த அறைகள் திறந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
'தேஜோ மஹாலயா' சர்ச்சை
தாஜ்மஹாலின் அடியில் உள்ள இந்த ரகசிய அறைகள் பற்றிய மர்மம், இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட அமைப்பினரின் பிரபலமான சதி கோட்பாடுகளில் ஒன்றாகும், இது பண்டைய காலங்களில் ஒரு கோவிலாக இருந்தது என்று கூறுகிறது. 2022 ஆம் ஆண்டு தனது மனுவில், பாஜக இளைஞர் பிரிவுத் தலைவர் ஒருவர், தாஜ்மஹால் முன்பு 'தேஜோ மஹாலயா' என்று அழைக்கப்பட்டதாகக் கூறினார் - இது "ஒருவேளை 4 ஆம் நூற்றாண்டில் அரண்மனையாக செயல்படுவதற்காக கட்டப்பட்ட சிவன் கோயில்". என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
தாஜ்மஹாலை கி.பி 1145 இல் ராஜா பரமர்தி தேவ் கட்டி முடித்ததாக மனுதாரர் கூறியிருந்தார், ஏனெனில் அவர் தாஜ்மஹாலின் உண்மையான வரலாறு என்று அவர்கள் நினைப்பதை உலகிற்கு கூற விரும்பினார்கள். அவர்களின் குற்றச்சாட்டுகள் கட்டுக்கதை என நிரூபிக்கப்பட்டு, தாஜ்மஹால் தனது அன்பான மனைவியின் நினைவாக ஒரு அரசரால் கட்டப்பட்ட கல்லறையைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டது.



Click it and Unblock the Notifications











