For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்த நாளில் எந்த கடவுளை எப்படி வணங்கினால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் தெரியுமா?

வெவ்வேறு கடவுள்களை வெவ்வேறு வடிவங்களில் வழிபடுவதை இந்துக்கள் நம்புகிறார்கள். தங்கள் தெய்வங்களை மகிழ்விப்பதற்காக, அவர்கள் பல சடங்குகளைச் செய்கிறார்கள், தங்கள் கடவுள்களுக்காகப் பிரசாதம் செய்கிறார்கள்.

|

இந்துக்களின் கடவுள்கள் பட்டியல் மிக நீளம். இதில், சிறு தெய்வங்கள், பெரு தெய்வங்கள் என இரண்டு வகைகளாக இருக்கின்றனர். சிறு தெய்வங்கள் என்பது கிராமத்து தெய்வங்களை குறிக்கிறது. பெரு தெய்வங்கள் என்பது இந்து கடவுள்களை குறிக்கிறது. வெவ்வேறு கடவுள்களை வெவ்வேறு வடிவங்களில் வழிபடுவதை இந்துக்கள் நம்புகிறார்கள். தங்கள் தெய்வங்களை மகிழ்விப்பதற்காக, அவர்கள் பல சடங்குகளைச் செய்கிறார்கள், தங்கள் கடவுள்களுக்காகப் பிரசாதம் செய்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு நாள் அனுசரிக்கப்படுகிறது. அதில், எந்த தினத்தில் எந்த கடவுளை வழங்க வேண்டும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

Worship hindu gods day wise

இந்து புராணங்களில் இதுபற்றி தெரிவித்துள்ளனர். வாரத்தின் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கடவுள்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அதன் சொந்த சடங்குகளும் கடவுளை வணங்குவதற்கும் அவர்களை மகிழ்விப்பதற்கும் வழிகள் உள்ளன. ஒரு வேளை, உங்களிடம் இவை குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என்றால், கவலைபட வேண்டாம். சடங்குகளுடன் ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கு எந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பதை இக்கட்டுரையில் தெரிவித்துள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை ஹிந்தியில் ரவிவார் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்து புராணங்களில், சூரியனுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. பூமியில் வாழ்க்கை, ஆரோக்கியம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை வழங்குவது சூரியன் என பக்தர்கள் நம்புகிறார்கள். மேலும், சூரிய பகவான் தனது பக்தர்களுக்கு நல்ல ஆரோக்கியம், நேர்மறை எண்ணம் மற்றும் தோல் நோய்களைக் குணப்படுத்துபவர் என்று கருதப்படுகிறார்.

MOST READ: உங்க பசி மற்றும் உடல் எடையை குறைக்க இந்த ஆரோக்கியமான திண்பண்டங்களை சாப்பிடுங்க போதும்...!

சடங்குகள்

சடங்குகள்

ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனை வணங்குவதற்கு முன், உங்கள் உடலையும் உங்களைச் சுற்றியுள்ள இடத்தையும் நீங்கள் முழுமையாக சுத்தம் செய்வதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும். உங்கள் வீட்டை சுத்தம் செய்தவுடன், நீங்கள் அதிகாலையில் குளித்துவிட்டு காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் போது நீர் பிரசாதம் வழங்க வேண்டும். இந்த நாளில், நீங்கள் ஒரு நோன்பைக் கடைப்பிடித்து சூரியனை வணங்கலாம். சடங்கின் ஒரு பகுதியாக, நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே சாப்பிட முடியும். அதுவும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு. நீங்கள் உட்கொள்ளும் உணவில் பூண்டு, வெங்காயம் மற்றும் உப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்

அதிர்ஷ்ட நிறம்

சிவப்பு நிறம் சூரிய பகவானுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது. எனவே, சூரியனை வணங்கும் போது நீங்கள் சிவப்பு ஆடைகளை அணியலாம். நீங்கள் சிவப்பு நிற பூக்களை சூரியனுக்கு வழங்கலாம்.

