Just In
- 1 hr ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 1 hr ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 2 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- 3 hrs ago வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
Don't Miss
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்த 5 ராசிக்காரங்க பிரச்சனைனாவே ஓடி ஒழிஞ்சிப்பாங்களாம்... இவங்கள நம்பி சண்டைக்கு போகாதீங்க!
தனுசு ராசிக்காரர்களின் மனநிலை சமநிலையில் இல்லாத போது, அவர்கள் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வார்கள். அவர்கள் சூழ்ச்சியான வார்த்தைகள் மற்றும் செயல்களால் சூழ்நிலையை மாற்றலாம்.
பெரும்பாலான மக்கள் தங்கள் தோற்றம் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் ஹீரோ, ஹீரோயின் போல இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நிஜ வாழ்க்கையில் வலிமையானவர்களாக இருப்பது மிகவும் கடினம். மக்களிடம் உறுதியாக நின்று உங்கள் கருத்தை கூறுவது வலிமையானவர்களால் மட்டுமே செய்ய முடியும். எல்லோருக்கும் நேர்மையாகவும் உறுதியாகவும் இருக்கும் ஆளுமை பண்பு இல்லை. ஆளுமை குணங்கள் சிலருக்கு மட்டுமே இருக்கும். பிரச்சனைகள் எதிர்கொள்வதும் ஒரு வகையான ஆளுமை குணமே. சில நேரங்களில் விஷயங்கள் மோசமாகிவிட்டால், தவறுகளைப் பற்றி ஒருவரையொருவர் எதிர்கொள்வதே சிக்கலைத் தீர்க்க ஒரே வழி.
இருப்பினும், யாரையாவது எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் பயப்படுவார்கள். ஜோதிடம் என்பது ஒருவரின் ஆளுமையின் நுணுக்கங்களை பன்னிரெண்டு ராசிகளைக் கொண்டு நிர்ணயிப்பதன் மூலம் அவற்றைப் புரிந்துகொள்ள சிறந்த வழியாகும். எனவே, எந்த வகையிலும் மோதல்களைக் கையாள முடியாத ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
துலாம்
ஒரு சூழ்நிலையைப் பற்றி விவாதிக்கும்போது துலாம் ராசிக்காரர்களால் சரியாக தீர்மானிக்க முடியாது. பிரச்சனையான மோதலான சூழ்நிலையில் ஒருவர் பக்கபலமாக இருக்க வேண்டும். ஆனால் துலாம் ராசிக்காரர்கள் அவ்வாறு செய்யமால் மிகவும் இராஜதந்திரமாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லா வகையிலும் மோதல்களை வெறுக்கிறார்கள். இது அவர்களுக்கு மிகவும் சங்கடமாக மாறும்.
மீனம்
மக்கள் எதிர்கொள்ளும் அழுத்தத்தை மீன ராசிக்காரர்களால் கையாள முடியாது. இந்த ராசிக்காரர்கள் மக்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றால் அவர்கள் மூர்க்கத்தனமாக நடந்துகொள்வார்கள். அதனால்தான் அவர்கள் முற்றிலும் தேவையாக இருந்தாலுமே மோதல்கள் வேண்டாம் என்று நினைக்கிறார்கள். மோதல்கள் இல்லாமல் நன்றாக இருக்கலாம் என இந்த ராசிக்காரர்கள் நினைக்கிறார்கள்.
சிம்மம்
மோதல் அல்லது பிரச்சனை வரப்போகிறது என்பதை அறிந்ததும் சிம்ம ராசி நேயர்கள் கவலை அடைகிறார்கள். மீனத்தைப் போலவே, எதிர்பார்ப்பு அல்லது ஒருவருடன் சமாளிக்க வேண்டிய அழுத்தத்தை அவர்களால் கையாள முடியாது. ஆதலால், இந்த ராசிக்காரர்கள் எல்லா வகையிலும் மோதல்களைத் தவிர்ப்பார்கள். ஆனால் அவர்கள் மோதலுக்கு தயாரானவுடன், அவர்கள் நிச்சயமாக எழுந்து நின்று பேசுவார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் எந்த ஒரு நுட்பமான விஷயத்திலும் ஈடுபடும்போது விஷயங்கள் மோசமாகிவிடும். ஏனெனில், அவர்கள் மிகவும் உணர்திறன் உடையவர்கள். ஆனால் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் அவர்களால் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது. இந்த ராசிக்காரர்கள் பொது மோதல்களுக்கு செல்லமாட்டார்கள். அதேநேரம் தனிப்பட்ட முறையில் பிரச்சினை தீர்க்கப்படுவதற்கு உறுதியளிப்பார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களின் மனநிலை சமநிலையில் இல்லாத போது, அவர்கள் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வார்கள். அவர்கள் சூழ்ச்சியான வார்த்தைகள் மற்றும் செயல்களால் சூழ்நிலையை மாற்றலாம். மேலும், இந்த ராசிக்காரர்கள் மன அழுத்த சூழ்நிலைகளைச் சமாளிக்க வெறுக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் சுதந்திரமான மனப்பான்மை கொண்டவர்கள், வேடிக்கையை விரும்புகிறார்கள்.
சண்டைக்கு தயாராக உள்ள ராசிக்காரர்கள்
மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் சூழ்நிலைகள் பிரச்சனைகள் வந்தவுடன் சமாளிக்கத் தயாராக இருப்பார்கள். அவர்கள் அதிலிருந்து பின்வாங்க மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் அனைவரும் எப்போதும் சண்டைக்கு தயாராக இருப்பார்கள்.