For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முஸ்லிம்களின் புனித நகரமான மக்காவில் என்ன உள்ளது? முஸ்லிம் அல்லாதவர்கள் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை?

இஸ்லாமியர்களின் புனிதத்தலமான மக்காவை பொறுத்தவரை அங்கு முஸ்லீம் அல்லாதோர்க்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

|

இந்துக்களுக்கு காசி, கிறிஸ்துவர்களுக்கு வாடிகன் தேவாலயம் அதேபோல முஸ்லீம்களுக்கு மக்கா என ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒரு புனிதத்தலம் இருக்கிறது. இஸ்லாமியர்களின் புனிதத்தலமான மக்காவை பொறுத்தவரை அங்கு முஸ்லீம் அல்லாதோர்க்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? முஸ்லீம் அல்லாதவர்கள் மக்காவுக்குள் நுழையவோ அல்லது பயணிக்கவோ கூடாது.

 Why Are Non-Muslims Not Allowed In Mecca?

முஸ்லீமல்லாதவராக மக்காவிற்குள் நுழைய முயன்றால் அபராதம் அல்லது சவூதி அரேபியாவிலிருந்து திருப்பி அனுப்புவது போன்ற தண்டனைகள் வழங்கப்படலாம். இருப்பினும், மதீனாவில், முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்கள் இருவரும் அனுமதிக்கப்படுகிறார்கள். அல்-மஸ்ஜித் அல்-நபாவி அமைந்துள்ள நபாவி சதுக்கத்தில் முஸ்லிமல்லாதவர்கள் நுழைவது விதிவிலக்கு. இந்த நடைமுறைகள் ஏன் கடைபிடிக்கப்டுகிறது என்பதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மக்காவின் நடைமுறை

மக்காவின் நடைமுறை

மக்காவில் முஸ்லிமல்லாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை, ஏனெனில் இது ஒரு புனித சரணாலயம். ஒருவர் அங்கு நுழையவும், வழிபாடு செய்யவும் இருக்க சில தகுதிகள் இருக்க வேண்டும். இதைப் புரிந்து கொள்ளுங்கள்: கன்டோன்மென்ட் பகுதிகளில் அல்லது உயர் பாதுகாப்பு பகுதிகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்களா ?. அங்கு நுழைய உங்களுக்கு தகுந்த அனுமதி தேவை, இது மக்காவுக்கும் பொருந்தும். ஒரு நகரமாக மக்காவுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதையும் நினைவில் கொள்க. காபாவின் இருப்பு மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆன்மீகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க

ஆன்மீகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க

மக்கா மற்றும் மதீனா ஆகியவை இஸ்லாமிய பாரம்பரியத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள் ஆகும். இவை யாத்திரை மற்றும் பிரார்த்தனை மையங்களாக இருப்பதுடன், முஸ்லிம்கள் அன்றாட வாழ்க்கையின் கவனச்சிதறல்களிலிருந்து விடுவிக்கும் புனித இடங்களாக இது உள்ளது. இந்த புனித இடம் முஸ்லீம்களுக்கு அமைதி மற்றும் அடைக்கலம் வழங்கும் இடமாக இருக்கிறது. ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான முஸ்லீம் மக்கள் மக்காவிற்கு வருகின்றனர். இந்த புனித இடம் சுற்றுலாத் தளமாக இருந்தால் இது போக்குவரத்து நெரிசலை அதிகரிக்கும், இது பயணிகளின் யாத்திரை மற்றும் ஆன்மீகப் பாதையில் இருந்து திசைத்திருப்பை ஏற்படுத்தும்.

அனைவரும் மக்காவிற்குள் நுழையக்கூடிய காலம் இருந்ததா?

அனைவரும் மக்காவிற்குள் நுழையக்கூடிய காலம் இருந்ததா?

1229 முதல் 1923 வரை மக்கா ஒட்டோமான் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த மேற்கோள் 1564 இலிருந்து கிடைத்த ஒரு உரையிலிருந்து கிடைக்கிறது, அதில் அந்தக் காலங்களில் ஒரே கடவுளை நம்பாத மக்கள் மட்டுமே மக்காவுக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டதாகக் கூறுகிறது. ‘புனித நகரங்களுக்குச் சென்று ஒளிரும் கபாவை [மக்காவில்] சுற்றிவர விரும்பினால் எந்த முஸ்லிம்களும் கடவுளின் ஒற்றுமையை விசுவாசிப்பவர்களும் எந்த வகையிலும் தடையாக இருக்கக்கூடாது.

MOST READ:கள்ளக்காதலில் ஈடுபடுவதால் பெண்களுக்கு மனரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன தெரியுமா?

