Just In
- 1 hr ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 1 hr ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 2 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 2 hrs ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
Don't Miss
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இராமரை வனவாசத்திற்கு அனுப்பி வைத்த கைகேயிக்கு அவர் மகன் பரதன் கொடுத்த சாபம் என்ன தெரியுமா?
கம்பராமாயணத்தில் இல்லாத பல்வேறு புராணக்கதைகள்ளும், கிளைக்கதைகளும் வால்மீகி இராமாயணத்திலும், துளசிதாச இராமாயணத்திலும் உள்ளது. இந்த கிளைக்கதைகளையும், சம்பவங்களையும் பலரும் கவனித்திருக்க மாட்டார்கள்.
இந்தியாவின் மிகப்பெரும் இதிகாசமான இராமாயணம் இன்றும் இந்திய மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவராலும் மதிக்கப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இராமாயணத்தில் பல்வேறு பரிமாணங்கள் உள்ளது. நாம் அனைவரும் பெரும்பாலும் கம்பராமாயணத்தைதான் படித்திருப்போம், வெகுசிலர் வால்மீகி எழுதிய இராமாயணத்தை படித்திருப்பார்கள். மேலும் துளசிதாச இராமாயணமும் உள்ளது.
கம்பராமாயணத்தில் இல்லாத பல்வேறு புராணக்கதைகள்ளும், கிளைக்கதைகளும் வால்மீகி இராமாயணத்திலும், துளசிதாச இராமாயணத்திலும் உள்ளது. இந்த கிளைக்கதைகளையும், சம்பவங்களையும் பலரும் கவனித்திருக்க மாட்டார்கள். அப்படி நாம் கவனிக்காத ஒன்றுதான் இராமர் வனவாசம் சென்ற அந்த 14 ஆண்டுகள் அயோத்தியில் என்ன நடந்தது என்பதுதான். இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.
அயோத்தியின் கதைகள்
இராமர் அயோத்தியை விட்டுச்சென்ற போது தசரதரின் மரணம் மற்றும் ஊர்மிளை 14 ஆண்டுகள் நித்திரைக்கு சென்றது மட்டுமே நாம் அறிந்ததாகும். ஆனால் இராமர், சீதை மற்றும் இலட்சுமணன் இல்லாத நிலையில் அயோத்தியில் என்ன நடந்தது என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பரதன்-கைகேயி-மந்திரை
இராமர் வனவாசம் சென்ற போது பரதனும், சத்ருக்கனனும் அவர்களின் தாய்வழி உறவினர் இடத்தில் இருந்தனர். கைகேயி இராமரை வனவாசம் செல்ல கட்டாயப்படுத்தியது அறிந்து அவர்கள் உடனடியாக அயோத்திக்கு புறப்பட்டனர். தனது தாய் என்றும் பார்க்காமல் பரதன் கைகேயியை தாக்க முயன்றான். அவனை தடுத்த மந்திரை அவனின் நல்லதுக்காகத்தான் கைகேயி அப்படி செய்தார் என்று கூறியவுடன் பரதனின் ஆத்திரம் மந்திரி பக்கம் திரும்பியது.
பரதன் மந்திரையை தாக்கினான்
மந்திரையை நோக்கி ஆவேசமாக சென்ற பரதனை சத்ருக்கனன் தடுத்தார். பெண்ணைக் கொல்லும் பெரும்பாவத்தில் இருந்து பரதன் சத்ருக்கனனால் தடுக்கப்பட்டார். அதற்கு பின் பரதன் கைகேயியை நிராகரித்தான். மந்திரைக்கும், கைகேயிக்கும் சொர்க்கத்திலும், தனது இதயத்திலும் இடம் இல்லாமல் போகட்டும் என்று சாபம் கொடுத்தார். அதற்குப்பின் தனது தாயாக சுமித்ரையையும், கோசாலையையும் மட்டுமே நினைக்க தொடங்கினார்.
MOST READ: மனைவிய சந்தோஷமா வைச்சுக்கறது இவ்வளவு ஈஸியா? இது தெரியாம போச்சே...!
தசரதரின் இறுதி சடங்கு
தசரதரின் மரணத்தைத் தொடர்ந்து அவரது குடும்பம் அயோத்தியில் அவரது இறுதி சடங்குகளை செய்ய முடிவு செய்தார்கள். ஆனால் குரு வசிஷ்டர் அரச குடும்பத்தினரும், ஊர்மிளையும் சித்திரகோட்டிற்கு சென்று இராமரிடம் தசரதரின் மரணத்தைப் பற்றி கூற சொன்னார். நான்கு மகன்களும் ஒன்றாக சேர்ந்து தசரதரின் இறுதி சடங்கை நடத்தும்படி கூறினார்.
பரதனின் முடிவு
இராமரை அயோத்திக்கு அழைத்து வர நினைத்து சென்ற பரதன் தோல்வியுடன் அயோத்திக்கு திரும்பி, இராமரின் காலணியை அயோத்தியின் அரியாசானத்தில் வைத்து ராஜ்ஜிய பணிகளை கவனித்தார். மேலும் அரண்மனையின் ஆடம்பரங்களை தவிர்த்து குடிசையில் குடியேறினார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி மாண்டவியும் அவருடன் குடிசையில் வாழத் தொடங்கினார்.
நந்திகிராமிற்கு புறப்படுதல்
ராமர் தூங்கிய பூமியின் மட்டத்திலிருந்து 1 அடி கீழே பாரத் தனது சொந்த படுக்கையைத் தோண்டியபோது, தனது கணவருக்கு மரியாதை செலுத்துவதற்காக மண்டவி தனது படுக்கையை கணவரின் படுக்கைக்கு 2 அடி கீழே அமைத்துக் கொண்டார். அவர் அரண்மனையை விட்டு விலகி நந்திகிராமில் குடிசை அமைத்து வசிக்கத் தொடங்கினார். அங்கிருந்தே அயோத்தியின் இராஜபணிகளை செய்து வந்தார்.
சத்ருக்கனன் - ஸ்ருதகீர்த்தி
அரண்மனையில் தனது சகோதரர்கள் யாரும் இல்லாததால், சத்ருகன் தனது மனைவியுடன் தங்கி தனது அம்மாக்களையும், நிர்வாகத்தையும் கவனிக்க முடிவெடுத்தார். இராமர்-சீதை, இலட்சுமணன்-உர்மிளா, அல்லது பாரத்-மண்டவி அல்ல, சத்ருக்கனனும் அவரது மனைவி ஸ்ருதகீர்த்தியுமே அயோத்திக்கு அரச பொறுப்பாளர்களாக 14 ஆண்டுகள் வாழ்ந்தனர்.
MOST READ: உங்கள் தொப்புள் வடிவத்தில் ஒளிந்திருக்கும் உங்களைப் பற்றிய ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?
கோசலை - சுமித்திரை
தங்கள் மகன்கள் அரண்மணையை விட்டு வெளியேறியதும் கோசலையும், சுமித்ரையும் மரணப்படுக்கையில் இருந்த தங்கள் கணவர் தசரதனை கவனித்துக் கொண்டனர். தசரதரின் மரணத்திற்கு பிறகு இராமரை சமாதானம் செய்து அழைத்து வரும்படி பரதனை அனுப்பினர். ஆனால் இராமர் அதற்கு மறுக்கவே அரண்மனை ஆடம்பரங்களை தவிர்த்து 14 ஆண்டுகள் நித்திரையில் வீழ்ந்த தங்கள் மருமகள் ஊர்மிளையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.