திங்கட்கிழமை

திங்கட்கிழமை

திங்கள் இந்தி மொழியில் சோம்வார் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாள் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சிவன் கோவிலுக்குச் சென்று கருவுறுதல் மற்றும் திருமண ஆனந்தத்தின் தெய்வமான அவரது மனைவி பார்வதியுடன் அவரை வணங்குகிறார்கள். சிவபெருமானும் பார்வதி தேவியும் சேர்ந்து பிரபஞ்சத்தின் படைப்பைக் குறிக்கின்றன. சிவனை அலங்கரிக்கும் சந்திரனுக்கு இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. தங்கள் தெய்வங்களை மகிழ்விப்பதற்காக, பக்தர்கள் பெரும்பாலும் திங்கட்கிழமை நோன்பு நோற்கிறார்கள். சிவன் தனது பக்தர்களுக்கு நித்திய அமைதி, நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிப்பார் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

MOST READ: இரவு தூங்குவதற்கு முன்னால் உங்க முகத்தை கழுவினால் என்ன அற்புதம் நடக்கும் தெரியுமா?

சடங்குகள்

சடங்குகள்

பக்தர்கள் சிவனை எளிதில் மகிழ்விக்க முடியும் என்று நம்புகிறார்கள். ஆகவே, அவர் பெரும்பாலும் போலேநாத் என்று அழைக்கப்படுகிறார். திங்களன்று சிவபெருமானை வணங்குவதற்காக, அதிகாலையில் குளித்துவிட்டு சுத்தமான வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுங்கள். சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள். 'ஓம் நம சிவாயே' என்று கோஷமிட்டபடி வணங்குங்கள்.

அதிர்ஷ்ட நிறம்

அதிர்ஷ்ட நிறம்

சிவபெருமான் வெள்ளை நிறத்தை விரும்புகிறார். எனவே, இந்த நாளில் நீங்கள் வெள்ளை நிற ஆடைகளை அணியலாம். ஆனால் அவர் கருப்பு நிறத்தை மிகவும் விரும்புவதில்லை என்று பக்தர்கள் நம்புவதால் நீங்கள் கருப்பு நிறத்தை அணிய வேண்டாம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

செவ்வாய்

செவ்வாய்

செவ்வாய் இந்தி மொழியில் மங்கல்வார் என்று குறிப்பிடப்படுகிறது. இந்நாள் அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளுக்கு மங்கல் கிரா (செவ்வாய் கிரகம்) பெயரிடப்பட்டது. இந்து புராணங்களில், அனுமன் பகவான் சிவனின் அவதாரமாக கருதப்படுகிறார். பகவான் ஹனுமான் ஒருவரின் வாழ்க்கையிலிருந்து தடைகளையும் அச்சங்களையும் நீக்குவதாக நம்புகிறார். பக்தர்கள் இந்த நாளில் அனுமனை வணங்குகிறார்கள். பெரும்பாலும் நோன்புகளையும் கடைபிடிக்கின்றனர்.

MOST READ: Holi Wishes in Tamil: ஹோலி கொண்டாட்டத்தை மேலும் குதூகலமாக்க இத பண்ணுங்க போதும்...!

சடங்குகள்

சடங்குகள்

நீங்கள் அதிகாலையில் குளிக்க வேண்டும் மற்றும் சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். நீங்கள் அனுமன் சாலிசா என்று கோஷமிடும்போது, சிவப்பு பூக்களை வழங்கி, தியா (விளக்கு) ஏற்றி வைத்து பகவானை வணங்க வேண்டும். அனுமன் பகவான் சிந்துக்குரியவர் என்பதால் நீங்கள் சிண்டூரை வழங்கலாம். இது தவிர, சிவப்பு மற்றும் ஆரஞ்சு பூக்களை வழங்கி வணங்குங்கள்.

