Just In
- 4 hrs ago
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- 6 hrs ago
ஈரோடு சிக்கன் சிந்தாமணி
- 11 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 12 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
Don't Miss
- Sports
ரஞ்சி கோப்பையில் புதிய வரலாறு.. 41 முறை சாம்பியன் மும்பை தோல்வி.. 23 ஆண்டுகள் ம.பி அணியின் கனவு கதை
- News
அக்னி பாத் திட்டத்தை சும்மா ஒன்றும் எதிர்க்கவில்லை! இது தான் காரணம்! காங்கிரஸ் தந்த டீடெயில்!
- Finance
பணத்தை அச்சடிக்க 5000 கோடி செலவு செய்த ஆர்பிஐ.. பணமதிப்பிழப்புக்கு பின் இதுதான் அதிகம்..!
- Movies
‘தாய்க்கிழவி’..வில்லன் டயலாக்கை பாட்டாக்கி இப்படியா பண்ணுவது..தனுஷுக்கு கமல் கட்சி நிர்வாகி கண்டனம்
- Technology
ஆப்பிள் இலவசமாக AirPods வழங்கும் Back to School ஆஃபர்.. என்ன செய்தால் 'இது' இலவசமாக கிடைக்கும்?
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இந்த 5 ராசிக்காரங்கள எல்லோரும் ஈஸியா ஏமாத்திருவங்களாம்... முட்டாள்தனம் இவங்ககூடவே பிறந்ததாம்...!
இன்று நம் உலகில், புத்திசாலித்தனமாக மற்றும் தந்திரமாக இருப்பது மட்டுமே உங்களுக்கு உயிர்வாழ உதவும் சொத்துக்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், சிலர் மிகவும் தூய்மையானவர்கள். துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் எளிதில் ஏமாறுகிறார்கள் மற்றும் மற்றவர்கள் அவர்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அவர்கள் எளிதில் ஏமாற்றப்படலாம், இது அவர்களை முட்டாளாகவும், மனச்சோர்வடையவும் செய்யலாம். சில ராசிகளில் பிறந்தவர்கள் அப்படிப்பட்டவர்க்ளாக இருக்கிறார்கள், வாழ்க்கையில் அனைவருமே ஏதாவது ஒரு கட்டத்தில் ஏமாறலாம், ஆனால் அவர்கள் இந்த பட்டியலில் முதலிடம் வகிப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்கள் இப்படி எளிதில் ஏமாறுவார்கள் என்று பார்க்கலாம்.

கும்பம்
இந்த ராசிக்காரர்கள் ஏமாற்றும் பாதையில் எளிதில் ஏமாந்து விடுவார்கள். அவர்கள் அனைத்து கிசுகிசுக்களையும் எளிதில் நம்புவார்கள். அவர்கள் அதன் உண்மைத்தன்மையை கூட சோதனை செய்ய மாட்டார்கள், எனவே எதையும் ஆராய்வது கேள்விக்குரியது அல்ல. இப்படிப்பட்டவர்களை சாதகமாக்கிக் கொள்வது அல்லது ஏமாற்றுவது மிகவும் சுலபம், தீய மனம் கொண்டவர்கள் இவர்களை எளிதில் தங்கள் நன்மைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இரக்க குணம் கொண்ட இவர்கள் எளிதில் ஏமாறுவார்கள்.

விருச்சிகம்
இந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு மற்றவர்களிடம் இருக்கும் இமேஜை போலல்லாமல் மைண்ட் கேம்களை விளையாடுவதில் வியக்கத்தக்க வகையில் மந்தமானவர்கள். அவர்கள் எளிதில் மற்றவர்களிடம் ஏமாந்து விடுவார்கள். இவர்கள் பொதுவாக மக்களை நம்ப மாட்டார்கள், ஆனால் இவர்கள் நம்புபவர்கள், இவர்களை மிகவும் முட்டாளாக்குகிறார்கள். இது இவர்களின் முடிவுகளுக்கு இவர்களை வருந்தச் செய்கிறது, எனவே நம்பிக்கை பிரச்சினை உருவாகிறது. இவர்கள் ஏமாற்றப்படுவதற்கு மிகவும் பழகிவிட்டார்கள், அது இவர்களை ஒரு இருண்ட நபராக ஆக்குகிறது.

கடகம்
இவர்கள் நண்பர்களாக இருந்தாலும் சரி, எதிரிகளாக இருந்தாலும் சரி எளிதில் ஏமாந்து விடுவார்கள். இந்த உணர்திறன் மற்றும் மென்மையான இதயத்தை கொண்ட இவர்களை ஏமாற்றுவது மிகவும் எளிதானது. இவர்கள் ஊமைகள் அல்லது ஞானமற்றவர்கள் என்பதல்ல, இவர்கள் உங்களை நம்புவதற்கு திறந்த இதயம் இருப்பதால் தான் எளிதில் ஏமாறுகிறார்கள். இவர்கள் எப்போதும் தங்கள் கண்கள் வழியாகவே உலகைப் பார்க்கிறார்கள், உலகில் எல்லோரும் நல்லவர்கள் என்பதே இவர்கள் எண்ணம். இத்தகையவர்கள் நமக்கு அதிகம் தேவை, ஆனால் துரதிர்ஷ்டவசமாக உலகம் இவர்களை கண்டிப்பாக ஏமாற்றும்.

தனுசு
இந்த நபர்கள் உறவுகளில் ஆச்சரியமாக இருக்கிறார்கள், அதனால்தான் இவர்கள் பெரும்பாலும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இவர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் மிக எளிதாக ஏமாற்றப்படுகிறார்கள், பின்னர் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களைச் செய்கிறார்கள். இந்த ராசியின் பிரச்சினை என்னவென்றால், இவர்களால் தீய எண்ணம் கொண்டவர்களை அடையாளம் காண முடியாது, மேலும் இவர்கள் அவர்களுக்கு பல வாய்ப்புகளை வழங்குகிறார்கள். இவர்கள் எப்பொழுதும் ஏமாற்றப்பட்டவர்களாகவும் காட்டிக்கொடுக்கப்பட்டவர்களாகவும் உணருவதற்கு இது ஒரு முக்கிய காரணம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் எளிதில் அனைவருடனும் பழகக்கூடியவர்கள் மேலும் அனைவரும் நல்லவர்கள் என்று நம்பக்கூடியவர்கள். இவர்கள் அளவிற்கு அதிகமாகவே மற்றவர்கள் மீது இரக்கப்படுபவர்கள், இவர்களின் இரக்க குணம் மற்றவர்களுக்கான வாய்ப்பாகவே அமைகிறது. இவர்களால் பலனடைபவர்களை விட இவர்களை ஏமாற்றுபவர்களே இவர்களை சுற்றி அதிகம் இருப்பார்கள்.