Just In
- 33 min ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 1 hr ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- 1 hr ago கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- 2 hrs ago இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
Don't Miss
- Automobiles உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கவிட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வாழ்க்கையை எப்படி ஜெயிக்கணும்னு இந்த 6 ராசிக்காரங்ககிட்டதான் கத்துக்கணுமாம்...உங்க ராசி இதுல இருக்கா?
உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பது உங்களை வெற்றியின் பாதையில் கொண்டு செல்லும்.
மனரீதியாக பகுத்தறிவு மற்றும் வலிமையுடன் இருப்பது ஒரு அரிய குணமாகும். மனதளவில் வலிமையான ஒருவருக்கு ஒரு பகுப்பாய்வு மனம் தேவைப்படுகிறது, அது தடைகளை எதிர்கொண்டு அமைதியாகவும் தர்க்கரீதியாகவும் தடைகளை வெற்றிகொள்ள உதவும்.
உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பது உங்களை வெற்றியின் பாதையில் கொண்டு செல்லும். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் இந்த ஆளுமையைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அதன்படி எந்தெந்த ராசிக்காரர்கள் அற்புதமான மனவலிமையைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் எப்போதும் மிகவும் சக்திவாய்ந்த அடையாளமாகக் கருதப்படுகிறார். மன சக்தியைப் பொறுத்தவரை இவர்கள் நிலையான மற்றும் உறுதியானவர்கள். அவர்கள் தேவையான முடிவுகளை தெளிவாக எடுப்பார்கள், மேலும் அவர்களின் இலக்கிலிருந்து எளிதில் விலகிச் செல்ல மாட்டார்கள். தங்களை அமைதியாக வைத்திருப்பதிலும் அவர்கள் சிறந்தவர்கள். இவர்களை மனரீதியாக வீழ்த்துவதற்கு நிறைய முயற்சி தேவைப்படும்.
விருச்சிகம்
இவர்கள் எப்போதும் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவார்கள் மற்றும் அவர்களின் முடிவுகளில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். மற்றவர்களின் முகத்தைப் பார்த்தே அவர்களின் திறனை இவர்கள் மதிப்பீடு செய்து விடுவார்கள், எனவே சவால்களை எதிர்கொள்வது அவர்களுக்கு கடினமாக இருக்காது. அவர்களுடைய இந்த பண்பு அவர்களுக்கு கடினமான சூழ்நிலைகளில் ஒரு பிடிப்பை அளிக்கிறது. அவர்களின் வழிகளும் பழக்கங்களும் மற்றவர்களை பிரமிக்க வைக்கும்.
MOST READ: கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனாவது நாளில் இருந்து ஆபத்தான கட்டத்தில் நுழைகிறார்கள் தெரியுமா?
மிதுனம்
இவர்கள் தங்கள் இரட்டை ஆளுமையால் வெவ்வேறு கண்ணோட்டங்களின் மூலம் உலகைப் பார்க்கிறார்கள். அவர்களின் எண்ணங்கள் பகுத்தறிவுடன் சிந்திக்க அனுமதிக்கின்றன, இதனால், ஒவ்வொரு அனுபவத்திலும் அவர்கள் மனரீதியாக வலுவாக வளர்கிறார்கள். அவர்களின் மனத்திறன் மிகவும் வலிமையானது, இது அவர்களை சமூகத்தில் வலிமையானவர்களாக மாற்றுகிறது.
கடகம்
கடக ராசிக்காரர்கள் உணர்திறன் மற்றும் அதிக உணர்ச்சிவசப்படுபவராக இருக்கலாம், ஆனால் இது அவர்களுக்கு அதிக சிந்திக்கும் திறனை மட்டுமே சேர்க்கிறது. உணர்வுகள் ஒரு நபரை வலிமையாக்க முடியும் என்று அவர்கள் நம்புவதால் அவர்கள் தங்கள் உணர்வுகளைக் காட்ட பயப்படுவதில்லை. அவர்கள் கீழே விழ பயப்படுவதில்லை. எனவே அவர்களின் பகுப்பாய்வு திறன்கள் அத்தகைய வழிகளில் உருவாகின்றன, இது சூழ்நிலைகளை ஆரோக்கியமான முறையில் கையாள அவர்களுக்கு உதவுகிறது.
துலாம்
இவர்கள் தங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் சமநிலையையும் நல்லிணக்கத்தையும் பேணுகிறார்கள். இவர்கள் மனரீதியாக நிலையானவர்களாக இருக்க முடியும், இதனால் தங்களைச் சுற்றிலும் எல்லாவற்றையும் ஒழுங்காக வைக்க முடியும். அவர்கள் அணுகுமுறைகளில் எப்போதும் நியாயம் இருக்கும், அத்தகைய பண்பு தீவிர பொறுமையிலிருந்து வருகிறது. அவர்களிடம் நிறைய சமூக திறன்களும் உள்ளன, அவை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக இருக்க உதவுகின்றன.
MOST READ: ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா?
சிம்மம்
இவர்களை அறிந்தவர்களிடம் இவர்களுக்கென தனிப்புகழ் இருக்கும், ஆனால் அதற்கு காரணம் உள்ளது. விடாமுயற்சி என்று வரும்போது இவர்களின் மனவலிமை மற்றவர்களை விட அதிகமாக இருக்கும். அவர்கள் எப்போதும் மேலே இருக்க விரும்புகிறார்கள், எனவே சிறந்தவர்களாக இருக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள். அவர்கள் திமிர்பிடித்தவர்கள் என்று அழைக்கப்படலாம், ஆனால் அவமானங்களை அவர்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.