Just In
- 23 min ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 1 hr ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 1 hr ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 2 hrs ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
Don't Miss
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
உங்களின் இந்த செயல்கள் லட்சுமி தேவியை உங்கள் வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியேற்றி விருமாம் தெரியுமா?
இந்து மதத்தில் லட்சுமி தெய்வம் முதன்மையான தெய்வங்களில் ஒன்றாகும், அவர் செல்வத்தின் தெய்வம். சக்தியின் மற்றொரு அவதாரம், லட்சுமி தேவி மிகவும் நிலையற்ற தெய்வங்களில் ஒருவர் என்று நம்பப்படுகிறது.
இந்து மதத்தில் லட்சுமி தெய்வம் முதன்மையான தெய்வங்களில் ஒன்றாகும், அவர் செல்வத்தின் தெய்வம். சக்தியின் மற்றொரு அவதாரம், லட்சுமி தேவி மிகவும் நிலையற்ற தெய்வங்களில் ஒருவர் என்று நம்பப்படுகிறது. நீங்கள் லட்சுமி தேவியை மகிழ்விக்க வேண்டுமானால் சில விதிகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.
உங்களின் சில தவறுகள் அவரை அதிருப்தி அடையச் செய்யலாம், இதனால் உங்கள் வீட்டை விட்டு அவர் வெளியேறுவதால் நீங்கள் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்கக்கூடும். உங்களின் எந்தெந்த செயல்கள் லட்சுமி தேவியை கோபப்படுத்தும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அசுத்தமான ஆடைகளை அணிவது
வேதங்களில் கூறியுள்ளபடி, அசுத்தமான ஆடைகளை அணிவது அல்லது உங்களை அழுக்காக வைத்துக் கொள்வது, தினமும் குளிக்காமல் இருப்பது போன்ற செயல்கள் லட்சுமி தேவி விரும்பாததாகும், இதனால் அவர் உங்கள் வீட்டை விட்டு வெளியேறுவார். குளிக்க சிறந்த நேரம் சூரிய உதயத்திற்கு முன்னராகும். இந்த காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது, இந்த நேரத்தில் குளிப்பது லக்ஷ்மி தேவியை மட்டுமல்ல, அனைத்து கடவுள்களையும் மகிழ்விக்கிறது. இருப்பினும், இது முடியாவிட்டாலும், நீங்கள் தினமும் குளிப்பதை தவிர்க்கக்கூடாது.
வீட்டை அசுத்தமாக வைத்திருப்பது
அசுத்தம் லட்சுமி தேவிக்கு பிடிக்காத ஒன்றாகும். எனவே, உங்கள் வீட்டை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க மறக்காதீர்கள்.வீட்டைச் சுற்றி சிலந்தி வலை இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். அவற்றை அகற்றி, தொடர்ந்து சரிபார்க்கவும். சாஸ்திரங்களின்படி சுத்தம் செய்ய சிறந்த நேரம் சூரிய அஸ்தமனத்திற்கு முன். எனவே சூரியன் மறையும் முன் துப்புரவுப் பணியை முடிக்க முயற்சிக்க வேண்டும். ஒருவரின் உடலை சுத்தம் செய்த பிறகு முதலில் செய்ய வேண்டியது வீட்டை சுத்தம் செய்வது என்று நம்பப்படுகிறது.
MOST READ: முகம் சுளிக்க வைக்கும் பண்டைய உலகின் விசித்திரமான பாலியல் பழக்கங்கள்... ஷாக் ஆகாம படிங்க...!
பெண்களை அவமதிப்பது
பெண்கள் மதிக்கப்படும் இடத்தில் கடவுள் இருக்கிறார் என்று நமது புனித நூல்கள் குறிப்பிடுகின்றன. மேலும், வீட்டில் உள்ள பெண்கள் தேவியின் மற்றொரு வடிவம் என்று நம்பப்படுகிறது. எனவே, வீட்டில் உள்ள பெண்களை அவமதிப்பது தேவியை அதிருப்தி அடையச் செய்யலாம். புராண நம்பிக்கைகளின் படி, பெண்கள் பெரியவர்களின் கால்களைத் தொட அனுமதிக்கப்படுவதில்லை, ஏனெனில் அவர்கள்
தெய்வங்களுக்கு சமமானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
தாமதமாக எழுந்திருத்தல்
தாமதமாக எழுந்திருப்பது சோம்பேறித்தனத்தை குறிக்கிறது, இது தேவியின் கோபத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. நீங்கள் வேலைக்குச் சென்று சம்பாதிக்க விரும்பவில்லை என்பதை இது குறிக்கும், நிச்சயமாக, மக்கள் சம்பாதிக்க விரும்பாத வீட்டுக்கு தேவி வர விரும்ப மாட்டார் என்பதையும் இது குறிக்கிறது.
கோபம் மற்றும் சச்சரவுகள்
புத்திசாலிகள் சண்டையிலோவாக்குவாதத்திலோ ஈடுபட மாட்டார்கள். அவர்கள் கோபப்படுவதைத் தவிர்க்கிறார்கள், ஏனெனில் கோபம்தான் சண்டைகள் மற்றும் வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கிறது. இந்த விஷயங்களில் மக்கள் தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கக்கூடாது, மாறாக முன்னேற்றத்திற்கான புதிய யோசனைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். இது லட்சுமி தேவியை மிகவும் அதிருப்தி அடையச் செய்யும் என்று அறியப்படுகிறது. எனவே நாம் லட்சுமி தேவியை மகிழ்விக்க விரும்பினால் கோபம் மற்றும் சண்டைகளை தவிர்க்க வேண்டும்.
MOST READ: பெண்கள் மார்பகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த ஒரு பொருளை சாப்பிட்டால் போதுமாம்...!
தானம் அளிக்காமல் இருப்பது
இந்துக்களின் புனித நூல்களில், தானம் செய்வது மிகவும் நல்லொழுக்கமுள்ள கர்மங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மற்றவர்களுக்கு உதவுவது அனைத்து கடவுள்களையும் மகிழ்விக்கும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். உண்மையில், உங்கள் வருவாயை ஏழைகளுடன் பகிர்ந்து கொள்வது அனைத்து மதத்தின் போதனைகளிலும் சிறப்பிக்கப்படுகிறது. இந்து மதத்தில், ஒருவர் தானம் என்று எதையாவது விட்டால் அது அதிக செல்வத்தை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. அதை விட, இது கொடுப்பவருக்கு இரட்சிப்பை வழங்குவதாக நம்பப்படுகிறது.