For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளவரசராக பிறந்திருந்தும் அனுமன் ஏன் ஒருபோதும் மன்னராக கருதப்படவில்லை தெரியுமா?

வானரர்களின் கடவுளாக கருதப்படும் அனுமனின் தந்தை கேசரி ஒரு மன்னராவார். இளவரசனாக பிறந்தும் அனுமன் ஏன் மன்னராக எவராலும் ஏற்றுக்கொள்ளப்படாவில்லை என்னும் கேள்வி பலரின் மனதிலும் இருக்கலாம்.

|

இராமாயணத்தில் மட்டுமின்றி இந்து மதத்திலேயே மிகவும் முக்கியமான ஒரு கடவுள் என்றால் அது அனுமன்தான். இராமபிரானின் அதிதீவிர பக்தரான ஆஞ்சநேயர் சிவபெருமானின் அவதாரமாகவும் கருதப்படுகிறார். இராமாயணப் போரில் ஆஞ்சனேயரின் பங்கு என்பது அளப்பரியது. அனுமனின் புகழ் எவ்வளவு பெரியதோ அதேபோல அவரை சுற்றியிருக்கும் மர்மங்களும் மிகவும் பெரியது.

why was hanuman not considered a king

வானரர்களின் கடவுளாக கருதப்படும் அனுமனின் தந்தை கேசரி ஒரு மன்னராவார். இளவரசனாக பிறந்தும் அனுமன் ஏன் மன்னராக எவராலும் ஏற்றுக்கொள்ளப்படாவில்லை என்னும் கேள்வி பலரின் மனதிலும் இருக்கலாம். இதற்கு பதில் அவரின் பிறப்புடன் தொடர்புடையதாகும். அனுமனை ஏன் யாரும் மன்னராக கருதவில்லை என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அனுமனின் பிறப்பு கதை

அனுமனின் பிறப்பு கதை

பூமியில் இராம அவதாரத்தில் தான் பிறப்பேன் என்று விஷ்ணுபகவான் கூறியபோது அவருக்கு உதவுவதற்காக தானும் பிறப்பேன் சிவபெருமான் கூறினார். தன் கணவரை விட்டு பிரியப் போவதை நினைத்து பார்வதி தேவி வருந்தினார். இதனை அறிந்த சிவபெருமான் தன்னுடைய ஒரு பகுதியைத்தான் பூமிக்கு அனுப்பப்போவதாக கூறினார். சிவபெருமான் பூமியில் தனது பலத்துடனும், துணிச்சலுடனும் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு பணிவான குரங்கின் வடிவத்தை எடுத்தார்.

ஏன் மன்னராகவில்லை?

ஏன் மன்னராகவில்லை?

பூமியில் இருந்த போது அஞ்சனையும், வானர அரசன் கேசரியும்தான் அனுமனின் பெற்றோராக இருந்தனர். உண்மையில் அவர் எந்த நாட்டிற்கும் மன்னராக இல்லை, மாறாக வானரங்களின் தலைவராக இருந்தார். இதனால்தான் அனுமனை யாரும் மன்னராக ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

பிற காரணங்கள்

பிற காரணங்கள்

அனுமனை ஒருபோதும் ராஜா என்று அழைக்காததற்கு இன்னொரு காரணம் என்னவென்றால், சிவன் குரங்கு வடிவம் எடுத்தபோது சாதி மற்றும் வர்க்கங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று எண்ணினார். குரங்கானது மனிதர்களுடன் நெருக்கமாக இருந்தாலும் அவர்களுக்குள் வர்க்க பிரச்சினைகள் இல்லை என்பதால்தான் சிவபெருமான் வானர உருவத்தை தேர்ந்தெடுத்தார்.

MOST READ: பண்டைய இந்தியாவில் பாலியல் தொழிலில் நடத்தப்பட்ட கொடுமைகள் என்ன தெரியுமா?

பேராசை இல்லை

பேராசை இல்லை

ஓரு மிருகத்திற்கு (குரங்கு) பேராசையும், ராஜாவாக இருக்கும் ஆசையும் இருக்க முடியாது என்பதால், அவனது பரம்பரை வேறுவிதமாகக் கூறினாலும், அவர் ஒருபோதும் ஒருவராக குறிப்பிடப்பட மாட்டார். இராமருக்காக தன்னை அர்ப்பணிப்பதற்காகவே அனுமன் பூமிக்கு அனுப்பப்பட்டார்.