அதிர்ஷ்ட நிறம்

அதிர்ஷ்ட நிறம்

சிவப்பு நிறம் ஹனுமனுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. எனவே, சிவப்பு நிறத்தை அணிந்து, சிவப்பு வண்ண பூக்கள் மற்றும் பழங்களை வழங்குவது உங்களுக்கு நன்மை பயக்கும்.

புதன்கிழமை

புதன்கிழமை

புதன்கிழமை இந்தி மொழியில் புத்வர் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் புத்தி, கற்றல் மற்றும் கலைகளின் கடவுளான கணேஷுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தனது பக்தர்களின் வாழ்க்கையிலிருந்து எதிர்மறை மற்றும் தடைகளை நிராகரிப்பவராகவும் அவர் கருதப்படுகிறார். புனிதப் பணியைத் தொடங்குவதற்கு முன்பு இந்துக்கள் பெரும்பாலும் விநாயகரை வணங்குகிறார்கள். முதற் கடவுளான விநாயகரை வணங்குவதோடு மட்டுமல்லாமல், கிருஷ்ணரின் அவதாரம் என்று நம்பப்படும் விட்டலையும் மக்கள் வணங்குகிறார்கள்.

MOST READ: Women's Day Wishes In Tamil: பெண்கள் தினத்தை கூடுதல் சிறப்பாக்கும் வித்தியாசமான வாழ்த்துக்கள்!

சடங்குகள்

சடங்குகள்

விநாயகரை வணங்கும்போது, பச்சை புல், மஞ்சள் மற்றும் வெள்ளை பூக்கள், வாழைப்பழம் மற்றும் இனிப்புகளை வழங்கி படைப்பதன் மூலம் அவரைப் பிரியப்படுத்தலாம். பிரசாதங்களை ஒரு சுத்தமான வாழை இலையில் வைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் 'ஓம் கணேஷய் நம' என்று கோஷமிடலாம். விநாயகருக்கு கொழுக்கட்டை செய்து வழங்குவதன் மூலமும் மகிழ்ச்சி அடைகிறார்.

அதிர்ஷ்ட நிறம்

அதிர்ஷ்ட நிறம்

விநாயகர் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தை விரும்புகிறார். எனவே, இந்த நாளில் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தை அணிவது பற்றி நீங்கள் சிந்திக்கலாம்.

வியாழக்கிழமை

வியாழக்கிழமை

காக்கும் கடவுள் என்று அழைக்கப்படுபவர் மாக விஷ்ணுவிற்கு உகந்த நாள் வியாழக்கிழமை. மக்கள் சாய் பாபாவை வணங்குகிறார்கள் மற்றும் சாய் கோயில்களில் பிரார்த்தனை செய்கிறார்கள். அதேபோன்று குரு பிருஹஸ்பதி வியாழனையும் இந்த நாளையும் ஆட்சி செய்கிறார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த நாளில் விஷ்ணுவை வழிபடுவது திருமண ஆனந்தத்தைத் தரும் என்றும் அவர்களது குடும்பத்தினரிடையே மோதல்களை நீக்கும் என்றும் நம்பப்படுகிறது.

MOST READ: கர்ப்ப காலத்தில் உங்களுக்கு ஏற்படும் மசக்கையை நீங்கள் இப்படி செய்து சரிசெய்து விடலாம்...!

சடங்குகள்

சடங்குகள்

விஷ்ணுவின் ஆசியை பெற, வாழை மரத்தின் கீழ் ஒரு தீபத்தை ஏற்றி அதன் தண்டு மீது கும்கம் தடவலாம். மேலும், தெய்வங்களுக்கு நெய், பால், மஞ்சள் பூக்கள் மற்றும் வெல்லம் ஆகியவற்றை படையலிடுங்கள். ஸ்ரீமத் பகவத் கீதையை ஓதுவது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும். நீங்கள் 'ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே' என்றும் கோஷமிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்

அதிர்ஷ்ட நிறம்

விஷ்ணு மற்றும் பிரஹஸ்பதி பெரும்பாலும் மஞ்சள் ஆடைகளை அணிந்திருப்பதால், நீங்கள் அதே அணியலாம். இந்த நாளில் ஒருவர் பல வண்ணங்களை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