மக்காவும், தூய்மையும்

மக்காவும், தூய்மையும்

குர்ஆன் கூறுகிறது, " ஓ, நம்புபவர்களே! உண்மையில் விக்கிரகாராதனை அசுத்தமானது. ஆகவே, இந்த ஆண்டுக்குப் பிறகு அவர்கள் புனித மசூதியை அணுக வேண்டாம் ". பிற மதங்களில் உள்ள மசூதிகள் அல்லது புனித இடங்கள் மற்றும் தியானத்திற்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் பொதுவாக நுழைவதற்கான அடிப்படைத் தேவை தூய்மை ஆகும். ஜெபம் என்பது தியானத்தின் ஒரு வடிவம் மற்றும் தியானத்திற்கு தூய்மை தேவைப்படுகிறது. இந்த அடிப்படைக் கொள்கை ஒருவரை ஒரு மசூதிக்குள் 'சுத்தம் அல்லாதவரை' அனுமதிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை உந்துகிறது. அது ஒரு முஸ்லீம் அல்லது முஸ்லிம் அல்லாதவராக இருக்கலாம்.

முஸ்லிம்களுக்கே அனுமதி இல்லை

முஸ்லிம்களுக்கே அனுமதி இல்லை

சுத்தமாக இல்லாவிட்டால் முஸ்லிம்களுக்கு கூட மசூதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை சோதனை செய்ய அங்கு யாருக்கும் இருக்க மாட்டார்கள். புனித குர்ஆனின் புத்தகத்தைத் தொடுவதற்கோ அல்லது பிரார்த்தனை செய்வதற்கோ ஒரு குறிப்பிட்ட வழியைக் குறிப்பிடும் இஸ்லாத்தின் படி ஒவ்வொரு முஸ்லிமும் தூய்மை வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவார்கள் என்று நம்பப்படுகிறது. மற்ற மதத்தை சேர்ந்தவர்களுக்கு இஸ்லாத்தின் இந்த விதிமுறைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அவர்கள் மக்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.

முஸ்லீம் அல்லாதவர்கள் மக்காவுக்கு விஜயம் செய்தனர்

முஸ்லீம் அல்லாதவர்கள் மக்காவுக்கு விஜயம் செய்தனர்

ஸ்ரீ குரு நானக் போன்ற முஸ்லிமல்லாதவர்களின் கதைகள் கடந்த காலங்களில் மக்காவிற்கு காபா உட்பட வருகை தந்ததாக கூறுகிறது. முஸ்லீம் அல்லாத ஒருவர் மக்காவிற்கு வருகை தந்த சம்பவம் 1853-ல் நடந்தது. பிரிட்டிஷ் ஆய்வாளர் சர் ரிச்சர்ட் பர்ட்டன் மக்காவிற்கு வருகைப் புரிந்ததாக கூறப்படுகிறது. அல் மதீனா மற்றும் மக்காவிற்கு ஒரு யாத்திரைக்கான தனிப்பட்ட விவரிப்புகளை பார்வையிடவும் எழுதவும் பர்டன் ஒரு ஆப்கானிய முஸ்லீமாக மாறுவேடமிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

MOST READ:உலகத்தை பாதுகாக்கும் சக்திவாய்ந்த உளவு அமைப்புகள்... இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

 குரு சாஹிப்

குரு சாஹிப்

குரு சாஹிப் ஒரு புனித மனிதராக உடையணிந்து, இதன் பொருள் குதார் என்பதாகும். ஒரு ஜோடி மர செருப்பை அணிந்து முஸ்லீம் பின்னணியைச் சேர்ந்த அவரது தோழர் பாபா மர்தானாவுடன் மக்கா நகரில் ஊடுருவினார். "பின்னர் நீல நிற உடையை அணிந்து பாபா நானக் மக்கா சென்றார்.

 நாட்டுக் கட்டுப்பாடு

நாட்டுக் கட்டுப்பாடு

ஒரு நாடு என்ற வகையில் சவுதி அரேபியாவின் கொள்கையே முக்கிய காரணம். ஆண்டுதோறும் இரண்டு முக்கிய நிகழ்வுகள் உள்ளன - ஹஜ் மற்றும் ரம்ஜான், உலகெங்கிலும் இருந்து பெரும் முஸ்லீம் கூட்டத்தை மக்கா நகரத்திற்குள் நுழைகிறது. ஒவ்வொரு ஆண்டும் கூட்டம் பெருகும் என்பதும், இந்த இரண்டு நிகழ்விலும் பங்கேற்க வராத வழக்கமான சுற்றுலாப் பயணிகளைத் தவிர்த்து இரண்டு நிகழ்வுகளையும் நிர்வகிக்க சவுதி அரபு நிர்வாகம் நாட்டிலிருந்து பெரும்பான்மையான வளங்களைசெலவழிக்க வேண்டும் என்பதும் தெளிவாகிறது.