பெயரின் அர்த்தம்

பெயரின் அர்த்தம்

அனுமன் என்பது ஹனு 'மற்றும்‘ மனிதன் 'என்ற சமஸ்கிருத வார்த்தைகளிலிருந்து உருவானது. ‘ஹனு' என்ற சொல்லுக்கு தாடை என்றும், ‘மனிதன்' என்றால் சிதைந்தவர் என்றும் பொருள். அவர் ஒரு முறை சூரியனை ஒரு பெரிய பழம் என்று நினைத்து சாப்பிட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்திரன் தனது வஜ்ராவைத் தடுக்க அவரைப் பயன்படுத்தினார், இதனால் அவரது தாடையை சிதைத்தார். இதனால் அவருக்கு அனுமன் என்ற பெயர் வந்தது.

அஞ்சனையின் கதை

அஞ்சனையின் கதை

அனுமனின் தாயாரான அஞ்சனை அழகில் சிறந்தவராக இருந்தாலும் அவரின் அழகு மீது கர்வம் கொண்டவராக இருந்தார். முனிவர் ஒருவரை அவர் கோபப்படுத்தியபோது, அஞ்சனை ஒருவரை காதலிக்கத் தொடங்கும்போது அவரின் முகம் மாறும் என்று சபித்தார். எனவே அவர் கேசரியை காதலிக்கத் தொடங்கியபோது அவரின் முகம் மாறியது. அதன்பின்தான் அவர் அனுமனை பெற்றெடுத்தார். அனுமனை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை மேற்கொண்டு பார்க்கலாம்.

MOST READ: இந்தியாவின் பெருமை என்று நீங்கள் நினைக்கும் இந்த விஷயங்கள் வெறும் கட்டுக்கதைகள்தானாம் தெரியுமா?

தீராத பசி

தீராத பசி

அனுமன் எப்பொழுதும் தீராத பசியுடன் இருப்பார். ஒருமுறை சீதை சமைத்து அனுமனுக்கு உணவு பரிமாற தொடங்கினார், ஆனால் அவர் எவ்வளவு பரிமாறியும் அனுமனின் பசி தீரவே இல்லை. அப்போது இராமர் அவருக்கு ஒரு துளசி இலையை பரிமாறும் படி கூறினார். அவர் கூறியது போலவே சீதையும் அனுமனுக்கு துளசி இலை ஒன்றை பரிமாறினார், அதனை உண்டபின் அனுமனின் பசி அடங்கியது.

சனிபகவானும், அனுமனும்

சனிபகவானும், அனுமனும்

சனிபகவான் கண்டு பயப்படும் ஒரே கடவுள் அனுமன்தான் என்று கூறப்படுகிறது, அதற்கு காரணம் ஒருமுறை சனிபகவானை இராவணனின் சிறையில் இருந்து அனுமன் காப்பாற்றினார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அனுமனின் பக்தர்களுக்கு தான் எந்த தீங்கும் ஏற்படுத்தமாட்டேன் என்று சனிபகவான் வாக்களித்தார்.

MOST READ: இந்த 3 ராசிக்காரங்களுக்கு 2020 துரதிர்ஷ்டம் நிறைந்த வருஷமா இருக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...!

குங்குமம்

குங்குமம்

அனுமன் குங்குமம் வைத்துக்கொண்டால் இராமரின் ஆயுள் அதிகரிக்கும் என்று சீதை கூறினார், அதனால் அனுமன் தன் உடல் முழுவதும் குங்குமத்தை பூசிக்கொண்டார். அவரின் பக்தியை மெச்சிய இராமர் செவ்வாய் கிழமையில் அனுமனுக்கு குங்குமத்தை வைத்து வழிபடுபவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றார் வரமளித்தார். பூமியில் மக்கள் இராமரை வழிபடும் வரை அனுமனுக்கு மரணம் என்பது இல்லை என்று கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Was Hanuman Not Considered A King?

Check out why was hanuman not considered a king
Story first published: Thursday, December 5, 2019, 17:40 [IST]
Desktop Bottom Promotion