வெள்ளி

வெள்ளி

வெள்ளிக்கிழமை நாள் பெரும்பாலும் சுக்ரவர் என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் இது சுக்ராவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது மகாலட்சாமி, துர்கா மற்றும் அன்னபூர்னேஸ்வரி தேவி ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த மூன்று தெய்வங்களும் இந்து புராணங்களில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த நாளில் ஒரு நோன்பைக் கடைப்பிடிப்பதும், மூன்று தெய்வங்களை வணங்குவதும் தங்கள் வாழ்க்கையில் செழிப்பு, செல்வம், நேர்மறை மற்றும் மனநிறைவைத் தரும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

MOST READ: எந்த வகை உணவு சாப்பிடுபவர்கள் உடலுறவில் சிறப்பாக செயல்படுவார்கள்... சைவமா? அசைவமா?

சடங்குகள்

சடங்குகள்

பக்தர்கள் அதிகாலையில் குளித்துவிட்டு, வெள்ளை பூக்கள் மற்றும் பிரசாதங்களை வழங்கி தெய்வங்களை வணங்க வேண்டும். இவர்களிடமிருந்து ஆசீர்வாதம் பெறுவதற்காக வெல்லம், சுண்டல், நெய் மற்றும் பால் பொருட்கள் (தயிர் தவிர) வழங்கலாம். உப்பு, பூண்டு, வெங்காயம் இல்லாமல் தயாரிக்கப்பட்ட உணவைத் தவிர வேறு எதையும் ஒருவர் சாப்பிடக்கூடாது. மேலும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகுதான் உணவை உட்கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்

அதிர்ஷ்ட நிறம்

இந்த நாளில் நீங்கள் வெள்ளை மற்றும் வெளிர் வண்ண வண்ண ஆடைகளை அணியலாம்.

சனிக்கிழமை

சனிக்கிழமை

சனிக்கிழமை சனி பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பகவான் சனி ஒருவன் அவன் / அவள் செயல்களைப் பொறுத்து வெகுமதி அளிக்கிறான் அல்லது தண்டிப்பான் என்று கூறப்படுகிறது. அவரை கர்மாவின் பிரசவம் என்று புரிந்து கொள்ளலாம். ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர்களால் இந்த நாள் பொதுவாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் சனியை வணங்குவது மகிழ்ச்சி, செல்வம் மற்றும் அமைதி வடிவத்தில் பகவான் சனியிடமிருந்து நல்ல அதிர்ஷ்டத்தையும் ஆசீர்வாதங்களையும் தரும் என்று கூறப்படுகிறது.

MOST READ: தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி உங்க உடல் எடையை எப்படி குறைக்கலாம் தெரியுமா?

சடங்குகள்

சடங்குகள்

பகவான் சனியைப் பிரியப்படுத்தவும், எந்தவிதமான தடைகளையும் தவிர்க்கவும் இந்த நாளில் அனுசரிக்கலாம். பகவான் சானியை வணங்க பீப்பல் மற்றும் ஷமி மரத்தின் கீழ் ஒரு தீபத்தை நீங்கள் ஏற்றி வைக்கலாம். மேலும், ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கவும், உதவி தேவைப்படுபவர்களுக்கு தன்னார்வத் தொண்டும் செய்யலாம். இந்த நாளில் நீங்கள் பஞ்சாமிருதம் மற்றும் பூக்களை சனிக்கு வழங்கலாம். இது தவிர நீங்கள் தெய்வத்தை வணங்கிய பிறகு சனி ஆரத்தி செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்

அதிர்ஷ்ட நிறங்கள்

சனி பகவான் கருப்பு நிறத்தை விரும்புகிறார். எனவே, இந்த நாளில் கருப்பு நிற ஆடை அணிவது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Worship hindu gods day wise

Here we are talking about the hindu gods to worship day wise.
Desktop Bottom Promotion