 முக்கிய நிகழ்வுகள்

முக்கிய நிகழ்வுகள்

ஒவ்வொரு ஆண்டும் முஸ்லீம் பார்வையாளர்களின் எண்ணிக்கைஅதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவை சவூதி அரேபிய நிர்வாகத்தால் கண்காணிப்பு செய்யப்படுகின்றன, இது நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது. நிகழ்வை இவ்வளவு நிர்வகித்த போதிலும் விபத்துக்கள் நடப்பது வழக்கமான கதைகளாக உள்ளன. இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளைத் தவிர, 'இனிய பருவத்தில்' முஸ்லிம்களின் தொடர்ச்சியான ஓட்டத்தை பராமரிக்கும் ஆண்டு முழுவதும் வருகைகள் உள்ளன. முஸ்லீம் கூட்டத்தின் அளவு மற்றும் பல காரணங்களுக்காக சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் மக்காவுக்கு வருவதைத் தடுக்க சவூதி நிர்வாகத்தை கட்டாயப்படுத்துகின்றன.

MOST READ:ஒரே நாளில் 1000 கைதிகளை கொன்ற சிறைச்சாலை... உலகின் ஆபத்தான சிறைச்சாலைகள் ஒரு பார்வை...!

முஸ்லீமின் அடையாளம் எப்படி சரிபார்க்கப்படுகிறது?

முஸ்லீமின் அடையாளம் எப்படி சரிபார்க்கப்படுகிறது?

சவூதி அரேபியாவில் உள்ள அனைத்து பெரியவர்களும் ஏதேனும் ஒரு வகையான அரசாங்க அடையாளத்தை வைத்திருக்கிறார்கள், அது அவர்களின் குடியிருப்பாளரின் அனுமதி, அவர்களின் தேசிய ஐடி அல்லது அவர்களின் பாஸ்போர்ட்டில் உள்ள விசா ஆகும். இந்த அடையாளங்கள் அனைத்தும் தாங்குபவர் முஸ்லீமா அல்லது முஸ்லிம் அல்லாதவரா என்பதைக் குறிக்கிறது. பொதுவாக சவூதியில் இருக்கும் அனைவரும் முஸ்லிம்களாக கருதப்படுகிறார்கள். மக்கா மற்றும் மதீனாவிற்கு செல்லும் நெடுஞ்சாலைகளில், சோதனைச் சாவடிகள் உள்ளன. சோதனைச் சாவடியில் உள்ள காவலர்களுக்கு அந்த வழியாகச் செல்வோர் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், அவர்கள் ஐடியைப் பார்க்கச் சொல்கிறார்கள். அது 'முஸ்லிம் அல்லாதவர்' என்று சொன்னால், அவர்கள் திரும்பி அனுப்பப்படுகிறார்கள்.

 மக்காவில் என்ன இருக்கிறது?

மக்காவில் என்ன இருக்கிறது?

ஹஜ் இஸ்லாத்தின் ஐந்தாவது தூண். மக்காவுக்குச் செல்வதற்கான வழிமுறைகள் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்நாளில் ஒரு முறையாவது அங்கு செல்ல வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் புனித யாத்திரையில் ஒன்றுபடுகையில் இனம், சாதி, பொருளாதார நிலை, தேசியம், மற்றும் பிரிவு போன்ற அனைத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைக்கும் ஒற்றுமை உணர்வை அதிகரிக்கிறது. மனிதர்கள் தங்கள் படைப்பாளருக்கு முன்பாக ஒன்றாக நிற்கும்போது அவர்களுக்கு இடையே எந்தவிதமான வித்தியாசங்களும் அனுமதிக்கப்படுவதில்லை.

MOST READ:மாபெரும் சோழ சாம்ராஜ்ஜியம் எப்படி அழிவை சந்தித்தது தெரியுமா? உங்களுக்கு தெரியாத வரலாறு...!

கபா கல் என்றால் என்ன?

கபா கல் என்றால் என்ன?

முஸ்லிம்களுக்கு புனிதமான இடம் மஸ்ஜித் அல் ஹராம் அல்லது பிரமாண்டமான மசூதி. இந்த பிரம்மாண்ட மசூதியின் உள்ளே கஅபா கல் உள்ளது. கஅபா என்பது ஒரு அறைக் கட்டடம், கருப்புக் கல்லால் மூடப்பட்டிருக்கும், இது உலகெங்கிலும் உள்ள ஏகத்துவ வழிபாட்டின் முதல் வீடு, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஒவ்வொரு நாளும் 5 முறை தொழுகை செய்கிறார்கள். முஸ்லிம்கள் கஅபாவை ஜெபிக்கவோ, வணங்கவோ இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது இஸ்லாமிய தொழுகையின் மையப் புள்ளியாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: islam god இஸ்லாம்
English summary

Why Are Non-Muslims Not Allowed In Mecca?

Read to know why are non-Muslims not allowed in Mecca?
Story first published: Thursday, January 9, 2020, 12:20 [IST]
Desktop Bottom Promotion