Just In
- 35 min ago இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- 1 hr ago ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- 5 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 10 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
Don't Miss
- News கர்நாடகா: ஏப்.26-ல் முதல் கட்ட தேர்தல்- களத்தில் 247 வேட்பாளர்கள்! இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்
- Movies தனுஷை எனக்கு பிடிக்கவே பிடிக்காது.. அய்யய்யோ ரஜினி உறவினர் என்ன இப்படி சொல்லிட்டாரு
- Sports பவுலர்களை குறி வைத்து அடித்தேன்.. பதிரானாவிடம் எச்சரிக்கையாக இருந்தோம்.. ஸ்டாய்னிஸ் ஓபன் டாக்!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இன்னைக்கு நைட் வானத்துல தோன்றும் ப்ளூ மூனை தெளிவா எப்படி பாக்கணும் தெரியுமா?
இரட்டை நீல நிலவு என்று அழைக்கப்படும் இந்த பருவகால நிகழ்வு அசாதாரணமானது. இது ஒரு நூற்றாண்டில் மூன்று அல்லது ஐந்து முறை மட்டுமே நிகழ்கிறது.
கொரோனா வைரஸுடன் இந்த வருடம் மக்கள் அனைவரும் போராட்டிக்கொண்டியிருக்கையில், ஓர் அறிய நிகழ்வு நிகழப்போகிறது. ஆம், நாம் அனைவரும் வானில் ஒரு அறிய காட்சியை காண விருக்கிறோம். அதுதான் "ப்ளூ மூன்". இன்று இரவு, வானம் ஒரு அற்புதமான காட்சிக்கான இடமாக இருக்கும். ஒரு மாதத்தில் இரண்டு முழு நிலவுகளைப் பார்ப்பது மிகவும் அரிது.
வியத்தகு, மர்மமான மற்றும் திகில் கதைகளின் பின்னணியில் ஒரு முக்கிய அங்கமாக இருந்தபோது, பழங்காலத்தில் இருந்து நாட்டுப்புறக் கதைகளை கவர்ந்திழுப்பதில் ப்ளூ மூன் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாகும். அதைத் தொடர்ந்து, இன்று இரவு 8.19 மணி முதல் இரவு வானத்தில் ப்ளூ மூன் தெரியும். ஒரே மாதத்தில் இரண்டு முறை தோன்றும் பெளர்ணமி நிலவான புளூ மூன் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
புளூ மூன்
வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை முழு நிலவு பௌர்ணமியும், ஒருமுறை அமாவாசையும் தென்படும். ஆனால் மிகவும் அரிதாக ஒரே மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு தோன்றலாம். அப்படியாக இந்த அக்டோபரில் இரண்டு முழு நிலவுகள் காணப்படுகிறது. அவற்றில் இரண்டாவது சந்திரன் பொதுவாக ‘ப்ளூ மூன்' என்று அழைக்கப்படுகிறது. முதல் பெளர்ணமி நிகழ்வு அக்டோபர் 1 ஆம் தேதி நடந்தது. ப்ளூ மூன் என்றழைக்கப்படும் இரண்டாவது பெளர்ணமி இன்று (அக்டோபர் 31) இரவு 8.19 மணியளவில் வானத்தில் தெரியும்.
நிலவு சுற்றி வரும் காலம்
புளூ மூன்னிற்கும் சந்திரனின் நிறத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. புளூ மூன் என்பதால் இது நீல நிறத்தில் தெரிவதில்லை. மற்ற நாட்களை போலவே தெரியும். ஆனாலும், அறிவியல் ரீதியாக புளூ மூன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சந்திர நாட்காட்டியின் படி, நிலவு தன்னைத் தானே ஒருமுறை சுற்றுவதற்கு, 29.531 நாட்கள் அல்லது 29 நாட்கள், 12 மணி, 44 நிமிடம், 38 வினாடிகள் ஆகிறது.
இரண்டு அல்லது மூன்று மாதங்கள்
உலகம் முழுவதும், கிரிகோரியன் காலண்டர் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, மாதத்தின் நீளம் 28 முதல் 31 நாட்கள் ஆகும். எனவே முழு நிலவுகள் மாதத்திற்கு இரண்டு முறை ஏற்படலாம், ஆனால் அரிதாகவே. 1550 முதல் 2650 வரையிலான 1100 ஆண்டுகளில், 408 பருவகால நீல நிலவுகள் மற்றும் 456 மாதாந்திர நீல நிலவுகள் இருந்தன. அதாவது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏதோ ஒரு நீல நிலவு தோன்றும். பருவகால நீல நிலவுகள் மாதாந்திர நீல நிலவுகளை விட சற்று குறைவாகவே நிகழ்கின்றன.
இரட்டை நீல நிலவு
இரட்டை நீல நிலவு என்று அழைக்கப்படும் இந்த பருவகால நிகழ்வு அசாதாரணமானது. இது ஒரு நூற்றாண்டில் மூன்று அல்லது ஐந்து முறை மட்டுமே நிகழ்கிறது. 2018 ஆம் ஆண்டில், 'இரட்டை நீல நிலவு' நிகழ்வு தோன்றியது. அடுத்தது 19 ஆண்டுகளுக்குப் பிறகு 2037 இல் தோன்றும்.
புகைப்படம் எடுக்க முடியாது
ப்ளூ மூனை புகைப்படம் எடுப்பது அவ்வளவு சுலபமில்லை என்கிறார் வானியல் ஆராய்ச்சியாளர்கள். புளூ மூனை ஸ்மார்ட் போனில் புகைப்படம் எடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும். டெலிபோட்டோ உதவியுடன் எடுத்தால் நிலவை சற்று பெரிதாக காட்டும் என்றும் கூறப்படுகிறது.
தெளிவாக பார்க்க முடியும்
2001ம் ஆண்டு தென்பட்ட புளூ மூன் மத்திய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் மட்டுமே தெளிவாக காணமுடிந்தது. ஆனால் இன்று தோன்றுவதை அனைத்து இடங்களிலும் இருந்து தெளிவாக பார்க்க முடியும். ஆதலால் தான் இன்றைய புளூ மூன் சிறப்பம்சம் கொண்டதாக உள்ளது.
இந்தியாவில் ப்ளூ மூன் பார்ப்பது எப்படி?
குறைந்த மாசுபாட்டுடன் வானம் தெளிவாக இருந்தால், நீல நிலவு வானத்தில் தெளிவாகத் தெரியும். கவனிக்க வேண்டியது, இன்றிரவு (அக்டோபர் 31) இரவு 8:19 மணிக்கு உச்சத்தை எட்டும், இது பார்வையாளர்களுக்கு சிறந்த காட்சியைக் கொடுக்க வேண்டும். இந்த முறை நீல நிலவு செவ்வாய் கிரகத்திற்கு அருகில் தோன்றும் என்றும் நாசா குறிப்பிடுகிறது. இது ஹாலோவீன் இரவு என்பதால், வானம் தெளிவாக இருந்தால் பார்வையை ரசிக்க முடியும்.