Just In
- 44 min ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 1 hr ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 1 hr ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- 2 hrs ago கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
Don't Miss
- Sports IPL 2024: ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான பவுலிங்.. ரிஷப் பண்ட் வைத்த ஆப்பு.. கதிகலங்கிய மோஹித்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த ராசில பிறந்தவங்கள வேலைய விட்டு சீக்கிரம் தூக்கிருவாங்களாம் ஏன் தெரியுமா?
ஒவ்வொருவருக்கும் தாங்கள் இருக்கும் வேலையில் ஒட்டிக்கொள்வது என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. சிலருக்கு இது மிகவும் சிரமமானதாக இருக்கும்
இந்தியா தற்போதிருக்கும் சூழ்நிலையில் வேலையில்லா திண்டாட்டம் என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஆட்சியாளர்கள் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு பதிலாக இருக்கும் வேலை வாய்ப்புகளையும் காலி செய்யும் செயல்பாடுகளில் தீவிரமாக இருக்கிறார்கள். இந்த ஆண்டு மேலும் வேலை வாய்ப்புகள் பறிபோகும் சூழ்நிலைகள் நிலவுவதாக பொருளாதார அறிஞர்கள் கூறுகிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் தாங்கள் இருக்கும் வேலையில் ஒட்டிக்கொள்வது என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. சிலருக்கு இது மிகவும் சிரமமானதாக இருக்கும், அவர்களால் ஒரு வேலையில் நீண்ட நாட்கள் இருக்க முடியாது, ஒன்று அவர்களாக வேலையை விட்டு செல்வார்கள் அல்லது நிர்வாகமே அவர்களை வேலையை விட்டு தூக்கிவிடும். இதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசியாக கூட இருக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வேலை போகும் அபாயம் இருந்து கொண்டே இருக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் முதிர்ச்சியற்றவர்களாகவும், பிடிவாதம் உள்ளவர்களாகவும் அறியப்படுகிறார்கள். வணிகம் என்று வரும்போது இவர்கள் உதவியாகவும் இருப்பார்கள், சிக்கலையும் ஏற்படுத்துவார்கள். இவர்கள் எப்போதும் ஒரு கூட்டத்தை வழிநடத்த விரும்புகிறார்கள், புதிய முயற்சிகளில் இறங்க எப்போதும் தயாராக இருப்பார்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளை கையாளுவதால் இவர்கள் உடனிருப்பவர்களை புண்படுத்துவார்கள் அதேசமயம் மேலதிகாரிகளின் கோரிக்கைகளையும் கவனிக்க மாட்டார்கள். ஒத்துழைப்பு மற்றும் பிடிவாதமான மனப்பான்மையால் இவர்கள் பணியிடத்தில் நச்சுக்களை பரப்புவார்கள். இவர்கள் அதீத ஆற்றல் மற்றும் ஒத்துழையாமைஇவர்கள் வேலையை விட்டு நீக்க முக்கியமான காரணமாக இருக்கிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை கட்டுப்படுத்துவது என்பது கடினமான ஒன்றாகும், இது இவர்களுடைய மேலதிகாரிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இவர்கள் எப்பொழுதும் அனைவருடைய கவனத்தின் மையப்புள்ளியாக இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள், எனவே எப்பொழுதும் முழுமையாக செயல்பட விரும்புவார்கள். தங்களின் வேலைகளை மற்றவர்களுக்கு கொடுப்பதுடன் அதற்கான பாராட்டை இவர்கள் பெற்றுக்கொள்வார்கள். இதனால் மற்ற பணியாளர்களுடன் இவர்கள் மோதலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது, மேலும் இதுவே இவர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவதற்கான காரணமாகவும் அமையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தனிநபர் ஆர்வம் மற்றும் உறுதி அதிகம் உள்ளவர்களாக அறியப்படுகிறார்கள். இவர்கள் தங்களை சுற்றி இருக்கும் அனைத்தையும் கட்டுப்படுத்த விரும்புவார்கள். குறைவான செயல்திறன் கொண்டவர்களை காட்டுமிராண்டித்தனமாக நடத்தக்கூடியவர்கள் இவர்கள். இது அவர்களை சுற்றி பல எதிர்மறை சூழ்நிலைகளை ஏற்படுத்தும். மேலும் இவர்களின் பழிவாங்கும் உணர்வு என்பது நம்ப முடியாதது ஆகும். இதன் காரணமாக, அவர்கள் மிகவும் விரும்பத்தகாத எதிரிகளை பணியிடங்களில் உருவாக்கிக் கொள்வார்கள். இவர்களுக்கு எதிராக ஏற்படும் கிளர்ச்சி காரணமாக இவர்கள் வேலையை விட்டு நீக்கப்பட வாய்ப்புள்ளது.
மீனம்
இந்த அடையாளத்தின் கீழ் பிறந்த நபர்கள் மிகவும் புதுமையானவர்கள். இந்த சிறப்பியல்பு பண்பின் காரணமாக, இவர்களால் கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள இயலாது, குறிப்பாக பணியில் இவர்கள் மிகவும் விளையாட்டாக இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். இவர்கள் முடிந்த அளவிற்கு எப்போதும் பொறுமையாக இருப்பார்கள், ஆனால் அதனை இழந்து விட்டால் இவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. எனவே இவர்களின் விளையாட்டுத்தனமே இவர்களின் வேலை போக காரணமாக மாறிவிடும்.
மிதுனம்
ஆர்வம், பதட்டம், நிச்சயமற்றத்தன்மை என பல குணங்கள் நிறைந்தவர்களாக இவர்கள் இருப்பார்கள். இவர்கள் பிறருடன் தொடர்பு கொள்வதில் வல்லவர்களாக இருந்த போதிலும், தங்களின் முதலாளிகளால் ஒதுக்கப்படுவதை இவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. ஏனெனில் இவர்கள் எப்போதும் குழுவின் தலைவராக இருப்பார்கள். இவர்களின் பொறுமையின்மை காரணமாக இவர்கள் ஒரு வேலையே இறுதிவரை வெற்றிகரமாக முடிக்க மாட்டார்கள், இதனால் இவர்கள் திறனற்றவர்களாக முதலாளிகளால் கருதப்படுவார்கள். எனவே இவர்கள் வேலையை விட்டு நீக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.