Just In
- 54 min ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 3 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 3 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 4 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வாழ்க்கையை எப்படி ஜெயிக்கணும்னு இந்த 6 ராசிக்காரங்ககிட்டதான் கத்துக்கணுமாம்...உங்க ராசி இதுல இருக்கா?
உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பது உங்களை வெற்றியின் பாதையில் கொண்டு செல்லும்.
மனரீதியாக பகுத்தறிவு மற்றும் வலிமையுடன் இருப்பது ஒரு அரிய குணமாகும். மனதளவில் வலிமையான ஒருவருக்கு ஒரு பகுப்பாய்வு மனம் தேவைப்படுகிறது, அது தடைகளை எதிர்கொண்டு அமைதியாகவும் தர்க்கரீதியாகவும் தடைகளை வெற்றிகொள்ள உதவும்.
உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பது உங்களை வெற்றியின் பாதையில் கொண்டு செல்லும். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் இந்த ஆளுமையைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அதன்படி எந்தெந்த ராசிக்காரர்கள் அற்புதமான மனவலிமையைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் எப்போதும் மிகவும் சக்திவாய்ந்த அடையாளமாகக் கருதப்படுகிறார். மன சக்தியைப் பொறுத்தவரை இவர்கள் நிலையான மற்றும் உறுதியானவர்கள். அவர்கள் தேவையான முடிவுகளை தெளிவாக எடுப்பார்கள், மேலும் அவர்களின் இலக்கிலிருந்து எளிதில் விலகிச் செல்ல மாட்டார்கள். தங்களை அமைதியாக வைத்திருப்பதிலும் அவர்கள் சிறந்தவர்கள். இவர்களை மனரீதியாக வீழ்த்துவதற்கு நிறைய முயற்சி தேவைப்படும்.
விருச்சிகம்
இவர்கள் எப்போதும் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவார்கள் மற்றும் அவர்களின் முடிவுகளில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். மற்றவர்களின் முகத்தைப் பார்த்தே அவர்களின் திறனை இவர்கள் மதிப்பீடு செய்து விடுவார்கள், எனவே சவால்களை எதிர்கொள்வது அவர்களுக்கு கடினமாக இருக்காது. அவர்களுடைய இந்த பண்பு அவர்களுக்கு கடினமான சூழ்நிலைகளில் ஒரு பிடிப்பை அளிக்கிறது. அவர்களின் வழிகளும் பழக்கங்களும் மற்றவர்களை பிரமிக்க வைக்கும்.
MOST READ: கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனாவது நாளில் இருந்து ஆபத்தான கட்டத்தில் நுழைகிறார்கள் தெரியுமா?
மிதுனம்
இவர்கள் தங்கள் இரட்டை ஆளுமையால் வெவ்வேறு கண்ணோட்டங்களின் மூலம் உலகைப் பார்க்கிறார்கள். அவர்களின் எண்ணங்கள் பகுத்தறிவுடன் சிந்திக்க அனுமதிக்கின்றன, இதனால், ஒவ்வொரு அனுபவத்திலும் அவர்கள் மனரீதியாக வலுவாக வளர்கிறார்கள். அவர்களின் மனத்திறன் மிகவும் வலிமையானது, இது அவர்களை சமூகத்தில் வலிமையானவர்களாக மாற்றுகிறது.
கடகம்
கடக ராசிக்காரர்கள் உணர்திறன் மற்றும் அதிக உணர்ச்சிவசப்படுபவராக இருக்கலாம், ஆனால் இது அவர்களுக்கு அதிக சிந்திக்கும் திறனை மட்டுமே சேர்க்கிறது. உணர்வுகள் ஒரு நபரை வலிமையாக்க முடியும் என்று அவர்கள் நம்புவதால் அவர்கள் தங்கள் உணர்வுகளைக் காட்ட பயப்படுவதில்லை. அவர்கள் கீழே விழ பயப்படுவதில்லை. எனவே அவர்களின் பகுப்பாய்வு திறன்கள் அத்தகைய வழிகளில் உருவாகின்றன, இது சூழ்நிலைகளை ஆரோக்கியமான முறையில் கையாள அவர்களுக்கு உதவுகிறது.
துலாம்
இவர்கள் தங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் சமநிலையையும் நல்லிணக்கத்தையும் பேணுகிறார்கள். இவர்கள் மனரீதியாக நிலையானவர்களாக இருக்க முடியும், இதனால் தங்களைச் சுற்றிலும் எல்லாவற்றையும் ஒழுங்காக வைக்க முடியும். அவர்கள் அணுகுமுறைகளில் எப்போதும் நியாயம் இருக்கும், அத்தகைய பண்பு தீவிர பொறுமையிலிருந்து வருகிறது. அவர்களிடம் நிறைய சமூக திறன்களும் உள்ளன, அவை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக இருக்க உதவுகின்றன.
MOST READ: ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா?
சிம்மம்
இவர்களை அறிந்தவர்களிடம் இவர்களுக்கென தனிப்புகழ் இருக்கும், ஆனால் அதற்கு காரணம் உள்ளது. விடாமுயற்சி என்று வரும்போது இவர்களின் மனவலிமை மற்றவர்களை விட அதிகமாக இருக்கும். அவர்கள் எப்போதும் மேலே இருக்க விரும்புகிறார்கள், எனவே சிறந்தவர்களாக இருக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள். அவர்கள் திமிர்பிடித்தவர்கள் என்று அழைக்கப்படலாம், ஆனால் அவமானங்களை அவர்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.